Tuesday, December 14, 2010

ஆவிகள் உலகம்


ஜஸ்டிஸ் கிருஷ்ணய்யர். இந்தியாவின் தலைமை நீதிபதியாக இருந்தவர். இவர் ஆங்கிலத்தில் Death and After என்ற ஒரு ஆய்வு நூலை எழுதியிருக்கிறார். அதில் ஆவிகள் பற்றி பல சுவாரஸ்யமான சம்பவங்களைத் தெரிவித்திருக்கிறார்.

கிருஷ்ணய்யரின் மனைவி பெயர் சாரதா. அவர் இருதயக் கோளாறால் இறந்து விட்டார். இது கிருஷ்ண அய்யருக்கு மிகுந்த சோகத்தைத் தந்தது. 33 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இணை தன்னை விட்டுப் பிரிந்ததைப் பற்றி மிகவும் கவலை கொண்டார். மரணம் என்றால் என்ன, அதன் பின் மனிதர்களின் நிலை என்னவாகிறது என்பது பற்றியெல்லாம் ஆராய்ந்தார். ஆவிகளுடன் பேசும் முறைகள் பற்றியும் ஆய்வுகள் செய்தார். உலகெங்கும் பயணம் செய்து பல புகழ்பெற்ற மீடியம்களை சந்தித்தார். பல அதிசய அனுபவங்களை, தகவல்களைப் பெற்றார் என்றாலும் நேரடியாக அவரால் அவரது மனைவியின் ஆவியுடன் தொடர்பு கொள்ள இயலாமல் இருந்தது.

அவர் மனைவி சாரதாவின் ஆவி பிறர் கண்களுக்குத் தட்டுப்பட்டது. அவர்களோடு பேசியது. பல எதிர்கால தகவல்களைக் கூறி எச்சரிக்கை செய்தது. ஆனால் கிருஷ்ணய்யருக்கு மட்டும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. காரணத்தை சாரதாவின் ஆவியிடம் ஒரு நண்பர் வினவிய போது, ‘அவர் என் பிரிவால் அடைந்திருக்கும் சோகமும், அதனால் ஏற்படும் துயரமுமே மிகப் பெரிய திரையாகச் சூழ்ந்து அவரை என்னோடு தொடர்பு கொள்ள இயலாமல் செய்திருக்கிறது. அதை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும். மகிழ்ச்சியாக வாழ முயல வேண்டும்’ என்று அறிவுறுத்தியது.

இதனை அறிந்த கிருஷ்ணய்யர் மிகவும் துயரம் கொண்டார். ஒருநாள் கிருஷ்ணய்யரின் இல்லத்திற்கு ஒரு சாது வந்தார். அவர் புராணம் பிரசங்கம் செய்வதில் வல்லவர். மட்டுமல்ல’ ஆவிகளுடன் பேசுவதிலும் பயிற்சி பெற்றவர். அவர் கிருஷ்ணய்யருக்கு ஆவிகளுடன் பேசுவதற்காக சில பயிற்சி முறைகளை சொல்லித் தந்தார். ஆனால் அய்யர் அப்போது உச்ச நீதிமன்றத்தில் அமர்வு நீதிபதியாகப் பணியாற்றி வந்ததால் மிகுந்த வேலைப்பளு இருந்தது. அதனால் அந்தப் பயிற்சிகளைச் செய்ய இயலவில்லை. இனி கிருஷ்ணய்யர் கூற்றாகவே வருவதைக் காண்போம்.
அந்தச் சாது என்னோடு சிலநாட்கள் தங்கினார். என்னை தனது சிஷ்யப் பொறுப்பிலிருந்து விடுவித்தார். ஒருநாள்… பௌர்ணமி… இரவு… அன்று அவர் தியானத்தில் அமர்ந்தார். பின் தான் தற்போது சாரதாவின் ஆவியுடன் தொடர்பு கொள்ளப் போவதாகத் தெரிவித்தார். நானும் அதற்குச் சம்மதித்தேன்.

மறுநாள் காலை எழுந்ததும் அந்தச் சாது என்னைச் சந்தித்தார். தனது தியானத்தில் என் மனைவியைக் கண்டதாகவும் (அவர் முன்னமேயே என் மனைவியின் புகைப்படத்தைப் பார்த்திருந்தார்), அவர் பத்மா, காந்தா என்னும் இரண்டு பெயர்களை மட்டும் கூறி விட்டு உடனடியாக மறைந்து விட்டதாகவும் சொன்னார். நான் அதிர்ச்சியுற்றேன். காரணம், இந்த முன்பின் தெரியாத சாதுவால் அந்தப் பெயர்களை கற்பனை செய்து கூடச் சொல்லியிருக்க முடியாது. ஏனென்றால் பத்மா என்பது மனைவியின் சகோதரி பெயர். காந்தா என்பது என் மனைவியின் சகோதரர் பெயர் (காந்தா என்றுதான் அவரை அனைவரும் அழைப்பார்கள்). ஆக, இவர் என் மனைவியைக் கண்டதாகச் சொல்வது உண்மைதான் என உணர்ந்தேன்.

சில நாட்கள் போயிற்று. மீண்டும் அவர் ஒரு நாள் தியானத்தில் அமர்ந்தார். மறுநாள் அவர் தியானத்தில் கண்டவற்றை என்னிடம் சொல்ல ஆரம்பித்தார்.”என் தியானத்தில் உன் மனைவியைக் கண்டேன். ’ நான் என் கணவரது வருகைக்காக இங்கே காத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்குள் ஒருவேளை நான் மறுபிறவி எடுக்க வேண்டி வந்தாலும் வரலாம். அப்படி நான் மறுபிறவி எடுத்தால், சென்னையிலுள்ள டாக்டர் சந்தானம் – ஜெயா சந்தானம் தம்பதிகளுக்குக் குழந்தையாகப் பிறப்பேன்’ என்றாள் அவள்” என்றார் சாது.

நான் திகைத்துப் போய் நின்று விட்டேன், காரணம், சந்தானம் என்பது என் மனைவி சாரதாவின் இளைய சகோதரர் பெயர். அவர் சென்னயில் டாக்டராகப் பணியாற்றி வந்தார். அவரது மனைவி பெயர் ஜெயா. இதை அந்தச் சாது கற்பனை கூடப் பண்ணிச் சொல்லியிருக்க முடியாது. இந்த விஷயங்களை அவரிடம் சொல்வதற்கான ஆட்களும் அப்போது என் வீட்டில் இல்லை. இது உண்மைதான் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டுமா?’ என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணய்யர்.

இதுமட்டுமல்ல; முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் போன்றவர்களும் ஆவி உலக ஆய்வில் நம்பிக்கை கொண்டதாகவும் அவர் அந்நூலில் தெரிவித்திருக்கிறார்.

அனுபவமே உண்மை ஆசான்!

ஆன்மீகம்

மகாலட்சுமி


"பொன்னரசி நாரணணார் தேவி புகழரசி மின்னுநவரத்னம் போல் மேனி அழகுடையாள் அன்னையவள் வையமெலாம் ஆதரிப்பாள் ஸ்ரீதேவி தன்னிரு பொற்றாளே சரண்புகுந்து வாழ்வோம்%27.

(மகாகவி பாரதி)

மனிதரொருவனைப் பரிபூரணமான நிறைமனிதனாக்குவது வீரம்,செல்வம்,கல்வி என்பனவாகும். பொருள்வளம்,செல்வவளத்திற்கு அதிபதியாக விளங்குபவள் மகாலட்சுமியாவாள். அத்தகைய மகாலெட்சுமி அம்சங்களைக் கொண்டவர்கள் பெண்களேயாவர். எனவேதான் பெண்களை வீட்டுக்கு விளக்கேற்ற வந்த இல்லத்தரசி மகாலட்சுமியென்று இன்றும் கூறும் மரபு உண்டு. அத்தகைய பெண்கள் தெய்வீகம் வாய்ந்த பெண்தன்மையான மென்மைக் குணங்கட்கு மீறி நடப்பார்களேயானால் அவர்கள் பேய்களுக்குச் சமம் என அறிவாளிகள்,சான்றோர் கூறுவர்.

மகாலட்சுமியானவள் அதிகமாக அநேகமாக பசுவின் பின்புறம் யானையின் முகம்,தாம்பூலம்,மலர்திருவிளக்கு,நறுமணமுள்ள சந்தனம்,கன்னிப்பெண்கள், உள்ளங்கை, பசுமாட்டின் காற்×சி, வேள்விக்புகை போன்ற இடங்களையெல்லாம் தனது வதிவிடமாக்கிக் கொண்டாள். ஸ்ரீ மகாலட்சுமியானவள் ஸ்ரீரங்க ஷேத்திரவிருட்சமரத்தில் வில்வம் போன்றவற்றை நாடுபவள்.வில்வமரத்தில் ஸ்ரீ மகாலட்சுமி வாசம் செய்கிறாள். வில்வத்தால் அர்ச்சனை செய்வதும் வில்வமரத்தைப்பேணுவதும் ஸ்ரீ மகாலட்சுமிக்குப் பிரியமானதாகும். சூரியனைப் போன்ற ஒளியுடைய ஸ்ரீ மகாலட்சுமியே உன்னருளால் உண்டாகிய "வனஸ்பதி%27 என்று புகழ்பெற்ற வில்வமரம், அதனுடைய பழம் எங்கள் மனதையும் புற இந்திரியங்களையும் பற்றியுள்ள அஞ்ஞானத்தையும் மங்களமற்றவற்றையும் நீக்கிவிடும்.

தேவர்கள் சாவா மருந்தாகிய தேவாமிர்தம் பெறுதற்பொருட்டுத் திருப்பாற்கடலைக் கடையவிரும்பி மேருமலையை மந்தாகவும், வாசுகியென்னும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு ஒருபுறம் தேவர்களும்,மறுபுறம் அசுரர்களுமாக நின்று திருப்பாற்கடலைக் கடைந்தபோது ஸ்ரீ மகாலட்சுமியுடனே சந்திரன், கௌத்துவமணி,காமதேனு முதலியன வெளிவந்தன. இவைகள் யாவும் ஸ்ரீ மகாலட்சுமிதேவியுடன் சிறந்தவைகளாகும்.

தாமரைமலர் ஸ்ரீ மகாலட்சுமியுடன் பிறந்தவனான சந்திரனைக் கண்டதும் அவனை வெறுத்து இதழ்களைக் குவிக்கும் பழக்கத்தை வழக்கமாகக்கொண்டது. இதனைக் கண்ட மகாலட்சுமி தாமரை மலரில் அதிகமாக வசிக்காது தன்னுடன் பிறந்த கௌத்துவ மணிக்குப் பெருவாழ்வு கொடுக்க எண்ணி அதனை அணிகின்ற திருமாலின் மார்பில் நித்தியவசிப்பிடம் கொண்டாள்.இதனால் மக்கள்உலகவர் உடன் பிறந்தோரை வெறுத்துச் சினங்காது நேசமாகவும் அந்நியோந்நிய உறவுடன் இருப்பதனையுமே ஸ்ரீமகாலட்சுமி அதிகம் விரும்பிப் பேரருள் புரிவாள். மகாலட்சுமியானவள் நெல்லிமரத்திலும்,நெல்லிக்கனியிலும் அதிக விருப்பமுடையவள்.இவை எங்கெங்கெல்லாம் காணப்படுமோ அங்கங்கெல்லாம் ஸ்ரீ மகாலட்சுமி வாசஞ்செய்வாள். நெல்லிக்கனி சாப்பிடுவதால் ஆரோக்கியமும் புண்ணியமும் கிடைக்கின்றன.ஆனால், வெள்ளிக்கிழமைகளிலும் இரவிலும் உண்ணக்கூடாது.நெல்லிமர நிழலிலே அன்னமளிப்பது மிகவும் சிறப்பானது. துவாதசியன்று நெல்லிக்காயை உணவிலே சேர்த்தால் ஏகாதசி பலனுண்டு.

வெண்ணிற மாடப்புறாக்கள் வாழும் இடங்கள் கலகம் என்பதையே அறியாத பெண்கள் வதியும் வீடுகள்,தானியக் குவியல்கள் உமிசிறிதுமில்லாத அரிசிக் குவியல்,எல்லாருடனும் பகிர்த்துண்டு வாழும் மனிதன்,இனிமையோடும் கனிவோடும் இருக்கும் மனிதன், நாவடக்கம் உள்ளவன்,உணவு உண்பதிலே அதிக நேரம் போக்காதவன், பெண்களைத் தெய்வமாக மதிப்பவன் இவர்களிடத்தில் ஸ்ரீ மகாலட்சுமி நித்திய வாசம் செய்வாள்.வலம்புரிச் சங்கு, நெல்லிக்காய்,கோமயம்,தாமரை வெண்மை, பரிசுத்தமான ஆடை அணிகளிலும் ஸ்ரீ மகாலட்சுமி நித்தியவாசம் செய்வாள்.

ஸ்ரீ மகாலட்சுமிக்கு வேண்டத்தகாதவைகளும்/ செய்யத்தகாதவைகளும்:

பூஜைகளிற் பயன்படுத்தப்பட்ட மலர்கள், கெட்டமணம் வீசும் மலர்கள், அழுக்கான இடத்திற்படுத்தல், உடைந்த ஆசனப்பலகையை உபயோகித்தல், அவலட்சணமான பெண்ணின் உறவு என்பனவற்றை அறவே வெறுத்து நீக்கவேண்டும்.

மயானக்கரி,சுடுகாட்டெலும்பு,அக்கினி விபூதி, அந்தணன்,பருத்திவிதை,பசு,உமி,

குருவின் திருவடி, எச்சில் இவைகளைக் காலால் மிதித்தல் கூடாவரம்.

தன்னுடைய ஒருகாலை மற்றொரு காலாலே தேய்த்துக் கழுவுதல்,ஈரக்காலுடன் படுத்தல்,இருக்கும்போதும் படுக்கும்போதும் கால்களை ஆட்டுதல் கூடாது.

சதுர்த்தசி,அமாவாசை, காலை, மாலை உடலற்ற தலையற்ற நட்சத்திர நாள்களிலும் மாதர் உறவு ஆகாது.ஆடையில்லாமல் குளிக்கவோ,படுக்கவோ ஆகாது.அழுக்கான ஆடைகளை அணிதல் கூடாது.துடைப்பத்தின் தூசி, ஆட்டீன் காற்×சி, கழுதைப் புழுதி,பெண்களின் நடைப்புழுதி மனிதர் மீது படுதல் ஆகாது.வில்வம் விலக்கப்பட்ட காய்கறிகள், தயிர் ஆகியவற்றை இரவில் உண்ணுதல் ஆகாது.இருட்டிற் படுத்தல் கூடாது.எச்சிற்கையாற்றலையைத் தொடுதல் ஆகாது.இடது கையாற் தீண்டிக்கொண்டும் சோம்பேறிபோல் இருப்பதும் ஆகாது.ஆண்கள் வெள்ளிக்கிழமையில் எண்ணெய் தேய்த்து முழுகக்கூடாது.அமாவாசையில் வாசனைப்பொடி தேய்த்துக்குளித்தல் ஆகாது.அசுத்தமாக இருக்கும்போது சூரிய, சந்திரரைப் பார்த்தல் கூடாது.சூரிய உதயத்திற்கு முன் படுக்கைவிட்டு எழுதல் வேண்டும்.நகம்,முள்,இரத்தம்,மண்கட்டி,கரி இவற்றால் நிலத்தில் கீறுதல் கூடாது.சந்தனம்,சுகந்தம்,புஷ்பம்,தண்ணீர்,இரத்தினம்,கடல் இவற்றைக் கண்டால் வணங்குதல் வேண்டும்.

நீங்காத செல்வம் நிறைந்து வாழ விரும்பின் பிறர் தேடிவைத்த பொருளிலும் பிறர் மணந்த மாதரிடத்தும் மனத்தைச் செலுத்துதலாகாது.

பெருந்தீனியின்றி மனிதர் அளவோடு உண்ண வேண்டும்.அன்னத்தை சோற்றைக் கவளமாக உருட்டி விளையாடுதல் ஆகாது.

முகம்,செவி,மூக்கு,பாதம்,முதுகு,இருகால்கள்,இரு கண்கள் ஆகிய இடங்களிலே சந்தனம் பூசுதல் ஆகாது.முற்கூறப்பட்டவற்றை அவதானித்து அனுசரித்து ஒழுகிவந்தால் ஸ்ரீ மகாலட்சுமியின் பேரருள் கிடைக்கும்.

அஷ்ட இலட்சுமிகள் எழுந்தருளியிருக்கும் இடங்கள்

அபயம் தரும் திருக்கரங்களுடையவளாய் தாமரை மலர் மாலை அணிந்த கழுத்தினளாய் இருபக்கங்களிலும் இரு தீபங்களால் அலங்கரிக்கப்பட்டவளும்,தாமரை மலரில் வீற்றிருப்பவள் ஆதிலட்சுமி எனப்படுவாள்.

தண்ணீர் நிறைந்த குடம்,கத்தி,அபயம்,சிசு(பிள்ளை)இவைகளை நான்கு கரங்களில் வைத்திருப்பவளும் இரண்டு சக்திகளால் அலங்கரிக்கப்பட்டவளும் தாமரை மலரிலே வீற்றிருப்பவளும் சந்த õனலட்சுமி என்று அழைக்கப்படுவாள்.

இரண்டு திருக்கரங்களிலும் இரு தாமரை மலர்களையும் இருகரங்களில் வரத,அபயங்களையும் தாங்கிக் கொண்டு இருப்பவளும் யானைகளால் அபிடேகம் செய்விக்கப்படுபவளும் கஜலட்சுமி எனப்படுவாள்.

சங்கு,சக்கரம்,குடம்,தாமரைமலர், வில்,அம்பு,கூடை,அபயம் இவற்றைத் தாங்கும் எண்கரத்தினளும் தங்கம் போன்ற திருமேனியுடையவளும் தனலட்சுமி எனப்படுவாள்.

வரதம்,அபயம்,தாமரைமலர்,கரும்பு இவைகளைத் தரிக்கும் நான்கு திருக்கரங்கள் உடையவளாயும் சம்பா நெற்பயிர்,வாழைமரங்கள் முதலியவற்றால் சூழப்பட்டவளாயும் தானியச் செல்வத்தை அளிப்பவளாயும் இருப்பவள் தான்ய லட்சுமி எனப்படுவாள்.

சக்கரம்,சங்கு,வரதம்,அபயம்,பாசம்,அங்குசம்,கத்தி,கேடயம் இவற்றை எட்டுக் கரங்களில் தரித்திருப்பவளும் விஜயா என்ற பெயர் கொண்டவள் இராஜ்யலட்சுமி எனப்படுவாள்.

இரண்டு தாமரை மலர்களையும் வரத,அபயங்களையும் தாங்குகின்ற நான்கு கரத்தினளாய் இரண்டு யானைகளால் பூசிக்கப்படுபவளாய் வெண்ணிற பட்டாடை தரிப்பவளாய்,தாமரை மலரில் வீற்றிருப்பவளாய் இருப்பவள் சௌபாக்கிய லட்சுமியாவாள்.

வரதம்,அபயம்,வில்,அம்பு,சங்கு,சக்கரம்,சூலம்,கபாலம் இவற்றைத் தரித்திருப்பவள் வீரலட்சுமி எனப்படுவாள்.

உலகிலுள்ள பெரிய வணிக நிறுவனங்கள்,நகைமாளிகைகள்,வர்த்தக நிலையங்கள்,சைவாலயங்கள்,விஷ்ணுவாலயங்கள் என்பவற்றிலே ஸ்ரீ மகாலட்சுமி தேவியின் திருவுருவப்படங்கள் இடம்பெற்றிருப்பதனைக் காணமுடியும்.வங்கிகளிலும் கல்லூரிகளிலும் பாடசாலைகளிலும் கூட ஸ்ரீ மகாலட்சுமியின் திருவுருவம் தென்படும்.செந்தாமரை மலரை உறைவிடமாக கொண்ட உருவமே பெருமளவில் காணப்படுகின்றன.மகாலட்சுமியை "ஸ்ரீதேவி, "அலைமகள், "பொன்னரசி, "இலட்சுமி, "செல்வமகள், "செந்தாமரை ராணி, "திருமகள், "மங்களலட்சுமி என்றெல்லாம் அழைக்கப்படுகிறாள்.மகாலட்சுமியின் கணவன் மகாவிஷ்ணுமூர்த்தியாவார்.நாமும் நவராத்திரி தினத்திலே ஸ்ரீ மகாலட்சுமிதேவியை பக்தியுடன் தொழுது செல்வவளம் செழிக்கப்பெற்று ஆனந்தவாழ்வு வாழ்வோமாக.

Saturday, December 11, 2010

காளான் வளர்ப்பு


காளான் வளர்ப்பு 


தற்போது காளான் வளர்ப்பு பிரபலமாகி வருகிறது. மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி தாவரவியல் பேராசிரியர் ராஜேந்திரன் காளான்கள் குறித்து நீண்ட காலமாக ஆய்வு செய்து வருகிறார். அவ்வப்போது விருப்பம் உள்ளவர்களுக்கு காளான் வளர்ப்பு குறித்து இலவச பயிற்சியும் அளித்து வருகிறார். இங்கு அவர் காளான் பற்றிய தகவல்களை நம்மிடம் அக்ரி இன்போமீடியா விற்காக பகிர்ந்து கொண்டார்.
காளானில் லெண்டிக்காளான், சிப்பிக்காளான், முட்டைக்காளான். மார்செல்லா என்ற மண்ணுக்கடியில் விளையும் கருப்புக்காளான்கள் ஆகியவை உணவுக்காக உற்பத்தி செய்யப்படுகின்றன. உணவுக்காளான்கள் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் இருக்கும். விஷக்காளான்கள் பல்வேறு நிறங்களில் இருக்கும். பால் வடியும் காளான்களும் உணவுக்கு  ஏற்றவை அல்ல.
காளான்களில் பலவகைகள் இருந்தாலும், குறைந்த முதலீட்டில், சிறிய இடத்தில் ஆண்டு முழுவதும் வளர்க்க கூடிய ரகமாக இருப்பது சிப்பிக்காளான் மட்டுமே. இந்த வகை காளான்களை சிறிய கொட்டகையில் எளிதாக வளர்க்க முடியும்.சிப்பிக்காளானில் பி.எப்.இ, கோ.13,ஏபிகே1, எம்டியு1 என்ற ரகங்கள் உள்ளன. இதில் பி.எப்.இ ரகம் பல்வேறு நாடுகளில உள்ள விவசாயிகளால் விரும்பி வளர்க்கப்படுகிறது.
காளான் வளர்க்க விரும்புபவர்கள், வளர்க்க திட்டமிட்டுள்ள அளவிற்கு தக்க கொட்டகை ஒன்றை அமைத்துக் கொள்ள வேண்டும். நாளொன்றுக்கு 10 கிலோ அளவிற்கு காளான்களை அறுவடை செய்ய வேண்டுமென்றால், 200 முதல் 250 சதுர அடியில் கீற்றுக் கொட்டகை அமைக்கலாம்.கான்கீரிட், ஓடு வீடாக கூட இருக்கலாம். வடக்கு, தெற்கு வசம் பார்த்த நிலையில்  இருப்பது நல்லது.
இதற்கடுத்து, இந்த இடத்தில் வெப்பதடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும. காளான்  வளர்ப்பு இடத்தில் அதிக வெப்பம் இருக்க கூடாது. வெப்பத்தை கட்டுப்படுத்தும் வகையில்,  முதலில் வீட்டின் தரையில் ஆற்றுமணலை 1 அடி உயரம் வரை இருக்கும்படி நிரப்ப வேண்டும்.  பின்னர் வீட்டின் சுற்றுச்சுவர்களில் சாக்கு படுதாக்களை கட்டி தொங்க விட வேண்டும். காளான் படுக்கைகளை வைப்பதற்கு தகுந்தபடி மரஅடுக்குகளை செய்து கொள்ள வேண்டும்.
நாளொன்றுக்கு 10 கிலோ காளான் வளர்க்க வேண்டுமென்றால், 20 காளான் படுக்கைகள், 10 பாட்டில் காளான் விதைகள், 10 கிலோ வைக்கோல் தேவைப்படும். காளான் வளர்ப்பிற்கு ஊடகமாக, காய்ந்த நெல், கரும்பு சக்கை ஆகியவற்றை கூட பயன்படுத்தலாம். இருந்தாலும் வைக்கோலில் தான் விளை திறன் அதிகம்.
விளைவிக்கும் முறை
காளான் விளைவிக்க, காளான் படுக்கைகளை முதலில் தயார் செய்ய வேண்டும். அதற்கு ஊடகமாக பயன்படுத்த போகும் வைக்கோலை 5 முதல் 10 செ.மீ அளவுகளில் வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். வெட்டப்பட்ட வைக்கோல் துண்டுகளை நீரில் 12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். ஊறிய வைக்கோலை அண்டாவில் இட்டு வேக வைக்க வேண்டும்.பின்பு தண்ணீரை வடித்து விட்டு,  கிருமி நாசினி கொண்டு  துடைக்கப்பட்டதரையில் 50 சதவிகிதம்  ஈரப்பதம் நீங்கும் வரை உலர்த்த வேண்டும்.
காளான் இடுதல்
இதற்கடுத்து காளான் விதைகளை முளைப்பதற்கு தயார் செய்ய, பாலீதின் பைகளில் வைக்கோலை நிரப்ப வேண்டும். சிறிது வைக்கோல் நிரப்பி பின்னர் அதன் மீது காளான் விதைகளை தூவ வேண்டும். பின்னர் இதன் மேல் சிறிது வைக்கோல் நிரப்பி, அதற்கு மேல் காளான் விதைகளை தூவி வரவேண்டும். இவ்வாறாக பாலீத்தின் பை நிரம்பும் அளவு செய்ய வேண்டும். இறுதியில் பையின் வாய்ப்பகுதியை தைத்து விடவேண்டும்.
இப்படி விதை நிரப்பப்பட்ட பாலீதீன் பைகளை காளான் வீட்டிற்குள் இருக்கும் மரப்படுக்கைகளில் வைத்து விடலாம். காளான் அறையின் வெப்பநிலை சுமார் 24 முதல் 28 டிகிரி வரையும், ஈரப்பதம் 70 முதல் 80 சதவீதம் வரையும் இருக்க வேண்டும். இந்த நிலையில் காளான் விதைகள் முளைத்து மைசீலியங்கள் என்ற மொட்டுக்களை பை முழுவதும் பரப்ப தொடங்கும். இதற்கு பூசணம் பரவும் நிலை என்று பெயர்.
காளான் வீட்டின் வெப்பநிலையை சீராக வைக்க உள்ளே தொங்கவிடப்பட்ட சாக்கு பைகளின் மீதும், ஆற்று மணலின் மீதும் நாளொன்றுக்கு இரண்டு முறை  தண்ணீரை தெளித்து வர வேண்டும். இப்படி பராமரிக்கும் போது 5,6 நாட்களில் வளர்ச்சி பெற்ற காளான்கள் வரத்தொடங்கும். இவற்றை அறுவடை செய்யலாம்.
விளை திறனை அதிகப்படுத்தும் முறைகள்
வைக்கோலை ஊடகமாக பயன்படுத்தும் போது காளானின் விளை திறன் 80 சதவீதம் அளவு இருக்கும். ஆனால் வைக்கோலுடன் கானபயிறு பொடி, துவரைப்பொடி, தேங்காய் தண்ணீர், சாணஎரிவாயு கலனிலிருந்து எடுக்கப்பட்ட கரைசல் போன்றவற்றை சேர்த்து முளைக்க வைக்கும் போது 20 முதல் 40 சதம் வரை காளானின் விளை திறன் உயரும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
காளான் அறுவடை
காளான்களை அதிகாலையில் அறுவடை செய்ய வேண்டும். பறித்த காளான்களில் வேர்ப்பகுதியை வெட்டி எடுத்து விடவேண்டும். பறிக்கும் போது பாலீதின் பையில் இருக்கும் மற்ற காளான் மொட்டுக்களுக்கு பாதிப்பு வராமல் எடுக்க வேண்டும். காளான்கள் பறித்த உடன் அழுக தொடங்கும். எனவே பறித்த உடனேயே அவற்றை பாலிதீன் பைகளில் போட்டு அடைத்து விட வேண்டும். காற்றோட்டத்திற்காக இந்தபையின் மேற்பரப்பில் பென்சில் முனை மூலம் சில துளைகளை இடலாம். இந்த பைகளை ஈரத்துணியில் சுற்றி குளிர்நத நிலையில் வைப்பதன் மூலம் 24 மணி நேரங்களுக்கு கெடாமல் பாதுகாக்கலாம். 5முதல் 10 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் வைத்தால் 3 நாட்கள் வரை  பாதுகாக்கலாம்.
காளான் பைகளை வேறிடங்களுக்கு எடுத்துச் செல்ல ஐஸ்கட்டி நிரப்பிய பெட்டியில் எடுத்து செல்லலாம்.நீண்ட நாளைக்கு கெடாமல் இருக்க காளான்களை வேருடன் வெட்டி எடுத்து, மண்,தூசிகளை நீக்கி நீளவாக்கில் இரண்டாக நறுக்கி, நறுக்கிய துண்டுகளை வெள்ளைத்துணியி்ல் கட்டி கொதிநீரில் முக்கி எடுக்க வேண்டும். பின்னர் வெயியே எடுத்து நீரை வடித்து விட்டு டப்பாக்களில் அடைக்கலாம். பின்னர் மூடியை சீல் செய்து டப்பாக்களை குளிர்ந்த நீரில் முக்கி எடுத்து விற்பனைக்கு அனுப்பலாம்

சோற்று கற்றாழை


சோற்று கற்றாழை

கற்றாழை வறட்சியான பகதிகளில் வளர்ப்பதற்கேற்ற ஒரு மருந்துச் செடி ஆகும். உன்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு அழகுச் சாதனங்கள் மருந்துப் பொருட்கள் தயாரிப்பதற்கு கற்றாழை பெரிதும் பயன்படுகின்றது. வறட்சிக்கு ஒரு வரப்பிரசாதமாக விளங்கும். கற்றாழை லில்லியேசி தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஆப்பிரிக்காவை தாயாகமாகக் கொண்டது. மேலும் கிரீஸ், பார்படோ தீவுகள், சீனா, இத்தாலி, வெனிசுலா,தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இயற்கையான வளர்கின்றது. இந்தியாவில் ஆழ்வார் (ராஜஸ்தான்), சட்நாபள்ளி (அந்திரா), ராஜபிப்லா (குஜராத்), சேலம் மற்றும் தூத்துக்குடி (தமிழ்நாடு) ஆகிய நாடுகளில் சாகுபடி செய்யப்படுகின்றது.


கற்றாழை இலையிலிருந்து எடுக்கப்படும் “ஜெல்” எனப்படும் “கூழ்” சருமத்தின் ஈரத்தன்மையை (Moisture) பாதுகாக்கப்படுகிறது. இதன் தேவைக்கு இயற்கை சூழ்நிலையிலிருந்து கற்றாழைச் செடிகள் சேகரிக்கப்பட்டு பக்குவப்படுத்திய பிறகு மருந்துப் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றது. இருப்பினும், தரம் வாய்ந்த கற்றாழைக்கூழ், எடுப்பதற்கு தென்னாப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், குர்குவா தீவுகள், இந்தியா ஆகிய நாடுகளில் வணிக ரீதியாக பயிர் செய்யப்படுகிறது.


பயன்கள்


கற்றாழையின் இலையிலிருந்து எடுக்கப்படும் “ஜெல்” அதாவது “கூழ்” சருமத்திற்கு பாதுகாப்பதாக கருதப்படுகிறது. சூரிய ஒளியுடன் கலந்து வரும் கடும் வெப்பத்தை ஏற்படுத்தும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் தீய விளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றது. மேலும் சருமத்தின் ஈரத்தன்மையை காத்து சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்துகிறது. இதனால் வணிக ரீதியாக அதன் “கூழி” உலகெங்கிலும் சரும் லோசன், சவரம் செய்வதற்கான க்ரீம், ஷாம்பூ ஆகியவற்றால் சேர்க்கப்படுகின்றது.


கற்றாழையின் மருந்து மகத்துவத்தை கி.பி. 17 ஆம் நூற்றாண்டிலேயே ஆப்பரிக்கர்கள் கண்டறிந்து உலகத்துக்கு அறியப்படுத்தினர்.
கற்றாழையின் இலையில் ‘அலோயின்’ ்அலோசோன்’ போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன. ‘அலோயின்’ வேதிப்பொருளின் அளவு நான்கிலிருந்து இருபத்து ஐந்து சதம் வரை இதன் இலையில் காணப்படுகிறது.
சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கற்றாழைச்சாறு, இருமல், சளி, குடல்புண் ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகின்றது. கடும் வயிற்றுப்புண், தோலில் ஏற்படும் தீக்காயம், அரிப்பு வெட்டுக்காயங்கள் ஆகியவற்றிற்கும் மருந்தாகப் பயன்படுகின்றது.


இரகங்கள்


கற்றாழையில் மூன்று வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. அவை
1. குர்குவா கற்றாழை - அலோ பார்படென்ஸ் (Aloe vera)
2. கேப் கற்றாழை - அலோ பெராக்ஸ் (Aloe ferox)
3. சாகோட்ரின் கற்றாழை - அலோ பெர்ரி (Aloe perryi)


இவற்றில் முதல் இரண்டு வகைகள் “பார்பலோயின்” (Barbaloin) மற்றும் “அலோ எமோடின்”ஆகிய வேதிப்பொருட்களுக்காக சாகுபடி செய்யப்படுகின்றது. இவற்றின் “ஜெல்” “முசபார்” எனும் மருந்துப் பொருள் தயாரிக்கப்பட்டு வலி நிவாரணியாக உபயோகப்படுத்தப்படுகின்றது. கேப் கற்றாழை கால்நடைகளின் மருத்துவத்தில் பயன்படுகின்றது.


கற்றாழையில் ஜான்சிபார் கற்றாழை, யுகான்டா கற்றாழை மற்றும் நேட்டல் கற்றாழை, ஜஃபராபாத் கற்றாழை ஆகியவை தரம் வாய்ந்தது. இவற்றின் “கூழ்” கண்ணாடி போனறு அழகிய தோற்றத்தையும் மருத்துவத் தன்மையும் இருப்பதாக கருதப்படுகின்றது.
இந்தியாவில் அலோ பார்படன்சிஸ் (அலோ வீரா) நாடு முழுவதும் காணப்படுகின்றது. இது வறட்சியான சூழ்நிலையில் கடல் மட்டத்திருலிருந்து 1000 அடி உயரம் வரை உள்ள மலைப்பிரதேசங்களில் வளர்கின்றது.
இதன் இலைக்ள தடிமனாகவும், சிறிது சிவப்பு கலந்த பச்சை நிறத்தில் 30 முதல் 60 செ.மீ நீளமாகவும், சிறிறய முட்டைகளுடன் இருக்கும். செடிகள் நட்ட இரண்டாவது வருடத்தில் தான் பூக்கும். செடிகளில் பூக்கள் தோன்றினாலும் மகரந்தங்கள் செயலிழந்த இருப்பதால் காய் மற்றும் விதைகள் பிடிப்பதில்லை. இதனால் கற்றாழையை பக்கக் கன்றுகள் மூலமாகத் தான் பயிர்ப்பெருக்கம் செய்யவேண்டும்.


தரிசு மண், மணற்பாங்கான நிலம், பொறை மண் போன்றவை ஏற்றது. எனினும் எல்லா வகையான மண்ணிலும் கற்றாழையை சாகுபடி செய்யலாம். காரத்தன்மை 7 முதல் 83.5 வரை உள்ள மண் வகைகளில் கற்றாழை வளர்கின்றது. நல்ல வடிகால் வசதியுடன் கூடிய மணங்பாங்கான நிலம் மிகவும் ஏற்றது.
மண் மற்றும் தட்பவெப்பநிலை


வறட்சியான தட்பவெப்பத்தில் அதாவது 42 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் உள்ள பகுதிகளில் நன்றாக வளர்கின்றது. எனினும் 25 முதல் 45 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை உள்ள வெப்ப மண்டலப் பகுதிகளில் வணிக ரீதியாக பயிர் செய்யலாம். தமிழ்நாட்டில் இராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் பயிர் செய்யலாம்.


விதையும் விதைப்பும்


தாய்ச்செடியிலிருந்து ஒன்று அல்லது இரண்ட மாத வயதுடைய பக்க்க கன்றுகளைப்பிரித்து பயன்படுத்தவேண்டும். ஒரே அளவிலள்ள பக்கக் கன்றுகளைத் தேர்ந்து எடுப்பது மிகவும் முக்கியம். இதனால் செடிகள் சீராக வளர்வதுடன் ஒரே சமயத்தில் அறுவடைக்கு வரும். பக்கக் கன்றுகளை பிரித்ததும் அவற்றின் வேரை கார்பன்டாசிம் கரைசலில் (லிட்டருக்கு 1 கிராம் கார்பன்டாசிம் மருந்து) ஐந்து நிமிடத்திற்கு நனைத்தபிறகு நடுவதால் அழுகல் நோய் வராமல் பாதுகாக்கலாம். கற்றாழையை தனிப்பயிராக சாகுபடி செய்யும்போது எக்டருக்கு 10,000 பக்கக் கன்றுகள் தேவைப்படும்.


விதைக்கும் பருவம்


கற்றாழையை வருடத்திற்கு இரண்டு பருவங்களில் அதாவது ஜுன் - ஜுலை மற்றும் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் நடவு செய்யலாம். இலைகள் முதிர்ச்சி பெறும் தருவாயில் ஓரளவு வறட்சியான தட்பவெப்பம் இருக்கவேண்டும். இதனால் இலையில் தரமான “கூழ்” கிடைக்கும். இதற்காக செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் நடவு செய்வது நல்லது.


நிலம் தயாரித்தல்


நிலத்தை இரண்டு முறை உழுது எக்டருக்கு 10 டன் தொழு எரு இட்டு, சமன் செய்து சிறிய பாத்திகளை அமைக்கவேண்டும். செடிகள் வாளிப்பாக வளர்வதற்காக செடிக்குச் செடி மூன்று அடி இடைவெளி விட்டு நடவேண்டும். மலைச் சரிவுகளின் குறுக்காக சிறிய பார்களை அமைத்து பாரின் மேல் அடிப்பகுதியில் பக்கக்கன்றுகளை நடவு செய்யவேண்டும்.


ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை


கற்றாழைச் செடிகளுக்க இராசயன உரங்கள் தேவைக்கேற்ப இடவேண்டும். வளமான நிலங்களுக்கு தொழு எரு இட்டால் போதுமானது. தரிசு மற்றும் வளமில்லாத மண்ணிற்கு செடிகளை நட்ட 20வது நாளில் எக்டருக்கு 30 கிலோ தழைச்சத்து உரத்தை இடுவது அவசியம். எக்டருக்கு 120 கிலோ உரத்தையும் அடியுரமாக இடுவது நல்லது. இதனால் அதிகளவு “கூழ்” மகசூல் கிடைக்கும்.


நீர் நிர்வாகம்


கற்றாழையை மானாவாரிப் பயிராக பயிர் செய்ய ஏற்றது. மஹாராஷ்டிர மாநிலத்தில் இப்பயிரை வருடம் முறை சாகுபடி செய்கின்றன. கோடைக்காலத்தில் பயிர் செய்ய அதன் மொத்த் பயிர் காலத்ததில் அல்லது ஐந்து நீர்ப்பாசனம அளிக்கின்றன.


ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு


கற்றாழையில் அதிக பூச்சி நோய் தோன்றுவதில்லை. நிர் தேங்கும் நிலத்தில் அழுகல் நோய் ஏற்படும். நிலத்தில் வடிகால் வசதியை இலையில் அதிகளவு அலோயின் (Aloin) வேதிப்பொருள் காணப்படும். செடிகளை வேரோடு பிடுங்கி எடுத்து, இலைகளை ஆறு மணிநேரத்திற்குள் பக்குவப்படுத்துவதற்கு எடுத்துச் செல்லவேண்டும்.


மகசூல்


எக்டருக்கு 15 டன் கற்றாழை இலை மகசூலாகக் கிடைக்கும். இலையில் 80 முதல் 90 சதம் நீர் உள்ளதால் விரைவாக கெட்டுவிடும். இதனால் அறுவடை செய்த உடனே இலைகளை பக்குவப்படுத்தி அவற்றிலிருந்து “கூழ்” (Gel) யை பிரித்தெடுக்கவேண்டும்.

Tuesday, December 7, 2010

இயற்கை வேளாண்மை

1. உழுத நிலம் கேட்பதில்லை வனத்தில் முளைக்கும் விதைகள்

2.மழை மண்ணிலிருந்தோ விண்ணிலிருந்தோ உண்டாவதில்லை. அது மரங்களிலிருந்து உண்டாகிறது.

3. இயற்கை வேளாண்மை உலகின் எப்பகுதிக்கும் பொருந்தும்.

4. இயற்கை ஒருபோதும் மாறுவதில்லை.அதை நோக்கும் நமது பார்வைதான் காலத்திற்கு காலம் மாறுபடுகிறது. காலம் எவ்வளவுதான் மாறினாலும் வேளாண்மையின் பாதுகாவலனாக இயற்கை வேளாண்மை விளங்கும்


5. சுற்றுச்சூழல் கெடுவதால் இயற்கையின் சமநிலை பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக இயற்கையின் ஒரு பகுதியான மனிதனின் மனமும் மாசு படுகிறது. அதனால், மன இறுக்கம் மற்றும் தீமை பயக்கும் எண்ணங்கள் தோன்றுகின்றன.


6. நிலம் , நீர் , மரம் , பூச்சி -- இவைகளை அப்படியே விட்டுவிட்டு விளைச்சல் பெரும் வேளாண்மைதான் இயற்கை வேளாண்மை


7. உற்பத்திக்கு பயன்படுத்திய சக்தியை மட்டும் கணக்கிட்டுப் பார்த்தாலே இயற்கை வேளாண்மை மட்டுமே சிறந்த வேளாண்மை என்பது புரியும்


8. எந்த இயற்கைக்குத் திரும்ப மனிதன் ஆசையோடு முயற்சிக்கிறானோ, அந்த இயற்கையின் அடிப்படையே ,மாறி நிரந்தரமாக வேறுபட்டு விட்டால், எப்படி அதை அடைவது?


9. உண்மையான சந்தோஷமான வாழ்க்கையை ஒருவன் இயற்கையோடு இணைந்துதான் 
அனுபவிக்கமுடியும்.



இயற்கை முறை காய்கறி சாகுபடி குறிப்புகள் மற்றும் இயற்கை உரமிடுதல்: வேளாண் பயிர்க் கழிவுகளை மக்க வைத்து இயற்கை தொழு உரம் தயார் செய்துவிடலாம். பசுந்தாள் உரங்களை தக்கைப்பூண்டு, அகத்தி, சணப்பை, கொளிஞ்சி போன்றவற்றை பயிரிட்டு மக்க வைத்து பயன்படுத்தலாம். கம்போஸ்ட் எரு, தொழுஉரம், கோழி எரு, பன்றி எரு, கம்போஸ்ட் கரும்பு ஆலை கழிவு எரு, தென்னை நார் கழிவு எரு ஆகியவற்றை பயன்படுத்தலாம். புண்ணாக்கு வகைகளான வேம்பு, ஆமணக்கு, புங்கம், இலுப்பை, தென்னை கடலை எள், காட்டாமணக்கு ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
மண்புழு உரமிடுதல்: இந்த உரத்தில் பயிருக்கு தேவையான சத்துக்கள் மட்டுமல்லாமல் பயிருக்கு தேவையான இயற்கை பயிர் ஊக்கியும் இருப்பது ஆச்சரியப்பட வேண்டிய விஷயமாகும். இதை அடியுரமாக இடுவதை விட முக்கியமாக காய்கறிப் பயிர்களுக்கு ஏக்கருக்கு 2-3 டன் உரத்தை மேலுரமாக செடிகளை சுற்றி, செடி விதைத்த 20 நாள்களுக்கு ஒருமுறை வீதம் 3 முறை இடுவது நல்லது.
நுண்ணுயிர் உரங்கள் இடுதல்: காய்கறிப் பயிர்கள் நன்கு செழித்து வளர செலவில்லாத நுண்ணுயிர் உரங்களான ரைசோபியம், பாஸ்போபேக்டீரியா, அசோஸ்பைரில்லம், மைக்கோரைசாவேர் உட்பூசணம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டை, உதாரணமாக ரைசோபியம் பால்போபாக்டீரியா (அலலது) ரைசோபியம் மைக்கோரைசாவேர் உட்பூசணம் (அல்லது) அசோஸ்பைரில்லம் பாஸ்போபாக்டீரியா போன்றவற்றை ஏக்கருக்கு 5 பாக்கெட் என்ற விகிதத்தில் கடைசி உழவுக்கு முன்பு இட வேண்டும். ÷அடியுரமாக இடமுடியாத தருணத்தில், விதை நேர்த்தியாக கூட பயன்படுத்தலாம், மேற்கூறிய உயிர் உரங்களை ஏக்கருக்கு 2 பாக்கெட் என்ற விகிதத்தில் குளிர்ந்த அரிசிகஞ்சியுடன் கலந்து விதைகளை விதைப்பதற்கு முன் நிழலில் 6 மணி நேரம் உலரவைத்து விதைக்க வேண்டும்.
இயற்கை முறையில் விதை நேர்த்தி: சூடோமோனாஸ் 10 கிராம் கிலோ அல்லது டிரைகேடெர்மா 4 கிராம்கிலோ விதை என்ற அளவில் விதை நேர்த்தி செய்யலாம். ஒரு சதுர மீட்டர் நாற்றங்காலுக்கு தொழு உரம் 50 கிராம் வேப்பம் புண்ணாக்கு, அசோஸ்பைரில்லம் 5 கிராம், பாஸ்போபேக்டீரியா 5 கிராம் மற்றும் மைக்கோரைசாவேர் உட்பூசணம் 60 கிராம் என்ற அளவில் இடலாம். விளைநிலங்களில் அசோஸ்பைரில்லம் 400 கிராம் கரைசலில் நாற்றுகளின் வேர்களை நனைத்தல், ஓரு ஹெக்டேர் நிலத்துக்கு 2 கிலோ பாஸ்போபாக்டீரியா மற்றும் மைக்கோரைசாவேர் உட்பூசணம் 4 கிலோ என்ற அளவில் இடலாம். மண்புழு உரம் மறறும் வேப்பம் புண்ணாக்கு இடலாம், பஞ்சகாவியாவை பாசனநீர் மூலம் கலந்து விடலாம். முருங்கை இலைச்சாற்றை மேலுரமாக தெளிக்கலாம்.
நுண்ணுயிர்களின் பங்கு: மண்ணிற்கு நுண்ணுயிர்கள் மக்கவைக்கும் இயல்பை தருகிறது. ஒளிச்சேர்க்கை செய்வதை துரிதப்படுத்திவிடும் லேக்டிக் அமில பாக்மரியா மண் மற்றும் உரங்களில் உருவாகும் தீமை தரும் நுண்ணுயிர்களை கட்டுப்படுத்தக்கூடும். இந்த நுண்ணுயிர்களை மண்ணிலும், உரத்திலும் நீரிலும் தெளிப்பதன் மூலம் உற்பத்தியை பெருக்கி கூடுதல் மகசூலைப் பெறலாம்.
நுண்ணுயிர் கரைசல் தயாரிப்பு முறை: 20 லிட்டர் தண்ணீரில் (குளோரின் கலக்காதது) 1 கிலோ நாட்டு சர்க்கரை கலந்து அதனுடன் 1 லிட்டர் நுண்ணுயிர் கரைசல் கலந்து இவை அனைத்தையும் 20 லிட்டர் பிளாஸ்டிக் டிரம்மில் சேகரித்து இருட்டான, குளிர்ச்சியான அறையில் 10 நாள்களுக்கு மேல் வைத்திருக்க வேண்டும். இதிலிருந்து இனிமையான மணம் உருவாகும். இக்கரைசலை கம்போஸ்ட்கள் மீதும் மற்றும் விவசாய சாகுபடி செய்யக்கூடிய மண்ணின் மீதும் தெளிக்கலாம். நுண்ணுயிர் கரைசல் புதுச்சேரி ஆரோவில்லில் கிடைக்கிறது. எனவே விவசாயிகள் இயற்கை வேளாண்மையை பயன்படுத்தி சாகுபடி பொருள்களின் தரத்தை உயர்த்தி அதிக லாபம் பெறலாம் .