Friday, November 9, 2012

நீங்களும் கோடீஸ்வரன் ஆகலாம்


பணம் பண்ணுங்கள் நீங்கள் செல்வந்தர் ஆகலாம்உங்கள்வாழ்க்கைக்கண்ணோட்டத்தையே மாற்றிவிடும் நடையிலும்,பேச்சிலும்,செயலிலும் பெரியசாதனையாளரைப்போல்நடந்துகொள்ளுங்கள்.உன்னிடத்தில் ஏற்பட்டுள்ள இந்தக் குறிப்பிட்ட மாறுதலை எல்லோரும் உடனே கவனிப்பார்கள்
சிந்தியுங்கள்-நீங்கள் ஒரு பணக்காரன் என்று.
தீவிரமாக செயல்படுங்கள்-வருடத்தில் 1கோடி முதல் 40கோடி வரை,நான் சம்பாதிப்பவன் என்று அல்ல,செலவு செய்பவன் என்று.
     நானும் ஒரு முதலீட்டாளர் என்று,உங்களை நீங்கள்மிகைப்படுத்திக் கொள்ளுங்கள்.அப்போதுதான் உங்கள்முதல் இரட்டிப்பு முதலாக முடியும்
     எல்லா உணர்வு நிலைகளுக்கு அப்பாலும் பேசச்செய்யும் சக்தி செயல் சக்தியாகும்.எல்லாம் உன்னுடையதே!உன்னுடனே பிறந்து உன்னுடன் வாழப்பிறந்தது.அதுமட்டும்அல்லாமல் நீ ஒரு கலங்கரைவிளக்கம் என்பதை நீ உணர்வாய்
     இறைவனிடம் கேட்காதே!உன்னிடம்இருப்பதை இறைவனிடம்கேட்காதே!அது பணத்தை தவிர வேறு ஒன்றும் இல்லை
     சராசரியான மனிதனை எடுத்துகொள். அவன் உழைக்கின்றான்.வேர்வை சிந்துகின்றான்.தினம் கூலி கிடைக்கின்றது.அவனுக்குபற்றாக்குறைஎன்பதுதெரிவதில்லைஏன்?அவன்இறைவனிடம்கேட்பதுமில்லை.
அவன் தினக்கூலி.வறுமையில்லை.சுகம் மட்டும்
தான் அவனுக்கு மிஞ்சுகிறது. அவன் எப்போதும் சிரித்துக்கொண்டுயிருக்கிறான்.சேமிப்பதுஇல்லை.
அவன் திறமைஉழைப்பது மட்டுமே.சாகும் நேரத்தில் கூட அவனுக்கு சோகம்வருவதில்லை.அதன் பெயர் நிம்மதி,ஏனென்றால்அவன்சேர்த்துவைக்கவில்லை.
அதற்கான எண்ணம் இல்லை.செயல்படத் தெரிய
வில்லை.அவனை செதுக்க யாருமில்லை.அவனை யாரும் செதுக்கவில்லை-பணத்துக்காக.  
     நீ ஒரு சாதனையாளராகவரவேண்டும்என்பதை முத்திரைகுத்திக்கொள்.உன்மனம்எனும்யாத்திரை
பயணித்துக் கொள்ளும்-பணத்துக்காக.
       மனிதன் மனம்ஒருபட்டாம்பூச்சிபோல-பணம் எங்கே? என்றுதேடிக்கொண்டேயிருக்கும்.எல்லா மலரிடமும்தேன்உண்டு,வாசனையும்உண்டு,மகரந்தசேர்க்கையும்உண்டு.அவனும்அப்படித்தான்,மலர்தாவும் வண்ணத்துபூச்சியாய்அல்ல.பணம்தேடும்பூச்சியாய்.
இதிலும் மகரந்தசேர்க்கை உண்டு.ஒன்றில் சேமித்த பணத்தை மற்றொன்றில் முதலீடுசெய்வது.எப்போதும் சிந்திக்கும் வாசனை உண்டு.தேன் உண்டு[சேகரித்தல்]
சேமிப்பு உண்டு.ஒன்றை மட்டும் குறிக்கோளாக கொண்டுபயணிப்பது இல்லை பணம்.சிறகடித்து பயணிக்கிறது-துளித்துளியாய்,பெருவெள்ளத்தைப்
போல்.நீ ஒரு சிறந்த கோட்டீஸ்வரனாக திகழ்வாய்,
என்பது தான் இதன் பாடம்.
     பயணம் பண்ணக்கற்றுக் கொள்.அங்கே பணம் எனும் பொக்கிஷம்இருப்பதை அறிந்துகொள்.நீயே பணம் பண்ணும் மனிதன் என்றுஉணர்ந்து கொள்
     அறிவும் செல்வமும் கலந்தகலவைநான்.எங்கே பணம்?எங்கேபணம்?என்றுஓடுகிறேன்.எங்கே
போனாலும் பணம் கிடைக்கவில்லைஅறிவு கிடைக்கிறது.ஆனால் பசி போகவில்லை.விலைபோக நினைத்தேன்.விலைகொடுத்துவாங்கஆளில்லை.எங்கோபோகிறேன்-ஒருவேளைபசிக்காக,ஓடுகிறேன்
.தண்ணீர்மட்டும்தான்மிச்சம்.பணப்பசிபோகவில்லை
தாகமும்அடங்கவில்லை.வயிற்றுப்பசி மட்டும் தான் மிச்சம்.
   நான்என்னைவிற்கிறேன்.கொள்வார்எங்கே?.படிப்பு,
அறிவுஇல்லாதமனிதனிடம்உழைப்புஇருக்கிறது.படித்தவனிடம் உழைப்பு இல்லை.உழைப்பவனிடம் வறுமையிருக்கிறது.எல்லாம் தெரிந்த எனக்கு பசிப்
போகவில்லை.இதன் பெயர்தான் வறுமை.வறுமை தந்த பாடம் தான்உனக்கு கற்றுத்தருகிறேன்-பணம் பண்ணுவது எப்படி? என்று.
      அறிவும் செல்வமும் எங்கே?அவையாவும் நமக்குள் இருக்கும்சொர்க்கங்கள்.அறிவின் சொர்க்கம் உழைப்பு.உழைப்பின் வியர்வைபணம்.எல்லாம் உன்னிடம் இருப்பதை வெளியில் தேடாதே!அது
உன் மூளை தான் அதை விற்று காசு ஆக்கு.நீ ஒரு பெரிய பணக்காரன்ஆகவேண்டுமா?மூளை எனும் மந்திரச்சாவி மூலம் திறந்து எடுத்துகொள்.
அது தான் ஆல்ஃபா மைண்ட் எனர்ஜி.அதனுடன் பேசு.தட்டுங்கள் திறக்கப்படும்என்றுசொல்லும்.நம்மால் எல்லாம் முடியும் என்று சொல்லும்.ஆனால்
யாமிருக்க பயம் ஏன்? என்று சொல்லுவது பணமே!!
     உன்னை உயர்த்த ஒருவழி இதுவரை நடந்ததை மறப்பதுதான்.உன்னுடைய எண்ணத்தை மாற்று. நான் பிறக்கும் போதே,பல கோடிகளுக்கு அதிபதி-பல நிறுவனங்களுக்குஅதிபதிஎன்றுஎப்போதும் நினைவில் கொள்.நான் செவ்வாய் கிரகத்தை வாங்கி
விட்டேன் என்று உலகத்தார்க்கு சொல்-அது உன்னை பார்க்கும்மனிதசமூதாயத்திற்குசவால்விடும்சக்தியாகமாறும்.அடுத்துஉன்னுடைய திட்டம் இந்த பூமியை வாங்குவதும் விற்பதும் தான்வாங்கும்பொழுது பணம் தேவை.அது உன்னிடம் இருக்கிறதுஎன்பதுதான் புத்திசாலித்தனம்.விற்பது என்பது கடினமான வேலை
அல்ல.இதுஒருமுகம்பார்க்கும்கண்ணாடிபோல்.
மீண்டும் மீண்டும்கவனி.தானாக விற்றுவிடும்.
     உன்மூளை சொல்லும் ரகசியம்,நீ உற்பத்தி தொழிற்சாலைஎன்றுஎப்போதும்மனதில்வைத்துக்
கொள்.நீ சாகசவீரன் என்று அற்புதத்தின் படைப்பாளி என்று.முடிவும்,செயலும்,முயற்சியும்,உன் வலது பக்க
மூளையின் செயல்பாடு அதை கவனி.அதனுடன் போட்டிபோடாதே.தவறுஎன்பதைஅதுசொல்லாது.இரவு நேரம் சிந்தனை துளியைதட்டிவிடு.அது உன்னை உருவாக்கும்.விடிந்ததும் இரவில் உன்னைஒரே நாளில்பணக்காரன்ஆக்கியவிதத்தை[வித்தையை]
சொல்லும்அதை கவனி அதுதான் வலதுமூளையின் செயல்பாட்டின் உயர்வு நிலை.உன் உற்சாகம் உன்மூளையே.நீ ஏழை இல்லை என்பதை உணர்.
உன்னை வரவேற்க புது உலகம்பிறந்திருக்கிறது.அதன் பெயர் பணம்.பண உலகத்தின் படைப்பாளி நீஎன்பதை ஆணித்தரமாக நேசி.
     மூளை எனும் காப்பகம் பணமே!அது நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பணத்தை தந்து கொண்டிருக்கும்.நீ ஒரு முதலீட்டாளன் என்பதை மறந்துவிடாதே.மறந்தால் உன்னை விட்டு பணம் மறைந்துவிடும்.அவன் பெயர் தான் ஏழை.
     ஏழை,பணக்காரன் என்று எல்லாம் மூளைக்கு இல்லை.அவன்பால் எப்போதும் அன்புடன் நடந்து கொண்டால்நீவேண்டுவதுஎல்லாம்தந்துவிடும்[மூளை].பிறகு ஏன்?பணத்தை மட்டும் தரவில்லை.காரணம்,நீ அன்புடன் நடக்காதது தான்.அன்பு என்றால் என்ன?
கவனி என்பது பொருள்.அன்பு என்பது சிந்தனை, நீ கவனித்தால்அது சிந்திக்கும்,சிந்தித்தால் பணம் வரும்.பணம் வளரும் என்பதுஎல்லோருக்கும் தெரியாது.
     மூளை ஒரு வைரக்கல்.அது எப்போதும் ஜொலித்து கொண்டேஇருக்கும்.அதை மனக்கவலை எனும்பூட்டுபோடாதே.அதுதொலைந்துவிடும்.அப்போது உன்கனவு,நினைவுஎல்லாம்மாறிவிடும்.எதிர்
மறையானஎண்ணங்கள் வேண்டாம்,நேர்மறையான எண்ணங்களோடு இரு.
     உன் ஞாபகம் பணம் எனும் குறிக்கோளுடன் ஒன்றியிருக்கட்டும்அப்போதுதான் கவனச்சிதறல் இருக்காது.இது ஒரு தனி மனித ராஜ்ஜியம்அதற்கு தேவைப்படுவது நினைவு எனும் மனதுதான்.உன் வலது மூளையில்வெளியாகும்செயல்பாடுபணமாகும்.