Friday, November 9, 2012

நீங்களும் கோடீஸ்வரன் ஆகலாம்


பணம் பண்ணுங்கள் நீங்கள் செல்வந்தர் ஆகலாம்உங்கள்வாழ்க்கைக்கண்ணோட்டத்தையே மாற்றிவிடும் நடையிலும்,பேச்சிலும்,செயலிலும் பெரியசாதனையாளரைப்போல்நடந்துகொள்ளுங்கள்.உன்னிடத்தில் ஏற்பட்டுள்ள இந்தக் குறிப்பிட்ட மாறுதலை எல்லோரும் உடனே கவனிப்பார்கள்
சிந்தியுங்கள்-நீங்கள் ஒரு பணக்காரன் என்று.
தீவிரமாக செயல்படுங்கள்-வருடத்தில் 1கோடி முதல் 40கோடி வரை,நான் சம்பாதிப்பவன் என்று அல்ல,செலவு செய்பவன் என்று.
     நானும் ஒரு முதலீட்டாளர் என்று,உங்களை நீங்கள்மிகைப்படுத்திக் கொள்ளுங்கள்.அப்போதுதான் உங்கள்முதல் இரட்டிப்பு முதலாக முடியும்
     எல்லா உணர்வு நிலைகளுக்கு அப்பாலும் பேசச்செய்யும் சக்தி செயல் சக்தியாகும்.எல்லாம் உன்னுடையதே!உன்னுடனே பிறந்து உன்னுடன் வாழப்பிறந்தது.அதுமட்டும்அல்லாமல் நீ ஒரு கலங்கரைவிளக்கம் என்பதை நீ உணர்வாய்
     இறைவனிடம் கேட்காதே!உன்னிடம்இருப்பதை இறைவனிடம்கேட்காதே!அது பணத்தை தவிர வேறு ஒன்றும் இல்லை
     சராசரியான மனிதனை எடுத்துகொள். அவன் உழைக்கின்றான்.வேர்வை சிந்துகின்றான்.தினம் கூலி கிடைக்கின்றது.அவனுக்குபற்றாக்குறைஎன்பதுதெரிவதில்லைஏன்?அவன்இறைவனிடம்கேட்பதுமில்லை.
அவன் தினக்கூலி.வறுமையில்லை.சுகம் மட்டும்
தான் அவனுக்கு மிஞ்சுகிறது. அவன் எப்போதும் சிரித்துக்கொண்டுயிருக்கிறான்.சேமிப்பதுஇல்லை.
அவன் திறமைஉழைப்பது மட்டுமே.சாகும் நேரத்தில் கூட அவனுக்கு சோகம்வருவதில்லை.அதன் பெயர் நிம்மதி,ஏனென்றால்அவன்சேர்த்துவைக்கவில்லை.
அதற்கான எண்ணம் இல்லை.செயல்படத் தெரிய
வில்லை.அவனை செதுக்க யாருமில்லை.அவனை யாரும் செதுக்கவில்லை-பணத்துக்காக.  
     நீ ஒரு சாதனையாளராகவரவேண்டும்என்பதை முத்திரைகுத்திக்கொள்.உன்மனம்எனும்யாத்திரை
பயணித்துக் கொள்ளும்-பணத்துக்காக.
       மனிதன் மனம்ஒருபட்டாம்பூச்சிபோல-பணம் எங்கே? என்றுதேடிக்கொண்டேயிருக்கும்.எல்லா மலரிடமும்தேன்உண்டு,வாசனையும்உண்டு,மகரந்தசேர்க்கையும்உண்டு.அவனும்அப்படித்தான்,மலர்தாவும் வண்ணத்துபூச்சியாய்அல்ல.பணம்தேடும்பூச்சியாய்.
இதிலும் மகரந்தசேர்க்கை உண்டு.ஒன்றில் சேமித்த பணத்தை மற்றொன்றில் முதலீடுசெய்வது.எப்போதும் சிந்திக்கும் வாசனை உண்டு.தேன் உண்டு[சேகரித்தல்]
சேமிப்பு உண்டு.ஒன்றை மட்டும் குறிக்கோளாக கொண்டுபயணிப்பது இல்லை பணம்.சிறகடித்து பயணிக்கிறது-துளித்துளியாய்,பெருவெள்ளத்தைப்
போல்.நீ ஒரு சிறந்த கோட்டீஸ்வரனாக திகழ்வாய்,
என்பது தான் இதன் பாடம்.
     பயணம் பண்ணக்கற்றுக் கொள்.அங்கே பணம் எனும் பொக்கிஷம்இருப்பதை அறிந்துகொள்.நீயே பணம் பண்ணும் மனிதன் என்றுஉணர்ந்து கொள்
     அறிவும் செல்வமும் கலந்தகலவைநான்.எங்கே பணம்?எங்கேபணம்?என்றுஓடுகிறேன்.எங்கே
போனாலும் பணம் கிடைக்கவில்லைஅறிவு கிடைக்கிறது.ஆனால் பசி போகவில்லை.விலைபோக நினைத்தேன்.விலைகொடுத்துவாங்கஆளில்லை.எங்கோபோகிறேன்-ஒருவேளைபசிக்காக,ஓடுகிறேன்
.தண்ணீர்மட்டும்தான்மிச்சம்.பணப்பசிபோகவில்லை
தாகமும்அடங்கவில்லை.வயிற்றுப்பசி மட்டும் தான் மிச்சம்.
   நான்என்னைவிற்கிறேன்.கொள்வார்எங்கே?.படிப்பு,
அறிவுஇல்லாதமனிதனிடம்உழைப்புஇருக்கிறது.படித்தவனிடம் உழைப்பு இல்லை.உழைப்பவனிடம் வறுமையிருக்கிறது.எல்லாம் தெரிந்த எனக்கு பசிப்
போகவில்லை.இதன் பெயர்தான் வறுமை.வறுமை தந்த பாடம் தான்உனக்கு கற்றுத்தருகிறேன்-பணம் பண்ணுவது எப்படி? என்று.
      அறிவும் செல்வமும் எங்கே?அவையாவும் நமக்குள் இருக்கும்சொர்க்கங்கள்.அறிவின் சொர்க்கம் உழைப்பு.உழைப்பின் வியர்வைபணம்.எல்லாம் உன்னிடம் இருப்பதை வெளியில் தேடாதே!அது
உன் மூளை தான் அதை விற்று காசு ஆக்கு.நீ ஒரு பெரிய பணக்காரன்ஆகவேண்டுமா?மூளை எனும் மந்திரச்சாவி மூலம் திறந்து எடுத்துகொள்.
அது தான் ஆல்ஃபா மைண்ட் எனர்ஜி.அதனுடன் பேசு.தட்டுங்கள் திறக்கப்படும்என்றுசொல்லும்.நம்மால் எல்லாம் முடியும் என்று சொல்லும்.ஆனால்
யாமிருக்க பயம் ஏன்? என்று சொல்லுவது பணமே!!
     உன்னை உயர்த்த ஒருவழி இதுவரை நடந்ததை மறப்பதுதான்.உன்னுடைய எண்ணத்தை மாற்று. நான் பிறக்கும் போதே,பல கோடிகளுக்கு அதிபதி-பல நிறுவனங்களுக்குஅதிபதிஎன்றுஎப்போதும் நினைவில் கொள்.நான் செவ்வாய் கிரகத்தை வாங்கி
விட்டேன் என்று உலகத்தார்க்கு சொல்-அது உன்னை பார்க்கும்மனிதசமூதாயத்திற்குசவால்விடும்சக்தியாகமாறும்.அடுத்துஉன்னுடைய திட்டம் இந்த பூமியை வாங்குவதும் விற்பதும் தான்வாங்கும்பொழுது பணம் தேவை.அது உன்னிடம் இருக்கிறதுஎன்பதுதான் புத்திசாலித்தனம்.விற்பது என்பது கடினமான வேலை
அல்ல.இதுஒருமுகம்பார்க்கும்கண்ணாடிபோல்.
மீண்டும் மீண்டும்கவனி.தானாக விற்றுவிடும்.
     உன்மூளை சொல்லும் ரகசியம்,நீ உற்பத்தி தொழிற்சாலைஎன்றுஎப்போதும்மனதில்வைத்துக்
கொள்.நீ சாகசவீரன் என்று அற்புதத்தின் படைப்பாளி என்று.முடிவும்,செயலும்,முயற்சியும்,உன் வலது பக்க
மூளையின் செயல்பாடு அதை கவனி.அதனுடன் போட்டிபோடாதே.தவறுஎன்பதைஅதுசொல்லாது.இரவு நேரம் சிந்தனை துளியைதட்டிவிடு.அது உன்னை உருவாக்கும்.விடிந்ததும் இரவில் உன்னைஒரே நாளில்பணக்காரன்ஆக்கியவிதத்தை[வித்தையை]
சொல்லும்அதை கவனி அதுதான் வலதுமூளையின் செயல்பாட்டின் உயர்வு நிலை.உன் உற்சாகம் உன்மூளையே.நீ ஏழை இல்லை என்பதை உணர்.
உன்னை வரவேற்க புது உலகம்பிறந்திருக்கிறது.அதன் பெயர் பணம்.பண உலகத்தின் படைப்பாளி நீஎன்பதை ஆணித்தரமாக நேசி.
     மூளை எனும் காப்பகம் பணமே!அது நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பணத்தை தந்து கொண்டிருக்கும்.நீ ஒரு முதலீட்டாளன் என்பதை மறந்துவிடாதே.மறந்தால் உன்னை விட்டு பணம் மறைந்துவிடும்.அவன் பெயர் தான் ஏழை.
     ஏழை,பணக்காரன் என்று எல்லாம் மூளைக்கு இல்லை.அவன்பால் எப்போதும் அன்புடன் நடந்து கொண்டால்நீவேண்டுவதுஎல்லாம்தந்துவிடும்[மூளை].பிறகு ஏன்?பணத்தை மட்டும் தரவில்லை.காரணம்,நீ அன்புடன் நடக்காதது தான்.அன்பு என்றால் என்ன?
கவனி என்பது பொருள்.அன்பு என்பது சிந்தனை, நீ கவனித்தால்அது சிந்திக்கும்,சிந்தித்தால் பணம் வரும்.பணம் வளரும் என்பதுஎல்லோருக்கும் தெரியாது.
     மூளை ஒரு வைரக்கல்.அது எப்போதும் ஜொலித்து கொண்டேஇருக்கும்.அதை மனக்கவலை எனும்பூட்டுபோடாதே.அதுதொலைந்துவிடும்.அப்போது உன்கனவு,நினைவுஎல்லாம்மாறிவிடும்.எதிர்
மறையானஎண்ணங்கள் வேண்டாம்,நேர்மறையான எண்ணங்களோடு இரு.
     உன் ஞாபகம் பணம் எனும் குறிக்கோளுடன் ஒன்றியிருக்கட்டும்அப்போதுதான் கவனச்சிதறல் இருக்காது.இது ஒரு தனி மனித ராஜ்ஜியம்அதற்கு தேவைப்படுவது நினைவு எனும் மனதுதான்.உன் வலது மூளையில்வெளியாகும்செயல்பாடுபணமாகும்.

                  

Friday, April 1, 2011

ஆதிசங்கரர்

 இந்து சமயம் என்ற பெயரில் நாம் அனுசரித்து  வரும் சமயம் எப்போது தோன்றியது என்பது யாருக்கும் தெரியாது. இந்து சமயத்திற்கு ஆதாரமாக விளங்குபவை நான்கு வேதங்கள்.     வேதங்களின் அடிப்படையில் பல சாஸ்திரங்கள் ஏற்பட்டன.அவற்றையெல்லாம் பதினெட்டு வித்யா ஸ்தானங்கள் என்று கூறுவார்கள்.   

    இவை தவிர மேலும் சில சாஸ்திரங்கள் இருந்தன. இவைதாம் தந்திரங்களும் ஆகமங்களும்.

        வேதசாஸ்திரங்களின் அடிப்படையில் அமைந்த சமயத்தை வைதீக சமயம் என்றும் சனாதனதர்மம் என்றும் கூறுவார்கள். பல ஞானிகள், ரிஷிகள், சித்தர்கள், அறிஞர்கள் முதலியவர்களின் கூட்டு முயற்சியால் பல நூற்றாண்டுகளில் அது வளர்ச்சியுற்றது.     அவ்வப்போது புத்துணர்ச்சி ஊட்டப் பெற்றும், புத்துயிர் பெற்றும், மாற்றப்பட்டும், சீரமைக்கப்பட்டும் வந்ததுதான் இன்று நாம் காணும் இந்து சமயம். 


ஆதிசங்கரர்
    
    இந்து சமயத்தைச் சீரமைப்புச் செய்தவர்களில் முதன்மையானவர் ஆதிசங்கரர்.
    
    அவருடைய காலத்திற்குச் சற்றுமுன் வைதீக சமயம் அழிந்துபோகும் நிலையை எய்தியது. புறச்சமயங்களின் தாக்குதல் இருந்தது. இந்தியாவ்¢ல் வழங்கிய சமயங்களில் எழுபத்திரண்டு வகையான உட்பிரிவுகள் இருந்தன. அவற்றில் பெரும்பான்மையான பிரிவுகள் இந்து சமயத்திற்கு ஊறு விளைவிப்பவையாக விளங்கின.

        அந்தந்தப் பிரிவுகளின் தலைவர்களை ஆதிசங்கரர் விவாதத்திற்கு அழைத்து அவர்களை வென்றார். சமுதாயத்திற்குப் புறம்பாகத் திகழ்ந்த பல பிரிவுகளை முற்றிலுமாக அழித்தார். 
    வேறு பல பிரிவுகளிலிருந்த நல்ல அம்சங்களை எடுத்துக்கொண்டார்.

    வேதங்களின் அடிப்படையில் ஆறுமுக்கியமான இந்து சமய உட்பிரிவுகளை ஏற்படுத்தினார்.
    
    அவற்றுள் மேலும் பல நல்ல அம்சங்களைப் புகுத்தினார். அவை அனைத்திற்கும் பொதுவான சில மரபுகளையும் ஏற்படுத்தி வைத்தார்.
    
    உபநிஷ வேதாந்தத்திற்கும்  பகவத்கீதைக்கும் விளக்கவுரை எழுதினார். அத்வைதத் தத்துவத்தைத் தெளிவு படுத்தினார்.
    
    பல தெய்வங்களின் பெயரால் மிக அழகிய தோத்திரப் பாடல்களை இயற்றினார். இவற்றில் மிகச் சிறப்பு வாய்ந்தது அம்பிகையின் பெயரால் பாடப்பட்ட சௌந்தர்ய லஹரி.

    முப்பத்திரண்டு வயதிற்குள் பல சாதனைகளைப் புரிந்துவிட்டு சர்வக்ஞ பீடத்தில் அமர்ந்தார். சகல கலைகளையும் சாஸ்திரங்களையும் கற்றுணர்ந்தவர்கள் வீற்றிருக்கும் பீடமே சர்வக்ஞ பீடம்.
    
    அவருடைய பேரறிவு, ஞானம், செல்வாக்கு முதலியவற்றால் நிலைநிறுத்திய ஆறு உட்சமயங்களையும் ஷண்மதங்கள் என்று கூறுவார்கள். ஆகவே ஆதி சங்கரருக்கு ஷண்மத ஸ்தாபனாச்சாரியார் என்று பெயர் ஏற்பட்டது.
    
    அந்த ஆறு சமயங்களையும் சைவம், வைஷ்ணவம், சாக்தம், சௌரம், கௌமாரம், காணாபத்தியம் என்று பெயரிட்டார்.     அவை முறையே சிவன், விஷ்ணு, சக்தி, சூரியன், முருகன், கணபதி ஆகிய தெய்வங்களை மூலமூர்த்திகளாகக் கொண்டவை.

        அந்த ஆறு உட்சமங்களையும் உள்ளடக்கிய கலவைதான் இன்றைய இந்து சமயம். இதைத்தான் இராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகாநந்தரும் காஞ்சிப் பெரியவர்களும் வளர்த்தனர்.   

    அந்த ஆறு உட்சமயங்களில் ஒன்று சாக்தம். சக்தியைப் பல உருவங்களில் பலவிதமாக வழிபடுவதே இந்த சமயம் காட்டும் நெறி. ஆனால் சக்தி வழிபாடு மிக மிகப் பழமையானது. ஒரு காலத்தில் உலகெங்கும் பரவியிருந்தது.

ஸ்ரீவித்யா எனப்படும் சக்தி வழிபாடு   

    இதன் மிக முக்கிய அங்கம் ஸ்ரீவித்யா மார்க்கம். இந்த மார்க்கத்தில் ஜகத்ஜனனியாகிய அம்பிகையைத் திரிபுரசுந்தரியாக வழிபடுகிறோம், ஸ்ரீலலிதா, காமாட்சி, ராஜராஜேஸ்வரி, புவனேஸ்வரி என்ற பெயர்களில் திரிபுரசுந்தரியை வணங்குகிறோம். 

        இந்தப் பிரபஞ்சத்தின் தாயாக விளங்கும் அம்பிகையை வழிபடுவதற்குப் பலவழிகள் இருக்கின்றன. அவளுக்கு மிகமிகப் பிரியமான பெயரால் அவளை அழைப்பதேகூட ஒரு வழிதான். 
    அம்மா, மா, ஆயி, ஆத்தாள் என்னும் பெயர்களே அவை.     அதே பொருள்கொண்ட மந்திரத்தாலும் வழிபடலாம்.- 
ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ.

   
    அம்பிகையை வழிபடுவதற்குப் பல முறைகள் இருக்கின்றன. எளிமையான தோத்திரங்களால் வழிபடலாம்; அவளுக்குரிய நாம மந்திரங்களைச் சொல்லி அர்ச்சனை செய்யலாம்; அவளுடைய மந்திரத்தை ஜபம் செய்யலாம்; பூ, பழம் போன்றவற்றை வைத்துப் பூஜை செய்யலாம்; ஆலயத்திற்குச் சென்று வழிபடலாம்; அவளுடைய தன்மையை மனத்தில் இருத்தி தியானிக்கலாம். அல்லது சிக்கலான சடங்குகளுடன் ஹோமம், யாகம் போன்றவற்றையும் செய்யலாம்.

மந்திரங்கள்
   
    சடங்கு பூர்வமான வழிபாட்டிலும், உபயவழிபாட்டிலும் பல மந்திரங்களைப் பயன்படுத்துகிறோம்.
   
    சிறப்பும் சக்தியும் வாய்ந்த ஒரு குறிப்பிட்ட ஒலியையோ அல்லது அந்த மாதிரியான ஒலிகளின் கூட்டமைப்பையோ ‘மந்திரம்’ என்று கூறுகிறோம்.
   
    “நிறைமொழி மாந்தர்” என்றழைக்கப்படும் ஆற்றல் வாய்ந்த ரிஷிகளால் வெளியிடப்பட்டவை மந்திரங்கள்.
   
    பல மந்திரங்கள் சொல் வடிவில் அல்லது பெயர் வடிவில் விளங்கும். வாக்கியங்களாகக் கூட விளங்கும். பாடல்களாகவும் திகழும். சில மந்திரங்களோ மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் எந்த அர்த்தத்தையும் கொடுக்கமாட்டாது.
   
    ஏதோ ஒரு வகையான ஓசையாக அது இருக்கும்.

        மந்திரங்கள் அனைத்திற்குமே ரகசிய அர்த்தங்கள் உண்டு. மர்மமானவை அவை.

சஹஸ்ரநாமம்
      
    அம்பிகைக்குப் பிரியமான மந்திரங்கள் பல இருக்கின்றன.
    ஆயிரம் மந்திரங்கள் கொண்ட தொகுப்பை சஹஸ்ரநாமம் என்று கூறுகிறோம். முன்னூறு மந்திரங்களைத் திரிசதி என்னும் நூற்றெட்டை அஷ்டோத்தர சதம் என்றும், பதினாறை சோடசம் என்றும் அழைக்கிறோம்.
   
    முக்கியமான பெரிய தெய்வங்களுக்கெல்லாம் சஹஸ்ரநாமம் உண்டு. அம்பிகைக்கே ஒன்றுக்கு மேற்பட்ட சஹஸ்ரநாமங்கள் இருக்கின்றன. லலிதா, புவனேஸ்வரி, மஹாலக்ஷ்மி, சரஸ்வதி, துர்க்கை, பாலா போன்றவை அவை.

லலிதா சஹஸ்ரநாமம்
   
    அம்பிகையின் வடிவங்களில் முக்கியமானது ராஜராஜேஸ்வரி எனப்படும் லலிதா. அந்த வடிவத்துக்குரியதுதான் லலிதா சஹஸ்ரநாமம்.  
   
    இந்து சமயத்தில் பதினெட்டுப் புராணங்கள் உள்ளன. இவை பெருங்கதைகள். இந்தப் புராணங்களில் ஒன்று பிரம்மாண்ட புராணம். அதன் பின்பகுதியில் இருக்கும் உத்தரகாண்டத்தில் லலிதா உபாக்கியானம் என்னும் அத்தியாயத்தில் லலிதா சஹஸ்ர நாமம் விளங்குகிறது.

தோன்றிய விதம்

    பண்டாசுரன் என்னும் அசுரனை வதைப்பதற்காக அம்பிகை தோன்றி லலிதாவாக வருகிறாள். அவளுடைய வெற்றி விழாவின் போது தன்னுடைய கணவர் காமேஸ்வரருடன் வீற்றிருக்கிறாள். அவளுடைய விருப்பத்தின்பேரில் அப்போது வசினி என்னும் தேவதையின் தலைமையில் பதினொரு வாக்தேவிகள் அவளுடைய புகழை மந்திரங்களின் வாயிலாகப் பாடுகின்றனர்.

    அவ்வாறு பாடப்பட்டதுதான் லலிதா சஹஸ்ரநாமம்.

ஆயிரம் மந்திரங்கள்   

    இந்த ஆயிரம் மந்திரங்களும் அம்பிகை லலிதாவுக்கு மிகவும் பிரியமானவை. இவற்றை யார் கூறுகிறார்களோ அவர்கள் அம்பிகையின் முழுப் பேரருளுக்குப் பாத்திரமாவார்கள். இதனை சஹஸ்ரநாமத்தின் ‘பல சுருதி’ என்னும் பகுதி கூறுகிறது.

        ஆகையினால்தான் தீவிரமான சாக்தராக விளங்கி அம்பிகையின் பேரருளுக்குப் பாத்திரமாக விளங்கவேண்டும் என்று யாரெல்லாம் விரும்புகிறார்களோ அவர்களெல்லாம் லலிதா சஹஸ்ரநாமத்தைக் கூறவேண்டியது அவசியமாகிறது. சக்தியின் ஆலயங்களிலெல்லாம் இது சொல்லப் படவேண்டும்.

   
    இதனை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஜாதியோ மரபோ சக்தி வழிபாட்டில் தடையாக விளங்குவதில்லை. போதிய பயிற்சி இருந்தால் இருபதே நிமிடங்களில் இதனைச் சொல்லி விடலாம்.

   
    ராஜராஜேஸ்வரியின் அம்சமாகிய லலிதாவின் பெயரில் இந்த சஹஸ்ரநாமம் விளங்கினாலும்கூட எந்த அம்பிகையின் கோயிலிலும் இதனைச் சொல்லலாம். எந்த வகையான அம்பிகைக்கும் அர்ச்சனையாக இதன் நாமாவளியைச் சொல்லலாம். எந்த அம்பிகைக்கும் இந்த சஹஸ்ரநாமம் ஏற்றதே. எந்த அம்பிகையாக இருந்தாலும் இதனால் மிகவும் பெருமகிழ்ச்சி அடைந்து அருள் புரிவாள்.
   
    ஸ்ரீசக்ரம் அல்லது அம்பிகையின் உருவப் படம், ஸ்ரீசக்ர மஹாமேரு ஆகியவற்றின் முன்னிலையில் சஹஸ்ரநாமத்தைச் செய்யலாம்.
    அல்லது சும்மா அமர்ந்து கொண்டு வெறும் பாராயணமாகவும் கூட செய்யலாம். சற்றுப் பயிற்சி வந்த பிறகு எந்த நேரத்திலும் மனதிற்குள் அந்த மந்திரங்களை ஓடவிடலாம். வேறு ஏதாவது செய்துகொண்டிருக்கும் போதுகூட அந்த மந்திரங்களில் சிலவற்றையாவது தோன்றுகிற இடத்திலிருந்து சொல்லிக்கொண்டிருக்கலாம்.
   
    செவ்வாய், வெள்ளி, நவமி, சதுர்த்தசி, பௌர்ணமி ஆகிய நாட்களில் செய்வது சிறப்பு.
   
    வில்வ இலை, துளசிப் பூங்கொத்து, செம்பரத்தம்பூ, நந்தியாவட்டை மல்லிகை, சம்பகம், அரணி முதலிய மலர்கள் சிறப்பு. வேறெந்த மலரையும் வைத்துச் செய்யலாம். சரஸ்வதி பூஜையன்று செய்வதும் நல்லது.
   
    அம்பிகையின் பக்தர்களுக்கு அம்பிகையே ஏதாவது வகையில் குருவாய் வருவாள். வழியையும் காட்டுவாள். அல்லது தகுந்த குருவை அடைய வழி செய்வாள்.

பயன்படுத்தும் விதம்   

    லலிதா சஹஸ்ரநாமத்தை இருவிதமாகப் பயன் படுத்தலாம்.

    ஆயிரம் மந்திரங்களையும் தனித்தனியாக தொடர்ந்து கூறிவரலாம். ஒவ்வொரு மந்திரத்துக்கும் முன்னால் பிரணவத்தைச் சொல்லி மந்திரத்தையும் சொல்லி, பின்னால் நமஹ என்று கூறுகிறோம். இது நாமாவளி சொல்லும் முறை. அர்ச்சனையின்போது இவ்வாறு செய்கிறோம்.  

உதாரணம்:
   
ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ
   
ஓம் ஸ்ரீ மஹா ராஜ்ஞை நமஹ
   
ஓம் ஸ்ரீமத் ஸிம்ஹாஸனேஸ்வர்யை நமஹ  

    இன்னொரு முறையில் லலிதா சஹஸ்ரநாமத்தின் ஆயிரம் மந்திரங்களையும் வரிசையாக ஒன்றாக இணைத்துக் கூறுகிறோம். ஆயிரம் மந்திரங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக தொடுத்து ஒரு பெரிய மந்திரமாக அமைத்துச் சொல்கிறோம். இது ஒரு பெரிய பாடலின் அமைப்பில் விளங்கும். அனுஷ்டுப் சந்தஸ் எனப்படும் தாள அமைப்பில் இது விளங்கும். இந்தப் பாடல் வடிவைத் தோத்திரம் என்று கூறுகிறோம். இந்தத் தோத்திரத்தில் நூற்று எண்பத்து மூன்று சுலோகங்களாக ஆயிரம் மந்திரங்களும் இணைந்திருக்கின்றன. ஆனால் அமைப்பில் இது ஒரே மந்திரந்தான். பல மந்திரங்கள் இணைந்து ஒரு பெரிய மந்திரமாக உருவாகமுடியும். அவ்வாறான இணைப்பால் உருவாகிய பெரிய மந்திரத்தை மாலா மந்திரம் என்று கூறுகிறோம்.
   
    பல மலர்கள் இணைத்துக் கோர்க்கப்பட்டு ஒரு மாலை உருவாவதைப் போலவே இருப்பதால்தான் இதனை மாலா மந்திரம் என்று கூறுகிறார்கள்.

   
    இம்முறையில் இது ‘ஸ்ரீலலிதா சஹஸ்ர நாம ஸ்தோத்திர  மாலா மஹா மந்திரம்’ என்று அழைக்கப் படுகிறது.

        இம்முறையில் பாராயணம் செய்யப்படும்போது அதன் முன்னரும் பின்னரும் சொல்லிச் செய்யவேண்டிய சில அம்சங்கள் உள்ளன.
    நியாசம் என்று இவற்றைச் சொல்வார்கள். ஆரம்ப நிலையில் இருந்து படித்து நன்றாகச் செய்து பழக விரும்புகிறவர்கள் நியாசத்தை மெதுவாகக் கற்றுக் கொள்வதுண்டு.     இருப்பினும் நியாசத்துடன் செய்வது இன்னும் சிறப்பு.

மாலா மந்திர அமைப்பு

ஸ்ரீமாதா ஸ்ரீமஹா ராஜ்ஞி ஸ்ரீமத்ஸிம்ஹாஸனேஸ்வரீ  

    மொத்தத்தில் சொல்லப்போனால் அம்பிகையுடன் நெருங்கிய நேரடித் தொடர்பு கொள்ளப் பயன்படும். மிகச் சிறந்த மந்திர சாதனமாக லலிதா சஹஸ்ரநாமம் விளங்குகின்றது.

    ஏனெனில் லலிதா சஹஸ்ரநாமத்தில் அம்பிகையின் வடிவம், அவள் தோன்றிய வரலாறு, அவளை வழிபட யந்திரம் மந்திரம், தத்துவம், பரிவார தேவதைகள், வழிபாட்டு முறை, வழிபடுபவருக்கான தகுதி, அவளுடைய அருளால் பெறக்கூடிய மேன்மைகள், தேவியைப் பற்றிய நூதனமான பலவிபரங்களும் அந்தந்த மந்திரங்களால் விளக்கப்பட்டு விடுகின்றன.
   
    இதன் உரையாசிரியர் பாஸ்கரராயரும் இவற்றுக்கு விளக்கம் தந்திருப்பது பெரும் சிறப்பாகும்.
   
    பிரசாதம் இனிப்பாக இருக்க வேண்டும். பொங்கல், பால் பாயாசம், பால், தேன் முதலியவை நல்லது. இவை கிடைக்காத சமயத்தில் சர்க்கரை, சீனி, கற்கண்டு போன்றவற்றுடன் வெறும் தண்ணீரைக் கூட நைவேத்தியமாக வைக்கலாம். புதிதாகச் சமைத்த சாதத்தை யாரும் உண்பதற்கு முன்னதாகக் கூட அம்பிகைக்குப் படைக்கலாம்.
   
    அம்பிகை வழிபாட்டில் அன்பு, எளிமை, ஆர்வம், பக்தி, அடக்கம் ஆகியவையே மிகமிக முக்கியம்.
   
    ஆடம்பரமான பகட்டான ஆரவாரமான பூஜைகளைக் கண்டு அம்பிகை ஏமாறமாட்டாள். லலிதா சஹஸ்ரநாமத்தில் இரண்டு மந்திரங்கள் உண்டு.

அந்தர் முக சமாராத்யா,
பஹிர்முக சுதுர்லபா

    அவளை நம் உள்ளத்துக்குள் தேடி ஆராதிக்க வேண்டும். வெளிப்புறத்தில் அகப்பட அரிதானவள்.
   
    பெண்கள் ஸஹஸ்ரநாம பூஜை செய்வதை அம்பிகை மிகவும் அதிகமாக விரும்புவாள்.

ஸ்ரீலலிதாம்பிகையின் அவதாரம்
   
    மன்மதன் அழகுக்கும் காதலுக்கும் உரிய தெய்வம்.     தன்னுடைய நெற்றிக்கண்ணால் அவனை சிவபெருமான் ஒருமுறை எரித்துவிட்டார். மன்மதனின் உடல் சாம்பலாகிவிட்டது.

    சிவபெருமானுடைய கணங்களில் ஒருவனாகிய சித்திரகர்மா
அந்தச் சாம்பல் குவியலை மீண்டும் உருவமாக்கினான் .
    அந்தச் சாம்பல் வடிவின் மீது சிவனுடைய பார்வை விழுந்தது. தம்முடைய ஜயாமுடியின் கற்றைகளை உதறினார். அவற்றிலிருந்து ஜீவாம்ருதத் துளிகள் அந்த சாம்பற் குவியலின்மீது விழுந்தன. உடனே அது உயிர் பெற்றெழுந்தது.
   
    அசுரனாக அந்த உரு விளங்கியது.
    ஸ்ரீருத்ரம் என்னும் மந்திரத்தால் அந்த அசுரன் சிவனை வழிபட்டான்.
    தன்னோடு போரிடும் எதிரியின் பலத்தில் பாதியைத் தான் பெற்றுவிட வேண்டும் என்றும் எதிரியின் ஆயுதங்கள் வலுவிழந்து போகவேண்டும் என்றும் வரம் கேட்டான்.
    அறுபதினாயிரம் ஆண்டுகளுக்கு மட்டுமே பலிக்குமாறு சிவன் வரமளித்தார்.
   
    பிரமனால் அவனுக்கு ‘பண்டாசுரன்’ என்ற பெயர் ஏற்பட்டது.
    போரினால் அவனை வெல்லமுடியவில்லை. ஆகவே தேவர்களை அடக்கி ஆண்டான்.
    போரிடாத தேவர்களைப் பெரும் யாகங்கள் செய்து வரவழைத்து அவர்களின் ஆற்றலைத் தானே வாங்கிக் கொண்டான். அவர்களைத் தமக்கு ஏவல் புரியச்செய்தான்.

        ஸ்ரீருத்ரம், வேதமந்திரங்கள் முதலியவற்றைப் பயன்படுத்தி பண்டாசுரனும் அவனைச் சேர்ந்த மற்ற அசுரர்களும் ஆற்றல்களைப் பெருக்கிக் கொண்டனர்.
    பலம் மிகுந்த விஷங்கன், விசுக்ரன் ஆகியோர் அவனுடைய புஜங்களிலிருந்து தோன்றி அவனுடைய தம்பியராக விளங்கினர். மேலும் முப்பத்திரண்டு மகன்களையும் உருவாக்கிக் கொண்டான். இன்னும் கோடிக்கணக்கான பல அசுரர்களையும் உண்டாக்கிக் கொண்டான்.
    சூன்யகம் என்னும் தலைநகரத்தையும் ஏற்படுத்தி அங்கு இருந்து கொண்டு தேவர்களை அடக்கியாண்டான்.

    தேவர்கள் கூடி ஆலோசனை செய்தபோது அம்பிகையை வழிபட்டு அவளிடம் வேண்டி, பண்டாசுரனை அழிக்கவேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

    தேவர்கள் தங்களுடைய உள்ளத்திலும் ஆன்மாவிலும் சம்பந்தப்பட்ட ‘சித்’ என்னும் அறிவுமயமான அக்னிகுண்டத்தை அமைத்துத் தங்களின் உடலையே போட்டு ஹோமம் செய்தார்கள்.        
    தேவி லலிதாவாக அம்பிகை தோன்றினாள். மகா திரிபுர சுந்தரியாகிய அவளைக் காமேசுவரர் என்னும் வடிவில் சிவன் மணந்து கொண்டார்.
    தனக்குரிய ஸ்ரீபுரம் என்னும் இடத்தில் சிந்தாமணி கிரகம் என்னும் அரண்மனையில் சிங்காசனத்தின் மீது வீற்றிருந்து பட்டாபிஷேகம் செய்து கொண்டாள்.
   
    ஸ்ரீலலிதாதான் சகல பிரபஞ்சங்களுக்கும் தாய். ஜகத் ஜனனி எனப்படுகிறாள். மஹாதிரிபுரசுந்தரி, திரிபுரை, ராஜராஜேஸ்வரி, காமேஸ்வரி என்றெல்லாம் அவளுக்குப் பெயர்களுண்டு. பாசம், அங்குசம், கரும்பு, ஐந்துவகையான மலர் அம்புகள் இவற்றைக் கரங்களில் தாங்கியிருப்பாள். மூன்று கண்களுடன் முடியில் மீது பிறைச் சந்திரனையும் அணிந்திருப்பாள். பேரழகி. மஹாமாயையாக விளங்கும் அவள் மோஹினியாகவும் விளங்குகிறாள். ஆயிரம் உதய சூரியர்களின் காந்தியுடையவள். தன்னுடைய செந்நிறத்தால் இந்த புவனங்கள் அனைத்தையும் பிரகாசிக்கச் செய்பவள்.  காரணமில்லாமலேயே கருணைகாட்டுபவள். இவள்தான் காஞ்சியில் காமாட்சியாக வீற்றிருக்கிறாள்.
   
    பண்டாசுரனுக்குக் கிடைத்த வரத்தின்படி அவனுடைய எதிரியின் பலத்தில் பாதி அவனுக்குச் சேர்ந்துவிட வேண்டும். அவ்வாறு கிடைத்த பாதி பலத்துடன் பண்டாசுரனுடைய சொந்த பலமும் சேர்ந்து கொள்ளும். அளவுள்ள சக்தி படைத்தவர்களுடைய ஆற்றலைத்தான் அவ்வாறு பிரிக்கமுடியும். ஆனால் அம்பிகையோ அளவற்ற சக்தி படைத்தவள். அளவற்ற சக்தியில் பாதியை எப்படிப் பிரிக்க முடியும்? ஆகவேதான் அம்பிகையே பண்டாசுரனை அழிக்கச் சென்றாள்.
   
    மந்திரிணீ, தண்டநாதா, ஜ்வாலா மாலினி, பாலா திரிபுர சுந்தரி, அச்வாரூடா, சம்பத்கரீ ஆகிய முக்கிய சக்திகளுடன் பண்டாசுரனுடன் போருக்குச் சென்றாள்.

    மந்த்ரிணீ என்னும் ராஜசியாமளாதான் ராஜராஜேஸ்வரியின் மந்திரி. மதுரையில் மீனாட்சியாக விளங்குகின்றாள்.
    தண்டநாத அல்லது தண்டினீ என்பவள் அம்பிகையின் சேனாபதி. மஹாவாராஹி விளங்கும் அவள் திருவானைக்காவில் அகிலாண்டேஸ்வரியாக இருக்கிறாள்.
    ஜ்வாலா மாலினி என்னும் சக்தி நெருப்பால் ஒரு கோட்டையைப் பாதுகாப்புக்காக எழுப்பினாள். ஸ்ரீசக்கரராஜம் என்னும் தேரில் லலிதாவும் கேயசக்கரம் என்னும் தேரில் மந்திரிணியும் கிரிசக்கரத் தேரில் தண்டநாதாவும் அமர்ந்து கொண்டனர்.
   
    திரஸ்கரீணி, நகுலி, நித்யாதேவிகள் முதலிய சக்திகளையும் மேலும் பல சக்தி கணங்களையும் அம்பிகை படைத்துக் கொண்டாள்.
   
    போரில் பண்டாசுரனின் அசுரர்களையும் அவனுக்குத் துணையாக வந்தவர்களையும் அவர்கள் அழித்தனர். பண்டாசுரனின் குமாரர்களை பாலாதிரிபுர சுந்தரி விளையாட்டாகவே அழித்து விட்டாள். அந்த வீரத்தால் அன்னை மகிழ்ந்தாள். பாலாதிரிபுர சுந்தரி, லலிதா தேவியின் மகள் என்று கூறப்படுகிறாள். லலிதா தேவியிடமிருந்து தோன்றிய இன்னொரு பிரதி போன்றவள். லலிதாவைப் பேரரசியாகவும் பாலாவைப் பட்டத்திளவரசியாகவும் கருதுவார்கள். அம்பிகை வழிபாட்டில் பாலாவை வழிபட்டதன் பிறகு லலிதாவை வழிபடுவது வழக்கம். லலிதாவின் வழிபாட்டை ஸ்ரீவித்யை என்றும் பாலாவின் வழிபாட்டை லகு ஸ்ரீவித்யை என்றும் கூறுவார்கள்.
   
    பண்டாசுரனுடைய தம்பியாகிய விஷங்கனை மந்திரிணீ அழித்தாள். மந்திரிணீயை சியாமளா என்றும் ராஜசியாமளா என்றும் கூறுவார்கள். வேத சொருபமான கிளியையும் மாணிக்கவீணையையும் தாங்கியிருப்பாள். இவள்தான் ராஜராஜேஸ்வரியான லலிதாவின் மந்திரியாக விளங்குபவள். லலிதாவின் ராஜ்ய நிர்வாகத்தைக் கவனிக்கும் முத்ரேஸ்வரி அவள்.
   
    ராஜ சியாமளாவே மதுரையில் மீனாட்சியாக விளங்குகிறாள்.
    பண்டாசுரனின் இன்னொரு சகோதரனாகிய விசுக்ரன் தன்னுடைய அசுரமாயையால் ஒரு யந்திரத்தை உருவாக்கினான். விக்னயந்திரம் எனப்படும் அந்த யந்திரத்தை அக்னிக் கோட்டைக்குள் வீசியெறிந்துவிட்டான். அது அங்கு மறைந்து இருந்து செயல்பட்டது.
   
    சோம்பல், செயலின்மை, முடியாது என்ற தாழ்வுணர்ச்சி, தூக்கம், மயக்கம், ஊக்கமின்மை, தன்மானமிழத்தல் போன்ற உணர்ச்சிகளை அந்த யந்திரம் சக்தி சேனையில் ஏற்படுத்தியது. அதனால் சக்திகளின் தரப்பில் யுத்தப் பணிகள் தடைப்பட்டன.

        லலிதா தன்னருகே அமர்ந்திருக்கும் சிவனாகிய காமேசுவரரைப் புன்னகையுடன் நோக்கினாள். அவரும் முறுவலுடன் நோக்கினாள். இருவரது பார்வைகளும் கலந்தவுடன் அங்கு மஹாகணபதி தோன்றினார்.
   
    பத்துக்கரங்களும், மூன்று கண்களும், பிறைச்சந்திரனும் அணிந்து, வல்லபை என்னும் சித்தலட்சுமியைத் தன் மடியின் மீது அமர்த்திய வண்ணம் விளங்கினார்.
   
    மஹாகணேசர் உடனே விக்னயந்திரத்தைக் கண்டுபிடித்துத் தன் கொம்பால் தூளாக்கினார்.
    விக்னயந்திரம் அழிந்ததோடு சக்தி சேனையின் செயலின்மையும் அகன்றது. இதைக் கண்டு லலிதா மகிழ்ச்சியடைந்தாள்.  
   
    விசுக்ரனை தண்டநாதா அழித்தாள். தண்டநாதாவுக்கு வாராஹி, பஞ்சமி என்றெல்லாம் பெயர்களுண்டு. வராஹ முகம்கொண்டு கலப்பையும், உலக்கையும் கரங்களில் வைத்திருப்பாள். லலிதாவின் சேனாதிபதி இவள்தான். இவளே திருவானைக்காவில் அகிலாண்டேஸ்வரியாகத் திகழ்கிறாள்.
   
    அம்பிகையுடன் பண்டாசுரன் போர் புரியச் சென்றான்.
போரிட வந்திருப்பவள் அகண்ட பரிபூரண ஆதிபராசக்தி என்பதை
அறிந்துகொண்ட பண்டாசுரன் அன்னைக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் அவளைத் துதித்து மூன்று பாணங்களைச் செலுத்தினான். அவை மலர் அம்புகளாக மாறி அன்னையின் பாதங்களில் விழுந்தன.
    பின்னர் பண்டாசுரன் விடுத்த அனைத்து ஆயுதங்களுக்கும் பதில் ஆயுதங்களைப் பொழிந்தாள் லலிதா.
   
    தன்னுடைய குமாரர்கள், தம்பியர், படைகள், பெரும் வீரர்கள் முதலியவர்களை இழந்த பண்டாசுரன் லலிதாவுடன் எஞ்சிநின்ற படைகளுடன் போர்புரிய வந்தான்.
   
    பல ஆயுதங்களையும் இழந்த பண்டாசுரன் தன்னுடைய மாயையால் பல அசுரர்களைத் தோற்றுவித்தான். தன் இருகை விரல் நகங்களைச் சுண்டி, மஹாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் லலிதா தோன்றச் செய்தாள். அந்த அவதாரங்கள் அனைத்து மாயா அசுரர்களையும் அழித்தன.
   
    மஹாபாசுபதம் என்னும் அஸ்திரத்தைச் செலுத்தி பண்டாசுரனுடைய சேனையை அம்பாள் அடியோடு எரித்து அழித்தாள்.
    காமேஸ்வர அஸ்திரத்தைக் கொண்டு பண்டாசுரனையும் எரித்துவிட்டாள்.
   
    இதனால் பிரம்மா, விஷ்ணு, இந்திரன் முதலிய தேவர்களால் துதிக்கப்பட்ட பெருமை அவளுக்கு ஏற்பட்டது.

        ஆரம்பத்தில் சிவனுடைய நெற்றிக்கண் பார்வையால் எரிக்கப்பட்ட மன்மதனை மீண்டும் உயிர் பெறச் செய்து அவனுக்கு சஞ்சீவினி மூலிகையாகத் திகழ்ந்தாள்.
   
    ஸ்ரீ புரம் என்னும் நகரத்தில் அவளுடைய அரண்மனையில் எல்லாத் தேவதைகளும் சூழ லலிதாதேவி கொலுவிருக்கையில் வஸீனி முதலிய வாக்கு தேவதைகள் லலிதா சஹஸ்ரநாம தோத்திரத்தால் அம்பிகையைத் துதித்தனர்.
   
    “என் கட்டளையாலேயே இந்த ஒப்புயர்வற்ற தோத்திரத்தை வாக்கு தேவிகள் செய்துள்ளார்கள். இதை நீங்கள் எப்போதும் என்னுடைய பிரீதியின் வளர்ச்சிக்காகப் படிப்பதுடன் என் பக்தர்களிடமும் பரவும்படி செய்யுங்கள். பூஜையும் ஜபமும் செய்தாலும் செய்யாவிட்டாலும் இந்த சஹஸ்ரநாமத்தை எனது பிரீதிக்காக எப்போதும் பாராயணம் செய்யவேண்டும்”, என்று ஸ்ரீ மாதாவாகிய  ஸ்ரீலலிதா தேவி
ஆசி கூறினாள்.

Sunday, March 27, 2011

கறிவேப்பிலை


 
இந்தியன் கவுன்சில் ஆப் மெடிகல் தினமும் 170 கிராம் காய்கறிகளை சாப்பிட சிபாரிசு செய்கிறது.
75 - 125 கிராம் கீரைகளையும் சாப்பிட சிபாரிசு செய்கிறது.
170 கிராம் காய்கறிகளை சாப்பிட முக்கியமான 10 காய்கறிகளையும் குறிப்பிடுகிறதுஅதில் ஒன்றுகறிவேப்பிலை என்பது குறிப்பிடத்தக்கது. ]
உணவு உண்ணும்போது, கறிவேப்பிலையை பார்த்தவுடன், ஏதோ கரப்பான்பூச்சியைப் பார்த்ததுபோல் நாம் தூக்கி எறிகிறோம். கறிவேப்பிலையின் நன்மைகளை அறியாததால்தான் நாம் இவ்வாறு செய்கிறோம்.
கறிவேப்பிலையில் புரதம், இரும்புச்சது, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், கொழுப்பு, கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, சி போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த சத்துக்களால் கண் பார்வைக் கோளாறுகள், சோகை நோய்கள் குணமடைகின்றன.
மலச்சிக்கலைப் போக்குதல், ஜீரண சக்தியை அதிகரித்தல், பேதியைக் கட்டுப்படுத்துதல், பித்தத்தை மாற்றி வாந்தியைத் தடுத்து வயிற்று இரைச்சலைப் போக்குதல் போன்ற குணநலன்கள் கறிவேப்பிலைக்கு உண்டு.
முகத்தில் அம்மை வடு இருப்பின், ஒரு பிடி கறிவேப்பிலை, கசகசா ஒரு கரண்டி, கஸ்தூரி மஞ்சள் ஒரு துண்டு இவற்றை அம்மியில் வைத்து அரைத்து, முகத்தில் தடவுங்கள். பின் அரை மணி நேரம் கழித்து முகம் கழுவவும். இவ்வாறு இரு வாரங்களுக்கு மேலாக செய்துவந்தால் தழும்புகள் அடியோடு மறைந்துவிடும்.
கறிவேப்பிலையை வறுத்து மிளகு, சீரகம், சுக்கு இவற்றைப் பொடி செய்து, உப்பு சேர்த்து சோற்றுடன் பிசைந்து சாப்பிட, பசி எடுக்காமல், வயிறு மந்தமாக இருப்பின் குணமாகும்.
"அவனுக்கு நீ கறிவேப்பிலை மாதிரிதான்; பார்த்து கவனமாக அவனிடம் இரு" என்று பலர் சொல்வதுண்டு. இனியும் யாராவது இப்படி சொல்வார்கள்?

புற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை
உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.
இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.
இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.
கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.
திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர் சிட்டியில் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா? என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
இந்தியன் கவுன்சில் ஆப் மெடிகல் தினமும் 170 கிராம் காய்கறிகளை சாப்பிட சிபாரிசு செய்கிறது. 75 - 125கிராம் கீரைகளையும் சாப்பிட சிபாரிசு செய்கிறது. 170 கிராம் காய்கறிகளை சாப்பிட முக்கியமான 10காய்கறிகளையும் குறிப்பிடுகிறதுஅதில் ஒன்று கறிவேப்பிலை என்பது குறிப்பிடத்தக்கது.

நீரழிவு நோயை கட்டுப்படுத்த
இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இளம‌் வய‌தி‌ல் நரை முடி வ‌ராம‌ல் தடு‌க்க க‌றிவே‌ப்‌பிலை பய‌ன்படு‌ம் எ‌ன்பது தெ‌ரி‌ந்த ‌விஷய‌ம்ஆனா‌ல் தெ‌ரியாத ‌விஷய‌ம் ஒ‌ன்று உ‌ள்ளது.
அதாவதுநரை முடி வ‌ந்தவ‌ர்களு‌ம்உண‌விலு‌ம்த‌னியாகவு‌ம் க‌றிவே‌ப்‌பிலையை அ‌திகமாக சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் நரை முடி இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்.

உணவில் கறிவேப்பிலை சேர்ப்பது ஏன்?
கறிவேப்பிலை - பெயரைக் கேட்டதுமே சமையலில், உணவுப் பதார்த்தங்களில் வாசனைக்காக சேர்க்கப்படுவது என்று தான் பலரும் நினைக்கின்றார்கள். ஆனால், அதிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் இருப்பது பல பேருக்குத் தெரியாது.
அதன் மருத்துவ குணங்களை புரிந்து கொண்டதால் தான் காலங்காலமாக கறிவேப்பிலையை முன்னோர்கள் உணவில் பயன்படுத்தி வந்துள்ளனர்.
தேவைப்படும் போது பயன்படுத்திக் கொண்டு, உணவு தயாராகி சாப்பிடுகையில், கறிவேப்பிலையை பலர் தனியாகத் தூக்கி வைத்து விடுவதைப் பார்த்திருக்கிறோம்.
பொதுவாக காரியம் ஆகும்வரை காலைப் பிடித்துக் கொண்டு, அவர்களின் காரியங்கள் அனைத்தும் முடிந்ததும், நம்மை புறக்கணித்து விடுவோரைப் பார்த்து, கறிவேப்பிலை போன்று பயன்படுத்திக் கொண்டார்களே என்று வேடிக்கையாகக் கூறுவதுண்டு.
கறிவேப்பிலையில் உள்ள மருத்துவ குணங்கள் நிறைந்த சாறு, உணவில் முழுவதுமாக இறங்கி உணவுக்கு சுவை கூட்டுவதுடன், உடலுக்கு ஜீரணசக்தியை அளித்து பித்தம், வாயு, கபம் போன்றவற்றையும் போக்குகிறது.
எந்த உணவானாலும், கடைசியாக அவற்றை தாளிக்கும் தருணத்தில், ஒன்றிரண்டு கறிவேப்பிலைகளை கிள்ளிப் போட்டு இறக்கி வைப்பார்கள்.
மலச்சிக்கலை தவிர்த்து, தேவையான பசியைத் தூண்டும் வேலையையும் கறிவேப்பிலை செய்கிறது.
கறிவேப்பிலையுடன் சிறிது உளுந்து மற்றும் வெந்தயத்தை வறுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து, மிளகாய் மற்றும் தேவையான உப்பைச் சேர்த்து சட்னியாக செய்து இட்லி, தோசை போன்றவற்றுக்கு தொட்டு சாப்பிடலாம்.
கறிவேப்பிலை சட்னி சுவையைத் தருவதுடன் உடல் எடையை சீராக வைப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது.
கறிவேப்பிலையையும், பச்சைக் கொத்தமல்லியையும் சேர்த்தும் இதுபோன்று துவையல் அரைத்து சாப்பிடலாம். கறிவேப்பிலையைப் போலவே, மல்லி இலையும் ஜீரண சக்திக்கு முக்கியப் பங்காற்றக்கூடியது.
தவிர, கறிவேப்பிலை இலையை அரைத்து காய வைத்த பின், தேங்காய் எண்ணெய் அல்லது தலைமுடிக்கு உபயோகிக்கும் எண்ணெயில் போட்டு சில நாட்கள் ஊற வைத்து, அந்த எண்ணெயைத் தேய்த்து வர, நரை முடி நம்மை நெருங்காது. மேலும் முடி உதிர்தலையும் இந்த எண்ணெய் தடுத்து நிறுத்தும்.
உணவில் மட்டுமல்லாது, நமது புற ஆரோக்கியத்திற்கும் கறிவேப்பிலையின் பங்கு குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.

Saturday, March 26, 2011

தேன்


தேன் ஓர் இனிய உணவுப்பொருள் ஆகும். மருத்துவ குணமும் கொண்டது. பூக்களில் காணப்படும் இனிப்பான வழுவழுப்பான நீர்மத்தில்(திரவத்தில்) இருந்து தேனீக்கள் தேனை பெறுகின்றன. தூய தேனில் தண்ணீரோ வேறு சுவையூட்டும் பொருட்களோ கொஞ்சமும் கலந்திருக்காது. நீர்ம (திரவ) நிலையில் உள்ள தேன் கெட்டுப் போவது இல்லை. தேனில் உள்ள மிதமிஞ்சிய இனிப்புச் சத்து, நுண்ணுயிர்களை(கிருமிகளை) வளர விடுவது இல்லை. பதப்பபடுத்தப் படாத தேனில் 14% - 18% ஈரத்தன்மை உள்ளது. 18%க்கு கீழே ஈரத்தன்மை உள்ள வரை தேனில் நுண்ணுயிர்கள் (கிருமிகள்) வளர இயலாது. தேன் என்பது குளுகோஸ், புரக்டோஸ், நீர், மற்றும் சில என்ஸைம்கள் சிலவகை எண்ணெய்கள் ஆகியவை அடங்கியதாகும். இவை மலரிருந்து கொண்டு வரும் குளுகோஸ் 40 சதவிகிதம் முதல் 80 சதவிகிதம் வரை நீர் நிறைந்ததாக இருக்கும். ஆனால் இவை உற்பத்தி செய்யும் தேனில் 16 முதல் 18 சதவிகிதமே நீர் இருக்கும். இவற்றின் நிறம் மற்றும் சுவை தேனீக்களின் வயது மற்றும் அந்த பகுதியில் அமைந்திருக்கும் தாவர வகைகளைப் பொறுத்து மாறுபட்டு இருக்கும். பொதுவாக தேன் மஞ்சல் நிறமுடையதாய் இருக்கும். வெளிர் மஞ்சள் நிற தேன் தரம் வாய்ந்ததாய் இருக்கும். ஆரஞ்சு மரத்தின் பூக்களைக் கொண்டு தேனீக்களினால் உருவாக்கப்படும் தேன் முதல் தரமானதாகக் கருதப்படுகின்றது. குறைந்த தரம் வாய்ந்த தேன் பஹ்வீட் (Buckwheat) என்னும் தாவரத்திலிருந்து பெறப்படும் தேனாகும். ஏனெனில் அந்த தேன் அடர்ந்த மஞ்சள் நிறமானதாய் இருக்கும்.
உலகம் முழுதும் தேனீக்கள் பொருளாதார ரீதியாக செயற்கை முறையில் (Bee Keeping) வளர்க்கப் படுகின்றது. நல்ல பொருளாதாரத்தை ஈட்டிக்கொடுக்கக் கூடிய தொழிலாகவும் இது விளங்கிவருகின்றது. நல்ல ஆரோக்கியமான கூட்டில் 14 முதல் 23 கிலோ வரை தேன் சேகரிக்கப்படுகின்றது. இவை தங்கள் குளிர்கால உணவுத் தேவையைக் காட்டிலும் மிக கூடுதலாகும். இவற்றின் மிஞ்சிய தேன் எடுத்துக்கொள்ளப்பட்டு அவற்றின் உயிர் தேவைக்கான கொஞ்சம் தேன் விட்டு வைக்கப்படுகின்றது. உலகத்தின் தேன் தேவையை பெருமளவிற்கு செயற்கைத் தேன் வளர்ப்பின் மூலமே சரிகட்டப்படுகின்றது. 8 முதல் 10 பவுண்டு தேனை சேகரிக்கும் போது அந்த கூட்டிலிருநது 1 பவுண்டு எடையுடைய தேன் மெழுகு கிடைக்கின்றது. தேன் என்பது ஒரு தூய கார்போ-ஹைட்ரேட் உணவாகும். இவை பல மருத்துவப் பயன்பாட்டிற்கு உதவுகின்றன.


இது நிறைய கலோரி நிறைந்ததாகும். உதாரணத்திற்கு ஒரு அவுன்ஸ் தேன் மூலம் ஈக்களுக்கு கிடைக்கும் ஆற்றல் ஒரு முறை உலகைச் சுற்றி வரப் போதுமானதாகும். இந்த தேன் மற்ற திரவத்தைக் காட்டிலும் அடர்த்தி நிறைந்ததாகும். ஒரு குவளை சர்க்கரை நீரின் எடை சுமார் 7 அவுன்ஸ் ஆகும். ஆனால் ஒரு குவளைத் தேனின் எடை 12 அவுன்ஸ் ஆகும். ஏறக்குறைய இருமடங்கு எடையாகும்.
உலகில் தேன் வழி நிகழும் பொருளியல் ஈட்டம் பில்லியன் டாலர் கணக்கில் இருக்கும். அமெரிக்காவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 94 மில்லியன்கிலோ கிராம் தேன் உற்பத்தி செய்கிறார்கள் (1985 ஆம் ஆண்டுக் கணக்கு) [1]கனடாவில் ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 34 மில்லியன் கிலோ கிராம் தேன் உற்பத்தி செய்கின்றார்கள் [2]

[தொகு]



 தேன் இயற்கை அளித்த, இல்லந்தோறும் இருக்க வேண்டிய உணவு. எழுபது வகையான உடலுக்கு ஏற்ற சத்துகளும், வைட்டமின்களும் தேனில் உண்டு. தேனில் உள்ள சத்துக்கள் சீரான பாதை யில் சுலபமாக கிரகிக்கப்பட்டு விடுகிறது. மேலும் தேனீக்கள் எந்தச் செடியிலிருந்து தேனைச் சேகரித்ததோ அந்தச் செடியின் மருத்துவக் குணத்தை அது பெற்று விடுகிறது. நோய் நீக்கும் மருந்தாக உயர்ந்த உணவாக தேன் உள்ளது. 

  சித்தர் நூல்களில் பித்தம், வாந்தி, கப சம்பந்தமான நோய்கள், வாயுத் தொல்லை, இரத்தத்தில் உள்ள குற்றங்களை நீக்கி சுத்தம் செய்ய வல்லது தேன் என்று கூறப்பட்டுள்ளது. 

  கொம்புத்தேன், மலைத்தேன், மரப்பொந்துத்தேன், மனைத்தேன், புற்றுத்தேன், புதியதேன், பழைய தேன் என ஏழு தேன் வகைகளையும், அவற்றின் மருத்துவ குணங்களையும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். மூலிகைகள், மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து நிரம்பிய உயர்ந்த மலையிலிருந்து சேகரிக்கப்படும் மலைத்தேனில் மூலிகையின் மருத்துவக் குணமும் சேர்ந்து இருக்கும். இத்தேன் மருந்துடன் சேர்த்து உண்ணும் அனுபானத்திற்குச் சிறந்ததாக விளங்குகிறது. 

  மருந்துகளைத்தேன் கலந்து கொடுப்பதால் ஜீரணப் பாதையில் வெகு சீக்கிரமாக மருந்து உறிஞ்சப்பட்டு விடும். இரத்த ஓட்டத்தில் மருந்து விரைவில் செயல் புரியும். மருத்தின் வீரியம் குறையாமல் மருந்தால் வயிறு, குடல்களுக்கு ஏற்படும் பின் விளைவுகளை தேன் தடுத்து நிறுத்தும். தேன் சேர்த்து தயாரித்த மருந்துகள் நீண்ட நாள் கெடாமல் இருக்கும். மருந்தின் வீரியமும் கெடுவதில்லை. இந்திய மருத்துவ முறைகளில் தேன் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. 

  சிறியவர் முதல் பெரியவர்வரை பொருந்தும் உணவும், மருந்தும்தேன்தான்.. தேனில் எளிமையாக ஜீரணமாகும் சர்க்கரை சத்துக்கள் இருப்பதால் கடும் உழைப்பாளிகள் விளையாட்டுப் போட்டியில் ஈடுபடுவோர் இடையிடையே தேன் கலந்த பானம் பருகலாம். தேனில் உள்ள சர்க்கரைச் சத்து வாயிலும், குடலிலும் வெகு சீக்கிரத்தில் உறிஞ்சப்பட்டு விடுகிறது. இதனால் உழைப்பின் களைப்பு நீங்கும். 

  தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய இரத்த நாளங்களைச் சீராக விரிவடையச் செய்து இரத்த ஓட்டத்தை சீராக்கும் திறன் படைத்தது. அதனால் இதய நோய் இதயத்தில் நுழையபயப்படும். 

  எகிப்து நாட்டில் கண் நோய், தோல் நோய் மருத்துவத்தில் தேனைப் பயன்படுத்துகிறார்கள். ரஷ்ய நாட்டின் நாட்டுப்புற மருத்துவத்தில் தேன் முக்கிய இடம் வகிக்கிறது. தேனுடன் பிற உணவுப் பொருட்கள் தானியங்களை ஊற வைத்து உண்ணும் பழக்கம் ரஷ்ய நாட்டில் இன்னும் வழக்கத்தில் உள்ளது. 

  தேனுடன், இஞ்சி, விதை நீக்கிய பேரீச்சம்பழம் இரண்டையும் ஊறவைத்து நம் நாட்டில் உட்கொள்வார்கள். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதுடன், மல பந்தம் நீங்கி, ஜீரணப்பாதை சீராகும். 

 அரை டம்ளர் முதல் ஒரு சிறிய டம்ளர் அளவு (50 மி.லி முதல் 100 மி.லி.வரை) ஆறிய வெந்நீரில் அல்லது அதே அளவு கொதித்து ஆறிய பாலில் ஒரு டீஸ்பூன் முதல் மூன்று டீஸ்பூன்வரை தேன் கலந்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் அருந்துங்கள். குழந்தை முதல் வயதானோர்வரை தேனை உட்கொள் ளலாம். நோய் எதிர்ப்புத் தன்மை பெருகி உடல் ஆரோக்கியம் கிட்டும். படுக்கும் முன் தேன் அருந்தினால் நல்ல உறக்கத்தை நல்கும். 

இரத்த சோகையை அகற்ற: 

  நாள்தோறும் 100 கிராம் தேன் கலந்த பானம் பருக வேண்டும். தினசரி 100 கிராம் அளவிற்கு மேல் தேன் உட் கொள்ளக்கூடாது. காலை 30 கிராம், மதியம் 40 கிராம், இரவு 30 கிராம் அளவாகப்பிரித்து உட்கொள்ள வேண்டும். ஏதாவதொரு பானத்துடன் சேர்த்து சுமார் ஆறு வாரம் அருந்தி வருவதால் இரத்தத்தில் இரத்த சிவப்பணு (ஹீமோகுளோபின்) அதிகரித்து இரத்த சோகை நீங்கும். மேலும் உடல் அழகையும், குரல் இனிமையையும் பெருக்கும் குணம் தேனிற்கு உண்டு. 100 கிராம் தேனில் சுமார் 355 உடற்சூடு தரும் கலோரிகள் உள்ளன. 

  தேனை வயிற்றின் நண்பன் என்று குறிப்பிடலாம். ஒன்று முதல் மூன்று டீஸ்பூன் தேனை 100 மி.லி. ஆறிய வெந்நீருடன் கலந்து தினமும் காலை அல்லது இரவு நேரங்களில் வெறும் வயிற்றில் உணவு அருந்துவதற்கு முன் பருகி வருவதால் வயிற்றுப்புண், இரப்பை அழற்சி ஈரல், பித்தப்பை நோய்கள் குணமாகும். இரைப்பையில் தேவைக்கு அதிகமாக சுரக்கப்படும் அமிலத்தின் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன் அமிலத்தால் வயிற்றுப் புண்ணிற்கு ஏற்படுத்தப்படும் தூண்டுதலைக் குறைத்து, எரிச்சல், வலியை நீக்கும். மேலும் நீர்த்தாரைப் புண், சிறுநீரக, இதய நோய்களையும் தடுக்க வல்லது தேன். 

  தேனீ சேகரிக்கும் தேனில் சிறிதளவு மகரந்தமும் கலந்திருக்கும். பூக்களுக்குத் தக்கவாறு நாடு, காலத்திற்கு ஏற்றவாறும் தேனின் ருசி, மனம், குணம், தடிமன் வேறு படும். குடகு பகுதியில் கிட்டும் ஒரு வகைத் தேன் வெள்ளி நிறத்தில் ஜீனி (சர்க்கரை) கரைத்தது போல் இருக்கும். 

  தேன் கூட்டை பிரித்து கையால் பிழித்தெடுக்கும் தேனில் புழு, பூச்சி, தூசி கலந்து இருக்கும். தேன் கூட்டிலிருந்து நேரடியாக ஒழுகும்போது சேகரிக்கப்படும் தேன் சுத்தமான முதல் தரமானது. 

  சேகரிக்கப்பட்ட தேன் இனிப்பு சுவையுடன் தெளிவாக இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். நாளடைவில் மங்கிய நிறத்திற்கு மாறி விடும். சுமார் மூன்று மாதம் முதல் ஆறு மாதம் வரை தேனை வைத்திருந்து சாப்பிடலாம். பழைய தேனும் உட்கொள்ள உகந்த நிலையடைகிறது. நாள் பட வைத்திருந்தும் தேனை பயன்படுத்தலாம். நாள்பட்ட சுத்தமான தேனில் படிகம் ஏற்படும். இதனை நாட்டுப்புற மக்கள் விளைந்த தேன் என்பர். விளைந்த தேனையும் உட்கொள்ளலாம். 

  தேனில் உள்ள சர்க்கரை சத்து, வைட்டமின் சத்து, உலோக சத்து உடலுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. அபூர்வமாக சிலருக்கு தேனில் கலந்துள்ள மகரந்தமும், மெழுகும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். தேனில் சிறிதளவு தேன் மெழுகும் கலந்திருக்கும், தேன் மெழுகு உடலுக்கு நன்மை செய்ய வல்லது. தேன் மெழுகு உடலை மெருகேற்றும் தன்மையை பெற்றது. ஆயுளை நீட்டிக்கும் அறிய குணம் தேன் மெழுகிற்கு உண்டு. 

  தேனிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவையான பானத்தை முனிவர்கள் முதல் தேவர்கள் வரை விரும்பி அருந்தி வந்தனர் என ரிக் வேதத்தில் குறிப் பிடப்பட்டுள்ளது. ரோமானியர்கள் மூல்லும் என்ற பானத்தையும், ரஷ்யர்கள் லிப்பிடெஸ் என்ற பானத்தையும், கிளாரி பிராகெட் என்ற சுவையான பானத்தை பிரிட்டிசாரும் உபயோகித்து வந்தனர். இவர்கள் உட்கொண்ட பானங்கள் அனைத்தும் தேன் கலந்து செய்யப்பட்டவை என்பதனை மேல் நாட்டு வரலாறு எடுத்துரைக்கிறது. 

  தென் ஆப்பிரிக்காவிலும், கிழக்கு ஆப்பிரிக்கா நாட்டிலும் வாழும் சிதேசி இனப்பிரிவினர்கள் தேனிலிருந்து தயாரிக்கப்பட்ட பீர், ஒயின், மதுபான வகைகளை உற்சாகமாக உட்கொள்கிறார்கள். 

  டெமோகிரிபியஸ் என்ற கிரேக்க தத்துவ ஞானி, நீண்ட நாள் உயிர் வாழ்ந்த ரகசியத்தை வெளியிட்டபோது அனைவரும் திகைப்படைந்தனர். நான் தினமும் வெந்நீரில் தேனை ஊற்றி அதில் எழும் ஆவியை முகர்ந்து வருகிறேன். இதனால் என்னை நோய் தாக்கத்திலிருந்து காத்துக் கொண்டேன் என்று கூறியிருக்கிறார். 

  கீழ் ஆப்பிரிக்காவில் வாழும் வாசாமியா இனத்தவர்கள் தங்கள் சாதிப் பெண்கள் பிரசவித்த பின் தீட்டு நன்கு கழியும்வரை வெந்நீரில் தேன் கலந்து உணவாக அளித்து வருகிறார்கள். இதனால் பிரசவத்தில் ஏற்பட்ட அசதி நீங்குகிறது. 

  முருகப் பெருமானின் பழனிமலை சன்னிதானத்தில் கிடைக்கும் பஞ்சாமிர் தத்தின் சுவையை நாடெங்கும் பரப்பியது இந்த தேன்தான். இங்கு வருடந்தோரும் வரும் பக்தர்கள் வீடு செல்லும்போது படைத்த பஞ்சாமிர்தம் இல்லாமல் செல்வதில்லை. இதனை தன் குடும்பத்தாருடன் உண்டு. சுற்றத்தாருக்கும் வழங்கி உடல் நலத்தை காப்பாற்றி வருகிறார்கள். உடல் நலமும் கிட்டுகிறது. பஞ்சாமிர்தத்தில் சேரும் பலாப்பழம் எய்ட்ஸ் நோயை எதிர்க்க உடலுக்கு பலன் தருவதாக லண்டனில் கண்டுபிடித் திருக்கிறார்கள். 

தேனில் கலப்படத்தை அறிய சில வழிகள் உள்ளன: 

  சிறிதளவு தேனில் தீக்குச்சியை சில வினாடிகள் ஊறவிடுங்கள். மீண்டும் ஊறிய தீக்குச்சியை எடுத்து துடைத்து விட்டு தீப் பெட்டியில் பற்ற வைக்க வேண்டும். குச்சி சீக்கிரம் எரிந்தால் தேனில் சர்க்கரைக் கலப்படம் இல்லை என்பதை அறிய வேண்டும். மை உறிஞ்சும் காகிதத்தில் அல்லது செய்தி வெளியாகும் நாளிதழில் சிறிதளவு தேனை ஊற்றி, சில நிமிடங்கள் வைத்திருங்கள். காகிதத்தின் கீழே தேன் ஊறி இருக்கக் கூடாது. செய்தித்தாளில் தேன் ஊற்றிய இடத்தில் ஊறாவிடில் நல்லதேன். ஒரு கண்ணாடி டம்ளரில் முழுவதும் நீர் பரப்பி அதில் ஒரு தேக் கரண்டி தேனை மேலாக விடுங்கள். தேன் நீரில் கரையாமல் அடியில் சென்று தங்க வேண்டும். நீரில் கரையாவிடில் அது அசல் தேனாகும்.  


தேன் கூட்டின் அமைப்பு




தேன் கூடும்  திருமறையின் கூற்றும் ...


அறுகோண அறைகள் கொண்ட கூடு

தேன்கூடு(1மீ),
Apis dorsata
தேன்கூட்டில் தேனிக்களின் அமர்வு

தேனீக்கள் பெருங்கூட்டமாக, தேனடை என்னும் ஆயிரக்கணக்கான அறுகோண அறைகள் கொண்ட கூடு கட்டி, அதில் தேனை சேகரித்து வாழ்கின்றன். தேனீக்கள் தமது உடலில் இருந்து வெளியேற்றும் மெழுகால் இந்த கூடுகள் அமைக்கப்படுகின்றன

தேனீக்களின் வாழ்க்கை முறையில் நடைபெறும் மேலும் பல அற்புதங்களைக் காண்போம்.
இன்று நிலத்தடி நீர் மிக மிக அரிதாகி விட்டது. காரணம் மணல் கொள்ளை! ஆற்றுப் படுகையில் இருக்கும் அடுக்கடுக்கான மணல் தட்டுக்கள் தான் நிலத்தடி நீரின் பிடிமானங்களாக இருக்கின்றன. ஆற்றுப்படுகையில் நடக்கும் அபரிமிதமான, அளவுக்கதிகமான மணல் கொள்ளையின் காரணமாக அந்த மணற் தட்டுக்கள் பறி போய் நிலத்தடி நீர் சேமிப்பாகவில்லை.

கொள்ளையடிக்கப்படும் மணல் எங்கு செல்கின்றது? மனிதர்கள் கட்டுகின்ற மாளிகைகளுக்கு! அறிவியல் விலங்கான மனிதன் ஒரு வீட்டைக் கட்டுகின்ற போது, இன்னொரு வளத்தை அழித்து, தன்னுடைய வீட்டைக் கட்டிக் கொள்கின்றான்.
பறவைகள் சில குச்சிகளை வைத்துக் கட்டுகின்றன. எறும்பு, கரையான் போன்றவை மண்ணை வைத்து வீட்டை அமைத்துக் கொள்கின்றன. இவையெல்லாம் கூடு கட்டுகையில் தங்கள் இனத்திற்கும், மற்றவர்களுக்கும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. மனிதன் மட்டுமே தான் கட்டுகின்ற வீட்டுக்காக மனித இனத்திற்கும், அடுத்த இனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றான்.
ஆனால் அல்லாஹ்வுடைய படைப்பின் அற்புதமான இந்தத் தேனீ, யாருக்கும் எதற்கும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல் தன் மெழுகுக் கூட்டிற்கான மூலத்தை எப்படிப் பெற்றது? யார் கொடுத்தது? தேனீக்களில் பாட்டாளித் தேனீ, ஆண் தேனீ, ராணித் தேனீ என்று மூன்று வகைகள் உள்ளன. இதில் இளைய பாட்டாளித் தேனீ அல்லது பணியாளர் தேனீ தங்களின் அடிவயிற்றுக் கிடங்கில் அமையப் பெற்றிருக்கும் மெழுகுச் சுரப்பிகளில் இருந்து மெழுகைச் சுரக்கின்றன. இவ்வாறு சுரக்கப்பட்ட மெழுகை, தேனீக்கள் மென்று குழைத்து இந்தத் தேனடையை உருவாக்குகின்றன.
மென்று, குழைத்து, கட்டப்படுகின்ற தேன் கூட்டின் விதவிதமான அறைகளின் சுவர்கள் நன்கு காய்ந்து கனமாகி விடுகின்றன. ஆனால் அதே சமயம், 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பமூட்டப்பட்டால் நெகிழ்ச்சியடையும் நிலையையும், 145 டிகிரி அளவுக்கு வெப்பமூட்டப்பட்டால் உருகும் நிலையையும் அடைந்து விடுகின்றன.

இங்கு தான், கூடுகளைக் கட்டிக் கொள் (16:68) என்று அல்லாஹ் குறிப்பிடும் கட்டளையைச் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.
மனிதன் தான் கட்டும் வீட்டிற்காக பெரிய சிமெண்ட் கிடங்கை வெளியில் வைத்திருக்கின்றான். கட்டடத்திற்கு சிமெண்ட் மட்டும் போதாது. ஜல்லி, இரும்பு, செங்கல், மணல், தண்ணீர் என பல மூலப் பொருட்கள் தேவைப்படுகின்றன.

குறிப்பாக வீட்டுச் சுவர்களைக் கட்டும் போது, சுடப்பட்ட செங்கல்களை அடுக்கி வைத்துக் கொண்டு அதன் மீது முகட்டைப் போட்டு விட முடியாது. அந்தச் செங்கல்களில் ஏற்படும் இடைவெளிகள் அடைக்கப்பட வேண்டும். செங்கல்களில் ஏற்படும் இடைவெளிகளை அடைப்பதற்கு சிமெண்ட் சாந்துகளைப் பயன் படுத்துகின்றோம். மனிதனுக்கு மட்டும் தான் இந்த அறிவுத் திறன் இருக்கிறதா? என்று பார்த்தால் அல்லாஹ்வின் அற்பப் படைப்பான, அதே சமயம் அற்புதப் படைப்பான இந்தத் தேனீக்கு மனிதனை விஞ்சுகின்ற அறிவுத் திறன் இருக்கின்றது.

இந்தச் சின்னஞ்சிறு தேனீ பல்வேறு மரப்பட்டைகள், மலர் அரும்புகளில் இருந்து செந்நிறத்துப் பிசினைச் சுமந்து கொண்டு வந்து தேன் கூட்டில் உள்ள கீறல்களை, இடைவெளிகளை அடைக்கின்றன. அதில் உள்ள பாந்துகளை இந்தப் பிசின் சாந்துகளை வைத்துச் சரி செய்து கொள்கின்றன.
மனிதன் மட்டுமே தான் கட்டுகின்ற வீடுகளுக்கு அழகிய வண்ணம் (பெயிண்ட்) தீட்டுகின்றான் என்று எண்ணி விடக் கூடாது. அல்லாஹ்வின் இந்தச் சிறிய படைப்பும் தான் கட்டும் வீட்டிற்கு செந்நிறப் பிசினைக் கொண்டு வண்ணம் தீட்டிக் கொள்கின்றது. இதனால் அந்தத் தேன் கூட்டில் ஒரு பளபளப்பு பளிச்சிடுகின்றது.
இவ்வாறு இந்தச் சின்னஞ்சிறு அரிய படைப்பின் அடிவயிற்றுக் கிடங்கிலிருந்து கிடைக்கின்ற மெழுகின் மூலம் எழுகின்ற மெழுகு மாளிகையான தேன் கூடு, அந்தத் தேனீக்கு மட்டுமல்லாமல் மனித இனத்திற்கும் சேர்த்தே பயன்படுகிறது.

இருட்டில் வாழும் இந்தக் குருட்டு மனிதனுக்கு வெளிச்சம் தரும் மெழுகுவர்த்தியாகவும், அழகு சாதனங்களுக்கும் அவனது வீட்டில் அலங்கரிக்கும் மரச் சாமான்களுக்கும் மெருகூட்டும் வண்ணக் கலவை யாகவும் அது பயனளிக்கின்றது.
மனிதன் இயற்கை வளத்தைச் சுரண்டியும், அடுத்தவரின் அல்லது அடுத்த பிராணியின் சொத்தைச் சூறையாடியும் தன் வீட்டைக் கட்டிக் கொள்கின்றான். ஆனால் இந்தத் தேனீயோ தன் சொந்தக் காலில் நின்று, சொந்த மூலத்தைக் கொண்டே தன் கூட்டைக் கட்டிக் கொள்கின்றது.
தாவர இனத்தில் போய் தேனீ சில சேர்மானங்களைப் பெறுகின்றது. அவ்வாறு தாவர வர்க்கத்திலிருந்து அந்தச் சேர்மானங்களைத் தானமாகப் பெற்றுவிடவில்லை. அதற்குப் பரிகாரமாக அந்தத் தாவரத்தின் மலர்ச்சிக்காகவும், வளர்ச்சிக்காகவும் மகரந்தச் சேர்க்கையைக் காணிக்கை யாகக் கொடுத்து விடுகின்றது.

சிலந்தியும் தன் சொந்தக் காலில் நின்று, தன் உடலிலிருந்து   உருவாகும் திரவத்திலிருந்து இழைகளைப் பின்னி வலையை அமைத்துக் கொள்கின்றது. ஆனால் அதனால் மனித சமுதாயத்திற்கு எவ்விதப் பயனும் இல்லை. மேலும் அது மனிதனுக்கு இடர் விளைவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் தேனீயும், தேன் கூடும் மனித சமுதாயத்திற்கு மாபெரும் பலனை அளித்துக் கொண்டிருக்கின்றது.
இந்த வகையில் “கூடு கட்டுக” என்று தேனீயை நோக்கி அல்லாஹ் கூறும் கூற்று வெறும் கூற்றாக இல்லை. மனிதனின் அறிவுக் கண்ணைத் திறக்கின்ற, சிந்தனை ஊற்றாக அமைந்துள்ளது.

என் கூட்டைக் கட்டுவதற்காக மெழுகு எனும் மூலத்தை என்னுள் சுரக்க வைத்தவன் தன்னிகரில்லா என்னிறைவன் என்று அல்லாஹ்வின் படைப்பாற்றலுக்கு சாட்சி கூறி நிற்கின்றன, இந்தத் தேனீக்கள்!


அதிசயப் புதையல்! அதிரசப் படையல் .

தேன் கூடு என்பது இன்ன பிற பொடிப் பொடி ஈக்கள், பெரும் பெரும் பறவைகள் கட்டுகின்ற கூடுகள் போன்றதல்ல! அல்லாஹ்வின் அற்புதங்களைச் சுமந்து நிற்கும் அதிசயப் புதையலாகும்; அதிரசப் படையலாகும். தேன் கூடு என்பது தேனீக்கள் வசிக்கின்ற ஒரு வீடு மட்டுமல்ல!
பூக்கள் சுரக்கின்ற இன்சுவை மதுர பானம், மகரந்தத் தூள் ஆகியவை தேனீயின் வயிற்றில் போய் செரிமானம் ஆகி வயிற்றின் வழியாக வெளியேறும் அமிர்த பானமான தேனைக் காக்கின்ற, செயல் நுணுக்கம் தாங்கிய சேமிப்பு வங்கி தான் தேன் கூடு! பாலினச் சேர்க்கைக்குரிய பள்ளியறை! தேனீக்கள் பொறிக்கின்ற சினை முட்டைகளையும் அந்தச் சினை முட்டைகள் ஈனுகின்ற குஞ்சுகளையும் காக்கின்ற கரு என தேன் கூட்டின் பன்பமுகப் பயன்பாட்டைப் பட்டியல் போடலாம்
.
தொங்கும் தொழில் நுட்பத் தொழிற்சாலை

மரக் கிளைக்கு இடையிடையே அந்தரத்தில் தொங்கும் இந்தத் தேன் கூடு வெறும் தேன் கூடல்ல! தொங்கும் தொழில் நுட்பத் தொழிற்சாலை! அமுதம் சுரக்கும் அதி மதுரத் தேன் ஆலை! இங்கு இருபத்தி நான்கு மணி நேரமும் தொழில், பணி நடந்து கொண்டே இருக்கின்றது.

திட்டமிடப்பட்ட தேன் கூட்டு அறைகள்

தேனீயின் பணிகளுக்குத் தக்க தேன் கூட்டில் திட்டமிடப்பட்டு அறைகள் அமைக்கப்படுகின்றன. தேன் கூட்டில் ஒரு பகுதி வளரும் ஆண் தேனீக்களுக்காகவும், தேன் மற்றும் மகரந்தத் தூளை சேமிப்பதற்காகவும் கட்டப்படுகின்றது.

ஆண் தேனீக்களுக்காகக் கட்டப்படும் அறைகள்

பணியாளர்களுக்காகக் கட்டப்படும் அறைகளை விடப் பெரிதாக அமைக்கப்படுகின்றன. இந்த அறைகள் மூடப்பட்டு விட்டால் ஒரு குவிமாடத்தை (உர்ம்ங்) போல் காட்சி அளிக்கும். பாட்டாளித் தேனீக்களின் அறைகள் மூடப்பட்டு விட்டால் தரை மட்டமாகக் காட்சியளிக்கும்.ஆண் தேனீக்களின் அறைகள் தேன் கூட்டின் நடுவிலும் கீழ்ப் பகுதியின் வலது புறத்திலும் கட்டப்படுகின்றன. பாட்டாளித் தேனீக்களின் அறைகள் தேன் கூட்டின் மேற்பகுதியில் இடது புறத்தில் கட்டப்படுகின்றன.

ராணித் தேனீக்களின் அறைகள்

தேன் கூட்டின் முகத்தில் நேராக, அதே சமயம் பாட்டாளித் தேனீக்களின் அறைகளுக்கு எதிராக, செங்குத்தாக ஓர் அறை தொங்கும். இது தான் ராணித் தேனீயின் அறையாகும். படுக்கை விட்டத்தில் அமைந்துள்ள அறைகள் பாட்டாளி அல்லது ஆண் தேனீக்களின் அறைகளாகும்.

குஞ்சுகளுக்குரிய அறை

குஞ்சுகள் அல்லது முட்டை அல்லது முட்டைப் புழுக்களுக்காகத் தயாரிக்கப்பட்ட அறையில் தான் இளம் ராணி பருவம் அடைவதற்காக வளர்க்கப்படுகின்றது. ராணித் தேனீயின் இந்த அறை சாதாரண முட்டைப் புழுக்களுக்கான அறையை விட அகலமானது. இவ்வாறு ராணீத் தேனீக்கள், ஆண் தேனீக்கள், பாட்டாளித் தேனீக்கள் எனப்படும் பெண் தேனீக்கள் என்று மூன்று வகையான தேனீக்களுக்கும் இந்தத் தேன் கூட்டில் தனித்தனி அறைகள் கட்டப்படுகின்றன.

மனிதன் என்ற அறிவியல் விலங்கு தான் பொறியியல் வல்லுநர்களைக் கொண்டு மாட மாளிகைகளையும், கூட கோபுரங்களையும் கட்ட முடியும். வரவேற்பறை, சமையலறை, படுக்கையறை, ஒப்பனை அறை என்று பல்வேறு அறைகளைக் கட்ட முடியும் என்று கற்பனை செய்து கொண்டிருக்கின்றான்.ஆனால் அந்தக் கற்பனைகளை எல்லாம் தகர்த்தெறிந்து விட்டுத் தன்னிகரற்ற முறையில் தனி பாணியில் பொறியியல் கலை நுட்பத்துடன் கூடு கட்டி, தேனீக்கள் மனிதனை, மனித அறிவை விஞ்சி நிற்கின்றன.

இதனால் தான் மனிதனின் அறிவை விஞ்சுகின்ற தேனீக்களின் இந்தத் தொழில் நுட்பக் கலையை மனிதன் கண்டறியும் வகையில் திருக்குர்ஆனில் தேனீ என்ற அத்தியாயத்தில் அல்லாஹ் தேனீக்களைப் பற்றிக் குறிப்பிடுகிறான்.இது உண்மையில் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடுகின்றது. தேனீ கூடு கட்டும் விதம், அது கொண்டு வருகின்ற மகரந்தத் தூள், மொண்டு வருகின்ற தேன் மதுர இன்சுவை பானம், சிவப்பு நிறப் பிசின் போன்றவற்றைச் சேமிக்கும் பணியும் பாங்கும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதோடு அதிர்ச்சியிலும் உறைய வைக்கின்றது.

மனிதனைப் போன்று சுற்றுப் புறச் சூழலை அழித்து தனக்கு வீடு கட்டாமல், இந்தத் தேனீக்கள், தான் கட்டுகின்ற கூட்டிற்காகச் சேமித்து வரும் மகரந்தத் தூள் மூலம் தாவர இனத்தின் உருவாக்கமும், இனப் பெருக்கமும் நடைபெறுகின்றது.தேனீக்கள் சுமந்து வருகின்ற மகரந்தத் தூள் பூக்களில் படியும் போது ஏற்படும் தாவர இனப் பெருக்கம் பற்றிய அறிவியல் ரகசிய வெளிப்பாட்டை அறியும் போது நம்முடைய ஆச்சரியத்திற்கு அளவே இல்லை.
இதன் மூலமாக அல்லாஹ் மனித இனத்திற்கு சொல்லவருகிற படிப்பினையை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் சின்னச்சிறிய படைப்பான இந்த தேனீகளுக்கே அல்லாஹ் இது போன்ற ஆற்றலை தந்துள்ளபோது இதை விட பல மடங்கு பெரிதான மனிதனான நமக்கு எவ்வளவு அறிவை தந்துள்ளான் அவ்வறிவைக்கொண்டு எப்படி தேனீக்கள் பல நிலையிலும் பலவற்றுக்கும் நன்மை பயப்பதாக அதனுடைய படைப்புகளை இவ்வுலக்கிற்கு தந்துள்ளதோ அது போன்று மனிதர்களான நாம், நமக்கும் நம்மை சுற்றி வாழ்கின்ற சமுதாயத்திற்கும் நல்லது செய்வதற்காக நம்முடைய திறமைகளை பயண்படுத்தும் போதுதான், இந்த தேனீகளை விட நாமும், நன்மை தருபவர்களாவோம்.அல்லாஹ் இதற்காண சூழ்நிலைகளை நம் உள்ளங்களில் மலரவைப்பானாக!.

தேன் கூட்டின் அமைப்பு

[தொகு]மெழுகைக் கொண்டு கட்டப்படுகின்றது

தேனீயின் கூடு வேலைக்காரத் தேனீக்களின் உள்ளுறுப்புகளில் ஒன்றான மெழுகு சுரப்பியிலிருந்து சுரக்கும் மெழுகைக் கொண்டு கட்டப்படுகின்றது. இதுவே மனிதர்களின் பல பயன்பாட்டிற்கு உதவும் தேன் மெழுகு ஆகும். இவற்றின் கூடு பொதுவாக மரங்கள், மலைக் குகை, மனிதர்கள் எளிதில் அடைய முடியாத கட்டிடத்தின் முடுக்கு, பொந்துகள் போன்றவற்றில் கட்டப்பட்டிருக்கும்.

[தொகு]கூட்டு அறை மிக சரியாக அறுகோண வடிவத்தில் அமைந்துள்ளது

இவற்றின் கூட்டு அறை மிக சரியாக அறுகோண வடிவத்தில் அமைந்துள்ளது. கலைப் பொருட்களை நாம் எப்படி நேர்த்தியாக செய்வோமோ அந்த அளவிற்கு மிக நேர்த்தியாக, பார்க்க இரசனை அளிக்கக் கூடிய முறையிலே தேனீக்கள் கூட்டைக் கட்டுகின்றன. கணித ரீதியாக அறுகோண வடிவம் என்பது அதிக எடையைத் தாங்கும் அமைப்பாகும். இராணித் தேனீயின் குடம்பி அறை மட்டும் நிலக்கடலையின் வடிவிலும் மற்றவற்றைக் காட்டிலும் சற்றுப் பெரியதாகவுமிருக்கும். கூட்டின் மேற்பகுதியில் தேன் சேமிப்பு அறை அமைந்துள்ளது. இவற்றின் அறைச்சுவற்றின் தடிமன் ஒரு அங்குலத்தில் ஆயிரத்தில் இரண்டு பகுதி உடையதாயிருக்கும். இவை இந்த அளவிற்கு மெல்லியதாக இருப்பினும் அவை அதன் எடையைக் காட்டிலும் 25 மடங்கு எடையைக் தாங்கக் கூடிய திறன் உடையதாயிருக்கும். இவற்றின் கூடு முழுதும் இத்தகைய துளை அறைகளை கொண்டதாயிருக்கும். நாட்கள் கூடக் கூட இவற்றின் கூட்டின் அளவும் பெரியதாகிக் கொண்டே செல்கின்றது.

[தொகு]ஒரு கூட்டில் ஒரு இலட்சம் தேனீக்கள்

ஒரு நல்ல ஆரோக்கியமான கூட்டில் 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் தேனீக்கள் வரை இருக்கும். இத்தகைய பிரம்மாண்டமான எண்ணிக்கையில் இருப்பினும் கூட இவற்றிற்கிடையே எந்த விதமான நிர்வாகக் கோளாறுகளோ அல்லது குளறுபடிகளோ வருவதில்லை. ஒரு நல்ல கூட்டின் சுற்றளவு 3 மீட்டர் வரை கூட இருக்கும்.
இவற்றின் கூடு அதிகமான தேனீக்களின் எண்ணிக்கையினால் ஏற்படும் அதிக படியான எடையால் விழுந்து விடாமல் இருப்பதற்காக வேலைக்கார தேனீக்கள் மரங்களின் பிசினைக் கொண்டு, அவற்றில் சில நொதியங்களைச் சேர்த்து புரொபோலிஸ் என்னும் பிசின் போன்ற பொருளைக் கொண்டு உறுதியாக ஒட்டப்படுகின்றது. மேலும் இவற்றைக் கொண்டு கூடுகளில் ஏற்படும் விரிசல் போன்ற பழுதுகளைச் சரி செய்யப்படுகின்றன.

[தொகு]