Wednesday, December 29, 2010

பயிர்க்காப்பீடு



பயிர்க்காப்பீடு

வேளாண் உற்பத்தியாளர், விவசாயிகள், ஆடு மாடு வளர்ப்பவர்கள் இயற்கை சீற்றங்களான மழை, வறட்சி, பனி, வெள்ளத்தால் பயிர்களுக்கு சேதம் ஏற்படுவதால்(அ) வேளாண் பொருட்களின் விலை குறைவதால் வருமான இழப்பு ஏற்படுவதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள உதவுவது தான் பயிர் காப்பீடு.

இந்தியாவில் பயிர்காப்பீடு

இந்தியாவில், பயிர்சாகுபடியின் போது ஏற்படும் காலநிலை மாற்றம், பூச்சி மற்றும் நோயால் அதிக சேதங்கள் ஏற்படுகின்றன. இதிலிருந்து காத்துக்கொள்ள பயிர்க்காப்பீடு என்பது முக்கிய பங்கு வகிக்கிறது, அனைத்து இடர்களின் ஒட்டு மொத்த பயிர் காப்பீடு திட்டம் 1985-ம் ஆண்டு 7-ம் ஐந்தாண்டு திட்டத்துடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டது. தொடாந்து தேசிய வேளாண் காப்பீடு திட்டத்தால் (1999-2000) மாற்றியமைக்கப்பட்டது. இந்தத் திட்டங்கள் வருகின்ற வருடங்களின் திட்டமிடுதல், அதைப்பற்றிய படிப்புகள் ஆராய்ச்சிகளால் காலத்திற்கு தகுந்தாற் போல் மாற்றி சமைக்கப்பட்டு வருகிறது. இந்திய வேளாண் காப்பீட்டு.

நிறுவனம் (AIC): இந்த நிறுவனம் இந்திய அரசால் 2002-03, பொதுபட்ஜெட் அறிக்கை வெளியிடும்போது அமைக்கப்பட்டது. இந்த திட்டதிதால் விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்யவும், வளம் குன்றா வேளாண்மை உருவாக்கவும் திட்டமிடப்பட்டு, வேளாண் காப்பீட்டுக்கென  ஒரு புதிய நிறுவனம் தொடங்கப்பட்டது.

தேிசய வேளாண் காப்பீடு திட்டத்தை இந்தியாவின் பொது காப்பீட்டு நிறுவனத்தால் -FY03 வரை அமல்படுத்தும் வரை இந்த AIC நிறுவனம் தான் அமல்படுத்தியது. எதிர்காலத்தில், இந்த நிறுவனம் நேரிடையாக அல்லது மறைமுகமாக வேளாண் மற்றும் வேளாண் சார்ந்து தொழில்களுக்கு காப்பீட்டு வணிகப் பணியை செய்யும்.

பங்கு மூலதனம்
அனுமதித்த பங்கு மூலதனம் ரூ.1,500 கோடி
செலுத்திய பங்கு மூலதனம் ரூ.200 கோடி
மேம்படுத்தவர்கள்
நிறுவனம்
பங்கு மூலதனம்%
இந்தியபொது காப்பீட்டு நிறுவனம்
35.00
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி
30.00
தேசிய காப்பீட்டு நிறுவனம்
8.75
நியூ இந்தியா காப்பீட்டு நிறுவனம்
8.75
ஒரியண்டல் காப்பீட்டு நிறுவனம்
8.75
யுன்டெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம்
8.75

கூட்டிணைவு: 2002 டிசம்பர்  20ந்தேதி, தற்போதுள்ள திட்டங்கள் (திட்டங்கள் பட்டிலை அறிந்து கொள்ள
கீழே கிளிக் செய்யவும்)
பதிவு செய்யப்பட்ட அலுவலகம் : இந்திய வேளாண்மை காப்பீட்டு நிறுவனம் 
முகவரி 1 : 

13வது மாடி, “ அம்மா தீப்
14, கஸ்தூர்பா காந்தி  மார்க்
கன்னாட் ப்ளேஸ்
நியூ டெல்லி - 110 001, இந்தியா
தொலைபேசி: (011) 46869800
தொலைநகலி:(011)46869815
முகவரி 2 : 

21வது மாடி, “அம்மா தீப்
14, கஸ்துர்பா காந்திமார்க் கன்னாட் ப்ளேஸ்
நியூ டெல்லி - 110 001, இந்தியா
தொலைபேசி : (011) 46869860
தொலைநகலி : (011) 46869854, 46869855
இ-மெயில் : aicho@aicofindia.org

பரிசோதனை அடிப்படையிலான வானிலைச் சார்ந்த பயிர் காப்பீட்டுத் திட்டம் ரபி பருவச் சாகுபடி – 2009 - 10

2009 ஆண்டு காரிப் பருவத்தில் பரிசோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட வானிலைச் சார்ந்த பயிர் காப்பீட்டுத் திட்டம், தற்போதைய 2009-10 ஆண்டின் ராபி பருவத்திலும் செயலாக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனைத் திட்டம், கீழ்கண்ட மாநிலங்களில் செயல்படுத்தப்படவுள்ளது:
ஆந்திரப்பிரதேசம், அஸ்ஸாம், பீகார், சட்டீஸ்கர், குஜராத், ஹரியானா, ஹிமாசலப்பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகம், கேரளா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்ரா, மேகலாயா, ஒரிஸா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தர பிரதேசம், உத்தராகண்ட் மற்றும் மேற்கு வங்காளம்.

இந்த பரிசோதனைத் திட்டத்தின் குறிக்கோள்கள்
அதிகப்படியான அல்லது குறைவான மழை போன்ற இயற்கை பாதிப்புக்களால், பயிர்ச் சாகுபடியில் ஏற்படும் பொருளாதார இழப்புக்களிலிருந்து உழவர்களை பாதுகாப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த பரிசோதனைத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
  • ரபி பருவத்தில், பருவம் தாண்டி பெய்யும் பருவ மழை, வெப்பம், பனி, ஈரப்பதம் போன்ற முக்கியமான காரணிகள்  பயிர்களை அதிகம் பாதிக்கின்றன.
  • ரபி பருவத்தில் பயிரிடப்படும் பெரும்பாலான உணவு தானியங்கள், சிறு தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணைவித்துகள் மற்றும் வணிக மற்றும் தோட்டப்பயிர்களுக்கும் இத்திட்டம் பொருந்தும்.
  • வங்கிகளில் பயிர்க் கடன் வாங்கிய மற்றும் வாங்காத அனைத்து உழவர்களும் இத்திட்டத்தில் சேரத் தகுதியுடையவர்கள். எனினும், வங்கிக்கடன் வாங்கியோர் கட்டாயமாகவும், வாங்காதவர்கள் அவரவர் சுயமாகவும் சேர்ந்து கொள்ளலாம்.
  • இத்திட்டம், இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் (AIC),  தனியார் காப்பீட்டு நிறுவனங்களான ஐசிஐசிஐ லொம்பார்டு, IFFCO-TOKIO மற்றும் சோழமண்டலம் MS போன்ற பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் நடைமுறைபடுத்தப்படுகிறது.
  • இந்த பரிசோதனைத் திட்டத்தில் பங்கு பெற்றுள்ள அனைத்து பொது மற்றும் தனியார் துறைக் காப்பீட்டு நிறுவனங்களும், கடன் பெற்ற மற்றும் பெறாத விவசாயிகள் அனைவரையும் இத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ள அனுமதிக்கப்படும்
  • இத்திட்டம் அமல்படுத்தப்படவுள்ள பகுதிகள் பற்றி அறிவிக்கப்படும்
  • இத்திட்டம் அமல்படுத்தப்படவுள்ள பகுதிகளைச் சார்ந்த கடன் பெற்ற விவசாயிகளுக்கு தேசிய விவசாய காப்பீட்டுத் திட்டம் (NAIS)  செயல்படுத்தப்படமாட்டாது.  எனினும், அதே பகுதிகளிலுள்ள கடன் பெறாத விவசாயிகள் தங்களுக்கு விருப்பமான ஏதாவதொரு காப்பீட்டு நிறுவனத்திடம், தேசிய விவசாய காப்பீட்டுத் திட்டம் அல்லது வானிலைச் சார்ந்த பயிர் காப்பீட்டுத் திட்டம் ஆகிய இரண்டில் ஏதாவதொரு திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.
  • இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுக்குரிய பகுதிகளை, அந்தந்த மாநில அரசுகள் விவசாயிகளின் விருப்பத்திற்கேற்ப ஒதுக்கீடு செய்யவேண்டும். இத்திட்டத்தை   சோழமண்டலம் MS பொதுக் காப்பீட்டு நிறுவனம், தமிழ்நாடு மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் மட்டும் செயல்படுத்த பரிசீலிக்கலாம். 
  • இந்திய அரசின் வழிகாட்டி நெறிமுறைகளின்படியும், தேசிய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் (IRDA) ஒப்புதல் பெற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் தங்களுடைய வெவ்வேறு காப்பீட்டு திட்டங்களின் பிரிமியத் தொகை, காப்பீட்டுத் தொகை, காப்பீட்டு வழிமுறைகள், மானியங்கள் போன்ற விவரங்களை நடைமுறைப்  படுத்த வேண்டும்
  • கடன்பெறாத விவசாயிகள், காப்பீட்டுத் திட்டத்தின் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை வரம்புக்குள் (பொதுவாக பயிர்சாகுபடிக்கு ஆகும் செலவுக்கு சமமாக இருக்கும் மதிப்பு) தங்கள் தேவைக்கேற்ப குறைந்த தொகைக்கும் காப்பீடு செய்துகொள்ளலாம். ஆனால் அச்சிறிய தொகை அதிகபட்ச காப்பீட்டுத்தொகையில் பாதிக்கு கீழ் இருக்கக்கூடாது.
  • அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும், பிரிமிய தொகையை, வழக்கமான வழிமுறைகளை கொண்டு கணக்கிடவேண்டும்.  உணவு மற்றும் எண்ணைவித்துப் பயிர்களுக்கு அது எட்டு சதவீதத்திற்க்கு மிகாமல் இருக்கவேண்டும். ஆனால், உணவு மற்றும் எண்ணைவித்துப் பயிர்கள் பயிரிடும் விவசாயிகள், தேசிய விவசாயக் காப்பீட்டு திட்டத்தின் (NAIS) கீழ் நிர்ணயம் செய்துள்ள  பிரிமியத் தொகையை மட்டும் செலுத்தினால் போதும்.  அவ்வாறு கணக்கிடும் போது பிரிமிய தொகையில் உள்ள வித்தியாசத்தை, மத்திய மற்றும் அந்தந்த மாநில அரசுகள் தலா 50 சதவீதம் என்ற விகிதத்தில் காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கும்.
  • வருடாந்திர வணிக மற்றும் தோட்டக்கலைப்பயிர்களுக்கு,  விவசாயிகள் செலுத்தும் பிரிமிய தொகையில், அதிகபட்சமாக ஆறு சதவீதம், கீழ்கண்டவாறு வழங்கப்படுகிறது.
வ. எண்.
பிரிமியம்
மத்திய மற்றும் மாநில அரசு மான்யம் 50 : 50 மற்றும் உழவர்களால் செலுத்தப்படும் பிரிமியம்
1
இரண்டு  சதவீதம் வரை
மானியம் இல்லை
2
இரண்டு  சதவீதம் முதல் ஐந்து சதவீதம் வரை
குறைந்தபட்சம் 2 சதவீத நிகர பிரிமியம் உழவர்களால் செலுத்தப்பட்டால், 25 சதவீதம் மானியம்.
3
ஐந்து சதவீதம் முதல் எட்டு சதவீதம் வரை
குறைந்தபட்சம் 3.75 சதவீத நிகர பிரிமியம் உழவர்களால் செலுத்தப்பட்டால், 40 சதவீதம் மானியம்.
4
எட்டு சதவீதத்திற்கும் மேல்
குறைந்தபட்சம் 4.8 மற்றும் அதிகபட்சம் 6 சதவீத நிகர பிரிமியம் உழவர்களால் செலுத்தப்பட்டால், 50 சதவீதம் மானியம்.
  • வருடாந்திர வணிக மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு,  அதிகபட்சமாக 12 சதவீதம் வரை அசல் பிரிமியம் இருக்கலாம்.
  • இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணைய (IRDA) வழிமுறைகளின்படி,  தனியார் துறைக் காப்பீட்டு நிறுவனங்கள் பிரிமியத்திற்க்கான தங்கள் பங்கு மானியத்தொகையை அவ்வப்போது இந்திய விவசாய காப்பீடு நிறுவனத்திடமிருந்து (AIC)  பெற்றுக்கொள்ளலாம். இந்திய விவசாயக் காப்பீட்டு நிறுவனம் இந்தத் தொகையை மத்திய மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் இருந்து  பெற்றுக்கொள்ளும்.
  • வழங்கப்படகூடிய அனைத்து இழப்பீட்டு தொகைகளுக்கும் அந்தந்த காப்பீட்டு நிறுவனங்களே பொறுப்பு ஏற்க வேண்டும்.
  • இந்திய விவசாய காப்பீடு நிறுவனத்திற்கு (AIC) வழங்கப்படும் அதேயளவு மானியத் தொகையே தனியார் துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த மானியத்தொகை, இந்திய விவசாய காப்பீடு நிறுவனம் (AIC) மூலமாக மட்டுமே வழங்கப்படும்.



வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டு திட்டம் (WBCIS)


வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டு திட்டம் என்றால் என்ன ?
மழைவீழ்ச்சி, வெப்பநிலை, குளிர், ஈரப்பதம் போன்ற காலநிலை காரணிகளால் ஏற்படும் பாதகமான சூழ்நிலைகளால், விவசாயிக்கு பயிர் இழப்பு ஏற்படும் பொழுது, காப்பீடு செய்துள்ள விவசாயிகளின் பெருநஷ்டத்தை மட்டுபடுத்துவதே, வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீடு திட்டத்தின் நோக்கமாகும்.



பயிர் காப்பீட்டு திட்டத்திலிருந்து எவ்விதத்தில் இது மாறுபடுகிறது?
பயிர் காப்பீட்டு திட்டமானது, மகசூலில் ஏற்படும் இழப்பை ஈடு செய்யும். வானிலை அடிப்படையான காப்பீட்டு திட்டமானது, காலநிலை காரணிகளால் ஏற்படும் இழப்பை ஈடு செய்யும்.  மகசூல்  மற்றும் கால நிலை காரணிகளை தொடர்புபடுத்தி, கால நிலை காரணி மாறுநிலை குறிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இம்மாறுநிலை குறிகளுக்கு மேல், காரணிகளின் அளவு செல்லுமேயானால்,  பயிர்கள் பாதிக்க தொடங்குகிறது. ஆகவே இக்காரணிகளை கொண்டு பயிரிட்டவருக்கு, கருதப்படும் இழப்பினை அளிப்பதற்கு, இழப்பீடு பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இன்னொரு வகையில் கூறவேண்டுமென்றால், வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டு திட்டம் மகசூலிற்கு பதிலாக, காலநிலை காரணிகளை கொண்டு பயிரிட்டவருக்கான இழப்பீட்டு தொகையை அளிக்கிறது.



வானிலை காப்பீட்டு திட்டம் தற்போது நடைமுறையில் உள்ள இடங்கள் எவை?
ஆந்திரபிரதேசம், சட்டீஸ்கர், குஜராத், ஹரியானா, கர்நாடகம், மத்தியபிரதேசம், மஹராஷ்ட்ரா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் வானிலை காப்பீட்டு திட்டம், கரீப் 2003லிருந்து முன்னோடி திட்டமாக செயல்பட்டு வருகிறது.





தேசிய வேளாண்மை பயிர் காப்பீட்டு திட்டத்திலிருந்து எவ்விதத்தில் இது மாறுபடுகிறது?
வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டு திட்டமானது, விவசாயிகளுக்கு, பாதகமான காலநிலை காரணிகளால் ஏற்படும் சேதத்தை ஈடுகட்டும் விதத்தில் தனிசிறப்பு வாய்ந்தது. இத்திட்டம் கரீபில் ஏற்படும் பாதகமான மழை வீழ்ச்சிக்கும் (குறைவான மற்றும் அதிகமான) மற்றும் ரபியில் ஏற்படும் பாதகமான காலநிலை காரணிகளான குளிர், வெப்பம், ஈரப்பதம் மற்றும் பருவமற்ற மழைக்கும், காப்பீடு அளிக்கிறது. இது மகசூல் உத்திரவாத காப்பீடு திட்டமல்ல.
இரு திட்டங்களின் ஒப்புமை:

வரிசை
எண்
தேசிய வேளாண்மை பயிர்
காப்பீட்டு திட்டம்
வானிலை அடிப்படையிலான
பயிர் காப்பீட்டு திட்டம்
1.
எல்லாவிதமான இடர்பாடுகளால் ஏற்படும் இழப்புக்கு (வறட்சி, வெள்ளம், பனிவீழ்ச்சி, பூச்சிதாக்குதல்) ஈடு செய்யும்
காலநிலை காரணிகளான மழைவீழ்ச்சி, குளிர், வெப்பநிலை, ஈரப்பதம் போன்றவற்றால் ஏற்படும் இழப்பு. பயிர் சேதத்தால் இவைகள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.
2.
பழைய 10வருட மூல குறிப்புகள் இருந்தால் எளிதாக வடிவமைக்கலாம் .
காலநிலை குறியீடுகள் மற்றும் காலநிலை குறியீடுகளை மகசூல் நஷ்டத்திற்கு தொடர்பு படுத்துதலில் உண்டான தொழில்நுட்ப சவால்கள்
3.
உயர் அடிப்படை இடர்பாடு வரவு (குறிப்பிட்ட இடத்திற்கான (வட்டம்) தெக்சில்) மகசூல் மற்றும் விவசாயின் மகசூலில் உள்ள வித்தியாசம்
காலநிலை சம்பந்தப்பட்ட இடர் வரவு மழைக்கு அதிகமாகவும் மற்ற குளிர், வெப்பம், ஈரப்பதம் ஆகியவற்றிற்கு மிதமாகவும் இருக்கும்
4.
குறிக்கோள் மற்றும் தெளிவு தன்மையை, ஒப்பிடும்போது குறைவு
குறிக்கோள் மற்றும் தெளிவுதன்மையை ஒப்பிடும்போது அதிகம்
5.
தரத்தில் ஏற்படும் நஷ்டம் கருத்தில் கொள்ளபடமாட்டாது
காலநிலை குறியீடுகள் மூலம் இந்த நஷ்டம் கருத்தில் கொள்ளப்படுகிறது.
6.
நஷ்ட மதீப்பீடு தொகை அதிகம்
நஷ்ட மதிப்பீடு தொகை இல்லை
7.
கோரிக்கை தீர்வில் காலதாமதம் ஆகும்
வேகமான கோரிக்கை தீர்வு
8.
கோரிக்கையின் மாண்யத்திற்கு உதவி புரிவதால், அரசாங்க நிதி உத்திரவாதம் திறந்த நிலையில் உள்ளது.
 தவணை கட்டணத்திற்கு உதவி செய்வதால், முன்பாகவே அரசாங்க பொருளாதார உத்திரவாதம் கணிக்கப்படுகிறது.



இந்த காப்பீட்டு திட்டம் இயங்கும் முறை என்ன?
இந்த திட்டமானது, பரப்பு முறை (Area Approach) எனும் கோட்பாட்டினை கொண்டுள்ளது. எல்லாவற்றிலும் ஒத்துப்போவதாக கருதப்படும் ஒரு பரப்பினை, மேற்கோள் பரப்பாக Reference unit area)  கருதி, இழப்பீடு அளிக்கப்படுகிறது. இந்த பரப்பானது, அரசாங்கத்தால் பயிர் காலத்திற்கு முன்னரே அறிவிக்கப்பட்டு, ஒவ்வொருபயிர் காப்பீட்டாளருக்கும் இப்பரப்பிற்கு ஒத்துப்போகும் வகையில் கோரிக்கைகள் மதிப்பிடப்படும். ஒவ்வொரு மேற்கோள் பரப்பும், மேற்கோள் வானிலை மையத்துடன் (Reference Weather Station) இணைக்கப்பட்டு, அந்த நிலையத்தின் காலநிலை குறிப்புகளை பெற்று, கோரிக்கைகளுடன் உட்படுத்தப்படும். நடப்பு பருவத்தில் ஏதேனும் பாதகமான காலநிலை ஏற்பட்டு இருந்தால், இத்திட்டத்தின் நிபந்தனை மற்றும் கட்டுப்பாடுக்கு உட்பட்டு, இழப்பீட்டு அமைப்பிற்கு ஏற்றவாறு, காப்பீட்டு தொகை அளிக்கப்படும். பரப்புமுறை அணுகுமுறை தனிப்பட்ட அணுகுமுறையிலிருந்து மாறுபட்டது. தனிப்பட்ட அணுகுமுறையில் இழப்பீடானது தனிப்பட்ட காப்பீட்டு விவசாயிகளின், நஷ்டத்தை மதிப்பீடு செய்யும். மேற்கோள் வானிலை நிலையம் அமைக்கப்பட்ட இடத்தில் நிலவும் வானிலையானது, அதனுடன் இணைக்கப்பட்ட பண்ணைகளில் நிலவும் வானிலைப்போலவே இருக்கும். ஒரே நாளில் வானிலையானது (குறிப்பாக மழைவீழ்ச்சி) சிறிய அளவிலேயே வேறுபட வாய்ப்பு உண்டு. ஆனால் பதினைந்து நாட்களுக்கோ, மாதத்திற்கோ அல்லது ஒரு பருவத்திற்கோ கணக்கிடப்படும்போது இந்த வேற்றுமை மறைந்துவிடும். எனவே ஒரு வட்டத்தில் உள்ள மேற்கோள் வானிலை மையத்தின் வானிலை, மேற்கோள் பரப்பிலுள்ள அனைத்து பண்ணைகளின் வானிலையை குறிப்பதாக அமையும்.



இந்த திட்டத்தை வாங்குவதற்கு தகுதியானவர்கள் யார்?
அனைத்து விவசாயிகளும் (வார சாகுபடியாளர் மற்றும் குத்தகை சாகுபடியாளர் உட்பட) இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். கடன் நிறுவனங்களிடமிருந்து, பயிருக்கான கடனை பெற்றவர்களுக்கு இத்திட்டம் அவசியமாகும். மற்றவர்களுக்கு அவரவர் விருப்பத்திற்கேற்ப.



காப்பீட்டு பாதுகாப்பு தொகை (உறுதிதொகை) கணக்கிடுமுறை
காப்பீட்டாளர் பயிரை விளைவிக்க தேவையான உட்பொருட்களுக்கு ஆகும் செலவே, உறுதி தொகை ஆகும். மாநில அரசாங்கத்தின் வல்லுனர்களுடன் ஆலோசித்த பின்னர், AIC ஆனது, பருவகாலம் தொடங்குவதற்கு முன்பே, பயிரை விளைவிப்பதற்கான உறுதி தொகையை  அறிவித்து விடும். இது பயிர்கள் மற்றும் RUA  பொறுத்து மாறுபடும். மேலும் உறுதி தொகையானது, காலநிலையின் காரணிகளின் முக்கியதுவத்தை பொறுத்து, பிரித்து வழங்கப்படும்.



காப்பீட்டுத் தொகை
எதிர்பார்க்கப்பட்ட நஷ்டத்தை பொறுத்து, காப்பீட்டுத் தொகை அமைகிறது. எதிர்பார்க்கப்பட்ட நஷ்டமானது, 25லிருந்து  100வருடங்களுக்கு உட்பட்ட காலநிலை காரணிகளை, கொண்டு பெறப்படுகிறது. காப்பீட்டு தொகையானது, பயிர் மற்றும் RUA-வை பொறுத்து மாறுபடும். விவசாயிகளுக்கு, காப்பீட்டு தொகையில், உச்சவரம்பிட்டு அதற்குமேல் செல்லும் காப்பீட்டு தொகையை, மத்திய அரசும் மாநில அரசும் 50:50 விகிதத்தில் பிரிமீயம் தொகையினை பகிர்ந்து கொள்ளவும் ஒப்புதல் அளித்துள்ளது.
விவசாயிகளால் செலுத்தப்படும், பயிர் வகைகளுக்கான பிரிமீயம் தொகை.
உணவு பயிர்வகைகள் மற்றும் எண்ணெய்வித்து பயிர்கள்

வ.எண்
  பயிர்கள்
காப்பீட்டு விவசாயிகள் கட்டவேண்டிய பிரிமீயம் தொகை
1.
கோதுமை
 1.5% அல்லது தொகைக்கான வட்டி, இவை இரண்டில் குறைவானது.
2.
மற்ற பயிர்கள் (மற்ற தானியங்கள், சிறு தானியங்கள் பயிறு வகைகள் எண்ணெய்பயிர்கள்)
 2.0% அல்லது தொகைக்கான வட்டி, இவை இரண்டில் குறைவானது.
ஒராண்டு    வணிக தோட்டக்கலை பயிர்கள்

வ.எண்
பிரிமீயம்
மானியம் பிரிமீயம்
 1.
 2% வரை
 மானியம் இல்லை
 2.
>2 - 5%
 25%,  2% நிகர் பிரிமீயம் விவசாயிகளால் கட்டப்படுவதற்கு உட்பட்டது.
 3.
       >5 - 8%
 40% , 3.75% நிகர் பிரிமீயம் விவசாயிகளால் கட்டப்படுவதற்கு உட்பட்டது.
 4.
    >8%
 50%, 4.8% , 6%,  நிகர் பிரிமீயம் விவசாயிகளால் கட்டப்படுவதற்கு உட்பட்டது.
நிகர பிரிமீயமானது, காப்பீட்டாளர் கடன் வாங்கி இருப்பின், கடன் கொடுத்த நிறுவனத்தால் கட்டப்பட வேண்டியதாகும்.








கால்நடை காப்பீட்டுத் திட்டம்

மத்திய அரசால் அளிக்கப்பட்ட, கால்நடை காப்பீட்டு திட்டமானது பத்தாவது ஐந்து ஆண்டு திட்டத்தில் 2005 -2006 மற்றும் 2006-07 லும், 11 வது ஐந்தாண்டுத் திட்டத்தில் 2007-08 லும் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாவட்டங்களில் மாதிரி அடிப்படையில் நிறுவப்பட்டது. இந்த திட்டமானது தற்போது 300 தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் நிறுவப்பட்டு வருகிறது.
இந்த காப்பீட்டு திட்டமானது  இரட்டை நோக்கத்துடன்  ஆரம்பிக்கப்பட்டது. ஒன்று, விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுக்கு, திடீரென்று ஏற்படும் கால்நடை இழப்பிலிருந்து பாதுகாப்பு அளிப்பதாகும்.  மற்றொன்று, கால்நடை காப்பீட்டின் முக்கியவத்துவத்தை மக்களுக்கு உணர வைத்து, திட்டத்தை பிரபலப்படுத்தி, கால்நடை மற்றும் அதை சார்ந்த பொருளின் தரத்தை உயர்த்துவதாகும்.
இந்த திட்டத்தின்கீழ், உள்நாட்டு மற்றும் கலப்பின வகை கறவை பசுக்கள் மற்றும் எருமைகள், அதிகபட்சமான சந்தை மதிப்பை இழப்பீடாகப் பெறும் வகையில் காப்பீடு செய்யப்படுகின்றன. காப்பீட்டிற்கான பிரிமிய கட்டணத்தில் 50% வரை மானியமாக வழங்கப்படுகிறது. இந்த மானியத்தொகை முழுவதையும் மத்திய அரசே ஏற்கிறது. இந்த மானியச் சலுகை, ஒரு பயனாளிக்கு இரண்டு கால்நடைகள் வீதம், அதிகபட்சமாக  3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
இந்த திட்டமானது அனைத்து மாநிலங்களிலும்  (கோவாவை தவிர்த்து) அந்தந்த மாநில கால்நடை மேம்பாட்டு கழகத்தின் மூலம் அமுல்படுத்தப்படுகிறது.  

இத்திட்டத்தின் கீழ் வரும் கால்நடைகள் மற்றும் பயனாளிகளை தேர்தெடுக்கும் விதம்.
  • உள்நாட்டு மற்றும் கலப்பின வகை கறவை பசுக்கள் மற்றும் எருமைகள் ஆகிய கால்நடைகள் இந்த திட்டத்தின்கீழ் காப்பீடு செய்யப்படும். உள்நாட்டு மற்றும் கலப்பின பசுக்கள் மற்றும் எருமைகள் என்பது, ஏற்கனவே ஒரு கன்று ஈன்ற, தற்போது பால் கறந்துகொண்டிருக்கும், கறவை வற்றிய மற்றும் கர்ப்ப காலத்திலுள்ள அனைத்து கால்நடைகளையும் குறிக்கும்.  இப்படிப்பட்ட கால்நடைகளுக்கு, அதிகபட்ச சந்தை விலைக்கு காப்பீடு  அளிக்கப்படுகிறது.
  • வேறு காப்பீட்டு திட்டத்தின் கீழ் வரும் கால்நடைகள் இத்திட்டத்தின் கீழ் காப்பீடு அளிக்க இயலாது.
  • மானியமானது ஒரு பயனாளிக்கு  இரண்டு விலங்குகளுக்கு மூன்று வருடத்திற்கு அளிக்கப்படும்.
  • வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகள் ஏற்படும்பட்சத்தில், குறைவான செலவில் அதிக காப்பீட்டு பலன் பெற, விவசாயிகள், மூன்று ஆண்டுகளுக்கான திட்டத்தில் சேருவதற்கு ஊக்கமளிக்க வேண்டும். எனினும், விவசாயிகள் மூன்று ஆண்டுகளுக்கு குறைவான காலத்திற்கு காப்பீடு செய்துகொள்ள விரும்பினால், அதையும் செய்து தர வேண்டும். அவ்வாறு செய்யும் போது, அதே கால்நடைக்கு மீண்டும் காப்பீடு செய்யும்போது திட்ட நடைமுறையில் உள்ளபடி, உரிய காப்பீட்டு மானியம்  தரப்பட வேண்டும்.

கால்நடைகளின் சந்தை விலையை நிர்ணயித்தல்
சந்தையின் அதிக பட்ச விலைக்கு, காப்பீடு அளிக்கப்படும். இதனை பயனாளி, அங்கீகரிக்கப்பட்ட கால்நடை மருத்துவர் மற்றும் காப்பீட்டு முகவர் ஆகிய மூவரும் சேர்ந்து நிர்ணயம் செய்வர்.

காப்பீடு அளிக்கப்பட்ட கால்நடையை அடையாளம் காணுதல்
காப்பீட்டை கோரும் போது, கால்நடையை சரியாக அடையாளம் காண வேண்டும்.  இதனால் காது டேக் இடுவது, சரியாக இருக்க வேண்டும்.  வழக்கமான முறையில் காதில் டேக் இடுதல் அல்லது மைக்ரோசிப் இடுதல் ஆகியவற்றில் ஒன்றை காப்பீடு திட்டத்தை எடுக்கும் போது செய்ய வேண்டும்.   இதற்கான செலவை காப்பீட்டு  கழகங்கள்  ஏற்றுக்கொள்ள வேண்டும்.   இவற்றை பராமரிப்பது பயனாளியின கடமையாகும்.  இதன் தரம் மற்றும் விதம் காப்பீட்டு கழகம் மற்றும் பயனாளி இருவராலும் ஒத்துக்கொள்ள கூடியதாக இருக்க வேண்டும்.

காப்பீட்டு காலத்தில் சொந்தக்காரர் மாறுதல்
காப்பீட்டு காலத்தில் கால்நடைகளை விற்றாலோ அல்லது வேறு ஒருவரிடம் கொடுத்தாலோ பயனாளியின் அங்கீகாரம் புதிய சொந்தகாரருக்கு மாற்றப்பட வேண்டும். எனவே, காப்பீட்டு கழகத்தில் காப்பீட்டுக்கு நுழையும்போதே இதற்கான விதிமுறைகளை தீர்வு செய்து கொள்ள வேண்டும்.

காப்பீட்டு காலத்தில் சொந்தக்காரர் மாறுதல்
இழப்பீடு தரும் சூழல் நேர்ந்தால், காப்பீடு செய்யப்பட்ட தொகையை, தேவையான ஆவணங்கள் அளித்த 15 நாட்களுக்குள் கட்டாயம் அளிக்க வேண்டும். காப்பீட்டு நிறுவனத்துடனான முதல் தகவல் அறிக்கை, காப்பீட்டு பாலிசி ஆவணம், இழப்பீடு கோரும் படிவம் மற்றும் இறந்த கால்நடையின் பிரேதப் பரிசோதன அறிக்கை ஆகிய நான்கு ஆவணங்களின் அடிப்படையிலேயே, காப்பீட்டு நிறுவனம் இழப்பீட்டுத் தொகையை வழங்கலாம். கால்நடைகளை காப்பீடு செய்யும் போதே காப்பீட்டு கழகம், காப்பீட்டை கோருவதற்கான சரியான வழிமுறைகளையும், என்னென்ன சான்றுகள் வேண்டும் என்றும், இவைகளை பயனாளிகளுக்கு பாலிசி எடுக்கும் போதே வழங்கவும், செய்ய வேண்டும்.

இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கின்றேன்.

Saturday, December 25, 2010

சௌந்தர்யலஹரி

ஆதி சங்கரர் பரமேஸ்வரனின் அவதாரம். மௌன நிலையில் இருக்கும் dhakshinaa மூர்த்தி தான் ஷங்கரர் உருவில் வேதங்களுக்கும் உபநிடங்களுக்கும் விளக்க உரை, ஸ்தோத்திரங்கள், வrதம் எல்லாம் பண்ணினார்.
ஆசார்யாளை ஈஸ்வரன் அம்பாள் இரண்டு பேரும் சேர்ந்த அவதாரம் என்று சொல்லவேண்டும். காரியம் இல்லாத பிரம்மம் சிவன். தக்ஷிணா மூர்த்தி ரூபத்தில் உள்ளே அடக்கிக் கொண்டிருந்த சித் சக்தியான அம்பாள் சங்கரர் உருவில் வெளியே ஆவிர்பவித்து இருக்கின்றாள். மாதா, பிதா, குரு என்று சொல்லுகின்றோம். ஜெகன் மாதாவும் ஜெகத் பிதாவும் சேர்ந்து இப்படி ஜெகத் குருவாக அவதரித்து இருக்கின்றார்.
இந்த உலகில் அனைத்தையும் நடத்தும் ஷக்தி பரப்ரஹ்மம். நிர்குனமான அறிவிற்கும் அப்பாற்பட்ட பரப்ரம்மத்தை உபாசிக்க முடியாதவர்கள் அதன் சக்தி இடம் மனதி பக்தி மார்கத்தில் திருப்பிவிட்டால் ஆத்மா ஸ்வரூபத்தை பற்றிய ஞ்யானம் பெற முடிகிறது. இதை அனுசரித்து பகவத் பாதாள் பக்தி மார்கத்தை ஞ்யான மார்கத்திற்கு பூர்வாங்கமாக வைத்து போஷித்தார். பாரதம் முழுதும் புண்ணிய ஸ்தலங்களுக்கு பாத யாத்திரை செய்து அங்கங்கே யந்திரங்களை ஸ்தாபித்தார். ஆலய பூஜா கிராமங்களை ஏற்படுத்தி கொடுத்தார்.
'சௌந்தர்யா லஹரி'  ஆச்சார்யாரின் ஸ்ருஷ்டிகளில் உதித்த உன்னதமான பக்தி இலக்கிய காவியம். பகவத் பாதாளின் பிரதீபா சக்தியை காட்டும் சிதரமான சிருஷ்டி சௌந்தர்ய லஹரி தான். இந்த காவியம் சிகரினி என்னும் மீட்டரில் அமைந்துள்ளது.
சங்கரர் கைலாயம் சென்று பார்வதி பரமேஸ்வரனை தரிசித்தார் அப்போது ஈஸ்வரன் அவரிடம் ஐந்து ஸ்படிக லிங்கங்களையும் ஒரு சுவடி கட்டையும் குடுத்தார். சுவடியில் அம்பாளை பற்றிய நூறு ஸ்லோகங்கள் இருந்தன. பஞ்ச லிங்கங்கள் அரூப்பமான ஈஸ்வரன் அம்சங்கள். மந்த்ரமயமான ஸ்லோகங்கள் நூறும் அம்பாள் ஸ்வரூபம். ஷங்கரர் ஈஸ்வரனின் அவதாரம். கொடுத்தவர் (ஈஸ்வரர்) வாங்கிக்கொண்டவர் சங்கரர் (ஈஸ்வரர்) வாங்கிக்கொண்ட பொருள் (அம்பாள்) ஸ்லோகங்கள் எல்லாமே ஒன்று தான். இதிலே அத்வைதம் த்வைதம் இரண்டும் கலந்து விடுகின்றன. பஞ்ச லிங்கங்களையும் ஸ்தோத்ர சுவடியையும் பெற்று கொண்ட சங்கரரை நந்திகேஸ்வரர் வழி மறித்து அவர் கையில் இருந்த சுவடியை பிடித்து இழுத்தார். ஐம்பத்தி ஒன்பது ஸ்லோகங்களை நந்திகேஸ்வரர் தன்வச படிதிகொண்டார். இழந்த ஐம்பத்தி ஒன்ட்பது ஸ்லோகங்களையும் கையில் இருக்கும் நாப்பத்தி ஒரு ஸ்லோகங்களை சேர்த்து பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே அம்பாளின் ஆக்ன்யை போலும். கடல் மடை திறந்தது போல் ஷங்கரர் அம்பிகையை கேசாதி பாதமாக வர்ணித்து பாடி நூறு ச்லோகனகளையிம் பூர்த்தி பண்ணி விட்டார்.
நாம் அம்பிகையிடம் நீங்காத நிஜ பக்தி கொள்ள வேண்டும் என்ற ஒரே பலனை உத்தேசித்து சௌந்தர்ய லஹரி யை பாராயணம் செய்தாலே போதும். அவரவர் அனுபாவம் பக்குவம் படிப்பு பண்பு வாழ்கை நிலை ஆகியவற்றை பொறுத்து ச்லோகங்களுக்கு ஏராளமான உள் அர்த்தங்கள் தோன்றும்.

கேன்சர்

கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்வோம்...

நீண்ட காலமாக புற்று நோய்க்கு(CANCER) கீமொதெரபீ (CHEMOTHERAPY) சிகிச்சை மட்டுமே உள்ளது என்பதை மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ்(JOHNS
HOPKINS) சொல்கிறார். இங்கே உங்களின் பார்வைக்காக ஆங்கிலத்திலுருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்துள்ளேன்.

கேன்சர் பற்றி ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ் சொல்வதை கவனியுங்கள்:

1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண டெஸ்டில் தெரிய வராது, அவை சில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும். கேன்சர் சிகிச்சைக்குப் பின், டாக்டர் நோயாளியின் உடம்பில் கேன்சர் இல்லை என்று சொன்னால், இதற்க்கு உண்மையான அர்த்தம் சோதனையால் அந்த உடம்பில் உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்று
மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

2) ஒரு மனிதனின் வாழ்நாளில் 6 முதல் 10 க்கு மேற்பட்ட முறை கேன்சருக்கான செல் உருவாகிறது.

3) ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி (immune system) வலுவாக இருக்கும்போது கேன்சருக்கான செல் அழிக்கப்பட்டு, பெருக்கம் அடைவதற்கான வாய்ப்பும் தடுக்கப்பட்டு, டயுமர் (tumors) ஏற்படுவதற்கான வாய்ப்பும் தடுக்கப்படுகிறது.

4) ஒருவருக்கு கேன்சர் இருக்கிறது என்றால் அவருக்கு பலவிதமான சத்து குறைபாடு (nutritional
deficiencies) உள்ளதாக அர்த்தமாகிறது. இதற்கு மரபு, சுற்றுச்சூழல், உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணிகளாகிறது.

5) சிறப்பான உணவு கட்டுப்பாட்டின் மூலம் நாம் இந்த ஊட்ட சத்து குறைப்பாட்டை நீக்கலாம். தேவையான சத்துள்ள உணவின் மூலமாக நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

6) கீமொதெரபீ சிகிச்சை வேகமாக வளர்ந்து வரும் கேன்சர் செல்களை மட்டுமல்லாமல், எலும்பு, இரைப்பை போன்றவற்றில் வளரும் ஆரோக்கியமான செல்களையும் அழித்து விடுகிறது. மேலும் குடல், கிட்னி, இதயம், மூச்சுக்குழல் போன்ற பல உறுப்புகளையும் பாதிக்கிறது

7) கேன்சர் செல்லை அழிக்கும் கதிர் வீச்சானது (Radiation), ஆரோக்கியமான செல்கள், உறுப்புகள், திசுக்கள் போன்றவற்றை எரித்தும், வடுக்கள் ஏற்படுத்தியும் அழிக்கிறது.

8) ஆரம்பகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியின் (tumor) அளவைக் குறைக்க செய்கிறது. எனினும் நீண்டகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியினை அழிக்க பெரும்பாலும் உதவுவதில்லை.

9) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் உடம்பில் வளரும் நச்சு மூலம் நோய் எதிர்ப்பு சக்தியானது அதற்க்கு ஏற்றார் போல் சமரசம் செய்து கொள்ளும் அல்லது அழிக்கப் பட்துவிடும். இதனால் மனிதனுக்கு பலவிதமான பிரச்சனைகளும், நோய்களும் ஏற்படும்.

10) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் கேன்சர் செல்கள் எதிர்ப்பு சக்திப் பெற்று நாளடைவில் அழிக்க முடியாமல் போய்விடுகிறது. அறுவை சிகிச்சையும் கேன்சர் செல்கள் மற்ற இடங்களில் பரவ ஒரு காரணமாகி விடுகிறது.

11) கேன்சரை எதிர்த்துப் போராட சிறந்த வழியானது, கேன்சர் செல்கள் பெருக்கம் ஆகக் கூடிய உணவுகளை நாம் உண்ணாமல் தவிர்ப்பதே ஆகும்.

12) இறைச்சியில் உள்ள புரதமானது ஜீரணிக்க கடினமாகவும், ஜீரணமாக அதிக நேரமும் எடுத்துக்கொள்கிறது. மேலும் ஜீரணமாக அதிக செரிமான நொதித் தேவைப்படுகிறது. ஜீரணமாகாத இறைச்சியானது குடலில் தங்கி அழுகி, மெதுவாக நஞ்சாகிவிடுகிறது.

13) கேன்சர் செல்லின் சுவரானது கடினமான புரதத்தால் சூழப்பட்டுள்ளது. எனவே இறைச்சி சாப்பிடுவதை தவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வதால், நொதியானது (enzymes) தனது சக்தியை கேன்சர் செல்லின் கடினமான சுவரை தாக்கி, உடலின் அழிக்கும் செல்லானது (body's own killercells) கேன்சர் செல்லை அழிக்க உதவியாகிறது.

14) IP6, Flor-ssence, Essiac, anti-oxidants, vitamins, minerals, EFAs etc, போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தி, உடலின் அழிக்கும் செல்கள் (body's own killer cells) மூலம் கேன்சர் செல்களை அழிக்க உதவி செய்கிறது. வைட்டமின் E போன்றவை உடலில் உள்ள பாதிக்கப்பட்ட, தேவையற்ற செல்களை நீக்கும் முறையை ஊக்குவிக்கிறது. (Other supplements like vitamin E are known to cause apoptosis, or programmed cell death, the body's normal method of disposing of damaged, unwanted, or unneeded cells)

15) கேன்சர் என்பது மனம் (mind), உடல் (body) மற்றும் ஆன்மாவின் (Spirit) நோயே! நேர்மறையான, ஆரோக்கியமான எண்ணங்கள் கேன்சரை எதிர்த்துப் போராடும் வல்லமையை அளிக்கிறது. கோபம், மன்னிக்கும் மனமின்மை, எதிர்மறையான எண்ணங்கள் போன்றவை மன அழுத்தத்தையும், உடலின் அமிலத்தன்மையையும் அதிகரிக்கிறது. எனவே மன்னிக்கும் குணத்தையும், அன்பு செலுத்தவும், ஆசுவாசப்படுத்திகொள்ளவும், வாழ்க்கையை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!

16) ஆக்சிஜென் மிகுந்த சூழ்நிலையில் கேன்சர் செல்லானது வளர வாய்ப்பில்லை. தினமும் உடற்பயிற்சி, ஆழ்ந்த சுவாசம் போன்றவை உடலின் செல்களுக்கு நிறைய ஆக்சிஜென் கிடைக்க உதவுகிறது. மூச்சுப் பயிற்சியானது (Oxygen therapy) உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது.


உடலில் கேன்சர் செல் வளர காரணிகள்:-

1) கேன்சர் செல்லுக்கு சர்க்கரை ஒரு நல்ல உணவு. எனவே சர்க்கரையை தவிர்ப்பது கேன்சர் செல்லுக்கு தவையான ஒரு முக்கிய உணவை நிறுத்துவது போன்றது. சர்க்கரைக்கு மாற்றாக உள்ள NutraSweet, Equal, Spoonful, etc போன்றவையும் Aspartame எனும் அமிலத்தால் தயாரிக்கப்படுவதால் இவையும் பாதிப்பானாதே! எனவே குறைந்த அளவில் தேன், மொலஸஸ், Manuka போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். Table Salt-ல் வெள்ளை நிறத்திற்க்காக கெமிக்கல் சேர்ப்பதால் இதற்கு மாற்றாக Bragg's amino or sea salt போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.


2) பால் உடலில் சளியை உற்பத்தி செய்கிறது, குறிப்பாக இரைப்பை-குடல் (gastro-intestinal) பகுதியில். சளியால் கேன்சர் செல் நன்கு வளரும். எனவே பாலுக்கு மாற்றாக இனிப்பில்லாத சோயாப் பாலை எடுத்துக் கொள்வதன் மூலம், கேன்சர் செல் பெருக்கத்தைக் குறைக்கலாம்.

3) அமிலத் தன்மையில் கேன்சர் செல் நன்கு வளரும். இறைச்சி சம்பந்தமான உணவுகள் அமிலத் தன்மை வாய்ந்தது.
எனவே மாட்டிறைச்சி, பன்றி இறைச்சிக்குப் பதிலாக மீன், குறைந்த அளவு சிக்கன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இறைச்சியானது பிராணிகளின் ஹோர்மோன், ஒட்டுண்ணிகள், ஆன்டிபயாடிக்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளது, இது மிகவும் ஆபத்தானது..

4) ஒரு சிறந்த உணவு (Diet) என்பது 80% ஃப்ரெஷ் காய்கறிகள், ஜூஸ், முழு தானியங்கள், விதைகள், பருப்புகள் மேலும் சிறிதளவு பழங்கள் உடலை நல்ல காரத் தன்மையில் வைத்திருக்கிறது. 20% சமைத்த உணவாக இருக்கலாம், பீன்சயும் சேர்த்து. ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் உயிரோட்டமுள்ள நொதிகளை அளிக்கிறது, இவை 15 நிமிடங்களில் நன்கு உறிஞ்சப்பட்டு, ஊட்ட சத்து அளித்து நல்ல செல்கள் வளர உதவுகிறது. ஆரோக்கியமான செல்கள் வளர உதவும் உயிரோட்டமுள்ள நொதிகளை பெற . ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை பச்சை காய்கறிகள் எடுத்துக் கொள்ளவும்! நொதிகள் (enzymes) 104 degrees F (40degrees C) வெப்பத்தில் அழிந்து போய் விடுகிறது.


5) டீ, காஃபீ, சாக்லெட் போன்றவற்றில் அதிககளவு காஃபீன் உள்ளதால் இவைகளை தவிர்த்து விடவும். இதற்கு மாற்றாக க்ரீன் டீ (Green Tea) எடுத்துக் கொள்ளவும்! இதில் கேன்சர் செல்களை எதிர்க்க கூடிய ஆற்றல் உள்ளது. சுத்திகரீக்கப்பட்ட நீரை மட்டுமே அருந்தவும். நச்சு மற்றும் உலோக கலவை அதிகமுள்ள குழாய் நீரை தவிர்த்து விடவும். Distilled water is acidic, avoid it.

 நம்ம உடம்புல ஆக்ஸிஜன் சரியான அளவுல இருக்கும் போது கேன்சர் அண்டாது. அதுனால உடற்பயிற்சி செய்யறதும், மூச்சுப்பயிற்சி செய்யறதும் ஆக்ஸிஜன் அளவை சரியா வச்சுக்க உதவி செய்யும். ஆக்ஸிஜன் தெரபி‍னு வந்திருக்கற புது வழியும் நல்லதுதான்னாலும் நம்ம கைவசம் வெண்ணையை வச்சிக்கிட்டு எதுக்கு அலையணும்.

யோகா செய்ங்க, நிறைய நடங்க, புது நண்பர்கள், மனசு விட்டு பேசுங்க.


அவ்ளோதான். போயே போச்செல்லாம் இல்லை. வராமலே தடுத்திடலாம் கேன்சர் நோயை. என்ன சொல்றிங்க.


சில முக்கியமான விஷயங்கள்: பெரிய நோ நோ

1. மைக்ரோ வேவ்ல பிளாஸ்டிக் பாத்திரங்கள் கண்டிப்பா வேண்டாம்

2. தண்ணீர் பாட்டிலை ஃப்ரீஸரில் வைக்க வேண்டாம்

3. பிளாஸ்டிக் பேப்பர் சுத்தி மைக்ரோவேவ் ல எதுவும் வைக்கவேண்டாம்

பிளாஸ்டிக்கு பதிலா ஓவன்க்குன்னே விக்கற பாத்திரங்கள் யூஸ்
பண்ணிக்கோங்க.

இதெல்லாம் நம்ம நல்லதுக்கு தானேங்க...

வருமுன் காப்போம்!


கேன்சரின் காரணங்கள் என்னவென்று தெளிவாக இது வரை மருத்துவர்களால் கூற முடியாவிட்டாலும்,என்னை பொருத்தவரை கேன்சரின் பாதிப்புக்குகளுக்கு முக்கிய காரணம் விழிப்புணர்வுயின்மை என்றே சொல்லுவேன் . தொடக்கத்திலேயே கண்டுபிடித்தால் இதன் பாதிப்புகளை பெருமளவு குறைக்கலாம்,சிகிச்சையிலும்நிறைய பலன்களை பெறலாம். அதுவுமில்லாமல் நம் உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையில் கவனமாக இருப்பதன் மூலம் இந்த நோய் வருவதை தவிர்க்கலாம்.நமது கவனமின்மையால் முற்றிப்போன பிறகு கண்டுபிடித்துவிட்டு மல்லுக்கட்டும் நிலையை தவிர்த்தாலே,இந்த நோயின் கொடூரத்தை எதிர்க்கொள்ள பெருமளவு வசதியாக இருக்கும்!
அதற்கான விழுப்புணர்வையும்,அறிமுக அறிவையும் இந்த தொடர் உங்களுக்கு அளித்தால்,நான் இதை எழுதியதற்கான பலனை பெற்றதாக உணர்வேன்.

சரி சரி!! மொக்கை போட்டது போதும்,தொபுகடீர்னு மேட்டருல குதிக்கலலாமா??? இந்த கேன்சர்னா என்னபா மொதல்ல??? இரத்த புற்றுநோய்,மார்பக புற்றுநோய்,நுரையீரல் புற்றுநோய் இப்படி உடம்புல ஒரு இன்ச் விடாம எங்கிட்டு பாத்தாலும் வருது??அப்படி என்னதான் நடக்குது ஒடம்புல??? ஏன் அதை குணப்படுத்த இவ்வளவு கஷ்டமா இருக்கு??
நம்ம உடம்பு அப்படின்னு எடுத்துக்கிட்டா என்னன்ன இருக்கு?? கை,காலு,கண்ணு,மூக்கு....உடம்புக்குள்ளாரன்னு பாத்தா இதயம்,மூளை,நுரையீரல்,சிறுநீரகம் அப்படின்னு எத்தனையோ உறுப்புகளை பார்க்கிறோம்.ஆனா அடிப்படையா நம்ம உடம்புல எல்லாமே உயிரணுக்களால(cells) ஆனது. எலும்பு சதை ரத்தம் எல்லாமே கடைசியா பாத்தீங்கன்ன உயிரணுக்களால ஆனதுதான். ஆனா ஒவ்வொறு உறுப்புக்கும் உயிரணுக்கள் வித்தியாசமா இருக்கும்.அதாவது நுரையீரல்ல இருக்கற உயிரணுக்கள் மூளையில இருக்கற உயிரணுக்களை விட சற்றே மாறுபட்டு இருக்கும்.இந்த உயிரணுக்கள் பல கோடி எண்ணிக்கைல நம்ம உடம்பு முழுக்க இருக்கு.இவைகள் தினமும் நம் உடலில் உருவாகிக்கொண்டும் அழிந்துக்கொண்டும் இருக்கின்றன்.ஒவ்வொரு உயிரணுவும் இப்படி தான் இருக்கனும் அப்படின்னு ஒரு நியதி இருக்கு.அது நமது மரபணுவை(Genes) பொருத்து அமையும்.அதுக்கு ஏத்தா மாதிரி தான் ஒவ்வொரு உயிரணுவும் உருவாகிட்டு இருக்கும்.


இது மாதிரி ஒழுங்கா உருவாகிட்டு அழிஞ்சிகிட்டு இருந்தா பிரச்சினையே இல்ல. ஆனா சில சமயம் இந்த மாதிரி நியதியை விட்டு சில உயிரணுக்கள் வித்தியாசமாக உருவாக ஆரம்பிக்கும்.அது மட்டும் இல்லாமல் தன்னை போலவே வித்தியாசமான உயிரணுக்களை அசுர வேகத்தில் உருவாக்கித்தள்ளிக்கொண்டே போகும்.
அட!!அது பாட்டுக்கு உருவாக்கிட்டு போகட்டும்,அதனால என்ன?? இதனால லேசா அங்கிட்டு இங்கிட்டு வீங்கி வேணா போகலாம்,இதனால உயிருக்கு ஆபத்து வர அளவுக்கு அப்படி என்ன பிரச்சினை அப்படின்னு கேக்கறீங்களா???

இந்த வகை உயிரணுக்கள் மேலும் தன்னை போன்ற மற்ற உயிரணுக்களை உற்பத்தி செய்து தள்ளிக்கொண்டு இருக்கும் என்று போன பகுதியில் குறிப்பிட்டிருந்தேன்.இருந்தா இருந்துட்டு போகட்டும்,அதனால என்ன,இதனால என்ன பிரச்சினை அப்படின்னு நீங்க கேக்கறீங்க!!

என்ன மாதிரி நீங்களும் பாசக்கார பயலுவ தானே,அதுவும் வந்தாரை வாழ வைக்கும் இனத்துல வேற பொறந்துட்டோம், அதான் என்னை மாதிரி உங்களுக்கும் இந்த கேள்வி தோனுது.ஆனா பாருங்க இந்த வித்தியாசமான உயிரணுக்கள் சும்மா இருக்கறது இல்லை ,சாதுவாக தான் உண்டு தன் கடமை உண்டுன்னு சுத்திட்டு இருக்கற மத்த உயிரணுக்களை இது தாக்கி அழிக்க ஆரம்பிக்குது,அதுமில்லாமல் உடலில் தன்னுடைய இடத்தை விட்டு வேறு ஒரு உறுப்புக்கு ஏல்லாம் போக ஆரம்பிக்குது.ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு விதமான உயிரணுக்கள் உண்டு அப்படின்னு போன பகுதியில சொல்லியிருந்தேன் ஞாபகம் இருக்கா?? இது பாட்டுக்கு இஷ்டத்துக்கு சுத்திக்கிட்டு இருந்தா என்னத்துக்கு ஆகறது?? அதாவது ஒரு டாக்டரு மருத்துவமனைக்கு போய் வேலை செய்யனும்,என்னை மாதிரி மென்பொருள் வல்லுனர்கள் ஆபீசுக்கு போய் வேலை(?!) செய்யனும். எங்களை ஏதாச்சும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி ஆணி பிடுங்க சொன்னா காமெடி தான்!!

ஒரு 100 பேரு சுறுசுறுப்பா சீரா வேலை செய்யும் ஒரு தொழிற்சாலையை கற்பனை செய்துக்கொள்ளுங்கள்,அதில் ஒரு பத்து தொழிலாளிகள் வேலையும் செய்யாமல்,மற்ற தொழிலாளிகளையும் தன்னை போல மாற்றிக்கொண்டு தங்கள் வேலை செய்யும் வட்டத்தை விட்டு மத்த வட்டங்களுக்கும் சென்று பிரச்சினை செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்,அப்பொழுது தொழிற்சாலை என்னத்துக்கு ஆகறது?? சீக்கிரமே திவாலாகி போக வேண்டியதுதான். இப்படிப்பட்ட நிலைமை தான் கேன்சரால் பாதிக்கப்பட்ட ஒருவரின் உடலுக்கும் ஏற்படுகிறது.
ஒழுங்கா சொன்ன பேச்சை கேட்டுக்கிட்டு இருக்கற உயிரணுக்களில் எப்படி திடீர்னு இந்த கேன்சர் உயிரணுக்ளாக உருவாக ஆரம்பிக்கின்றன????

ஒழுங்காக இருக்கும் உயிரணுக்களில் இந்த மாதிரியான மாறுந்தன்மை(mutation) வருவதற்கு ஒரு வித நச்சுப்பொருளே காரணம்.இந்த நச்சுப்பொருள் உருவாக்கும் காரணிகளை carcinogens என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.புகையிலை,கதிர்வீச்சு மற்றும் நச்சுத்தன்மை கொண்ட வேதியியல் பொருட்கள்,சில கொடிய தொற்றுநோய் கிறுமிகள் போன்றவற்றை இந்த carcinogens பட்டியலில் சேர்க்கலாம். இந்த நச்சுப்பொருள்களை ஒரே அளவு உட்கொண்ட இரு வேறு நபர்களில் ஒருவருக்கு கேன்சர் வரலாம்,ஒருவருக்கு வராமல் போகலாம்.அது அவரவரின் மரபணு,உடல் நிலை,வயது,உடம்பில் உள்ள DNA-க்களுடன் இந்த carcinogen-களின் செயல்பாடு இப்படி பல விஷயங்களை பொருத்தது. புகையிலை ஒரு முக்கியமான carcinogen என்பதால் தான் புகை பிடிப்பது,புகையிலை போடுவது ஆகியவற்றை நிறுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுருத்துவதற்கு முக்கியமான காரணம்.(சாம் தாத்தா,இது உங்களுக்கு தான்!! :-))

இப்படியாக உருமாறும் உயிரணுக்களால் மற்ற உயிரனுக்களிடம் பரவி கேன்சர் ஒருவரின் உடலை அரிக்கத்தொடங்கி விடுகிறது.உடலில் உள்ள எந்த பகுதியில் உள்ள உறுப்பிலும் இந்த கேன்சர் வரலாம் என்றாலும் முக்கியமாக மக்களை பாதிக்கும் சில கேன்சர் வகைகளை கீழே பார்க்கலாம்.

1.)Prostate Cancer (prostate என்பதற்கு தமிழ்ல என்ன வார்த்தைனு தெரியல மக்கா,இது ஆண்களிடையே முதன்மையாக காணப்படும் புற்றுநோய்)
2.)நுரையீரல் புற்றுநோய்
3.)Colorectal cancer(Colon-க்கு தமிழ்ல என்னபா??அங்கிட்டு வர புற்றுநோயாம் இது)
4.)சிறுநீரகப்பை புற்றுநோய்(Bladder cancer)
5.)மார்பகப்புற்றுநோய் (இது பெண்களிடம் முதன்மையாக காணப்படும் புற்றுநோய்)
6.)இரத்தப்புற்றுநோய்(Leukemia or blood cancer,இது இளைஞர்களிடையே அதிகமாக காணப்படும் புற்றுநோய்)
7.)சிறுநீரக புற்றுநோய் (nephroblastoma /wilms tumour) மற்றும் நரம்பு மண்டல புற்றுநோய்(neuroblastoma-CNS central Nervous system tumour) - இது குழந்தைகள் இடையே அதிகமாக தோன்றும் புற்றுநோய்
8.)Cervical cancer (இது பெண்களிடையே அதிகமாக தோன்றும் மற்றுமொரு புற்றுநோய்)


மேற்குறிப்பிட்ட வகைகள் எல்லாம் பரவலாக காணப்படும் புற்றுநோய்கள்,ஆனால் உடம்பில் பல பாகங்களிலும் இந்த புற்றுநோய்கள் வர வாய்ப்புண்டு. வயதாக ஆகத்தான் கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றாலும் இந்த நோய் எல்லா வயதினருக்கும் வரலாம்.கருவில் உள்ள சிசுவுக்கு கூட இந்த நோய் வரலாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
உலக அளவில் உயிரிழப்புகளில் 13 சதவிகிதம் கேன்சரினால் ஏற்படுகிறது.2007-இல் மட்டும் உலகளவில் 76 லட்சம் பேர் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் 25% சாவுகள் கேன்சரால் ஏற்படுகிறது. அதாவது நாலு பேரில் ஒருவர் கேன்சரால் உயிரிழக்கிறார்....
சரி சரி!!
போதும் நிறுத்து!! நீ என்ன சொல்ல வரேன்னு தெரியுது!! இப்போ இந்த நோய்க்கு எப்படி சிகிச்சை தருவாங்க?? இந்த நோயை முழுமையா குணப்படுத்த முடியுமா??
அப்படின்னு கேக்கறீங்களா??


இது நோயை குணப்படுத்துவதுக்கு கொஞ்சம் மெனக்கெடனும் மக்களே!!
நோயின் தீவிரம்,இதை எவ்வளவு சீக்கிரம் கண்டுபிக்கப்பட்டது,நோயாளியின் வயது,சிகிச்சையை தாங்கிக்கொள்ளும் திறன் போன்ற பல விஷயங்களை பொருத்து இந்த நோய்க்கான சிகிச்சையும்,குணப்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகளும் மாறு படும்!! நீங்க யோசிச்சிட்டிருக்கறது போல எவ்வளவு சீக்கிரம் கண்டு பிடிக்கறோமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது!! கண்டுபிடிச்ச அப்புறம் நோயை குணப்படுத்த பல வழிமுறைகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் உபயோகப்படுத்துவாங்க ,ஆனா பரவலான சில வழிமுறைகளை இப்போ பாக்கலாம்.

கீமோதெரபி:புற்றுநோய் உயிரணுக்களை அழிக்கவல்ல மருந்துகளை மாத்திரை வடிவில் கொடுத்து குணப்படுத்துவது தான் கீமோதெரபி எனப்படும்.குறிப்பாக உயிரணுக்களின் பல்கிப்பெரிகும் தன்மையை குலைப்பதே இந்த மருந்துகளின் முக்கிய பணி.மற்ற சிகிச்சை முறைகளை போல இந்த முறையிலும் புற்றுநோய் உயிரணுக்களுடன் சேர்த்து நல்ல உயிரணுக்களும் பாதிக்கப்படும்,ஆனால் சிகிச்சை முடிந்த பின் புற்றுநோய் அல்லாத உயிரணுக்கள்் திரும்பவும் பழைய நிலைக்கு திரும்பி விடும்.
இரத்தப்புற்றுநோயை பொருத்த வரை கீமோதெரபியின் வீரியம் அதிகமாகும்பொழுது புற்றுநோய் உயிரணுக்களோடு சேர்த்து ஆரோக்கியமான உயிரணுக்களும் பெருமளவில் அழிந்துபோய் உடம்பில் எதிர்ப்பு சக்தியே முழுவதுமாக முடங்கிப்போகலாம்.அந்த மாதிரியான சமயத்தில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைசிகிச்சை (Bone marrow transplant) எனப்படும் ஒரு சிகிச்சை அளிக்கப்படும். ஒருவரின் உடலில் ரத்தத்தின் உற்பத்தி எலும்பு மஜ்ஜையில் இருந்துதான் உருவாகிறது என்பதால் அதை புதிதாக பொருத்துவதன் மூலம் அழிந்துப்போன இரத்த உயிரணுக்களுக்கு பதிலாக புதிதான உயிரணுக்கள் உருவாக்கப்படுகின்றன.

அறுவைசிகிச்சை:உடலில் ஒரு பகுதியில் கேன்சர் உருவாகியிருக்கும் போது அந்த பகுதியை மட்டும் அறுவைசிகிச்சை மூலமாக அகற்றுவது .இது புற்றுநோய் எந்த அளவு பரவியுள்ளது என்பதை பொருத்தே சாத்தியப்படும். நான் முன்பே கூறியிருந்தது போல புற்றுநோய் உயிரணுக்கள் கண்ட மேனிக்கு இங்கிட்டும் அங்கிட்டும் சுத்த ஆரம்பிக்கும் என்பதால் அவை அப்படி பரவும் முன்னரே அறுவைசிகிச்சை செய்தால் உண்டு. கட்டியை வெட்டி எடுத்த பிறகும் சில உயிரணுக்கள் ஒளிந்து கொண்டிருந்து பின்னொரு காலத்தில் தலை தூக்கலாம்.ஆனால் இந்த பிரச்சினை மற்ற சிகிச்சை முறையிலும் உண்டு.

கதிர்வீச்சு சிகிச்சை:உடலில் புற்றுநோய் பாதிக்கப்பட்ட பகுதியை மட்டும் கதிரிவீச்சினை செலுத்தி பாதிக்கப்பட்ட உயிரணுக்களை கொல்வது இந்த வகையான சிகிச்சையில் செய்யப்படும் முறை.இப்படி கதிர்வீச்சு செலுத்தும்போது பாதிக்கப்பட்ட உயிரணுக்களோடு நல்ல உயிரணுக்களும் சேர்ந்தே தான் அழிந்து போகும் ஆனால் பாதிக்கப்படாத உயிரணுக்கள் திரும்பவும் தானே உருவாகிக்கொள்ளும். இந்த வகை சிகிச்சையில் கடுமையான பக்கவிளைவுகளும் உண்டு.

கேன்சரின் விளைவுகளுக்கான சிகிச்சை:எல்லாவிதமான சிகிச்சையும் பலனளிக்காத போது,நோயை குணப்படுத்துவதற்கான நிலையை தாண்டிய பின், நோயினால் நோயாளிக்கு உண்டாகும் பாதிப்புகளை குறைக்க சிகிச்சை அளிக்கப்படும்.இந்த சிகிச்சைக்கு Symptom control அல்லது Palliative treatment என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.பாதிக்கப்பட்டவருக்கு உண்டாகும் உடல்சோர்வு,வலி ஆகியவற்றை கட்டுப்படுத்த இந்த சிகிச்சையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

மேற்கண்ட முறைகள் தவிர வேறூ சிகிச்சை முறைகளும் கையாளப்படலாம்,ஆனால் முக்கியமான முறைகளை மற்றும் மேலே குறிப்பிட்டுள்ளேன்.
சரிபா!!நீ சொல்லுறது புரியுது! இந்த நோய் வந்துருச்சான்னு எப்படி தெரிஞ்சுக்கறதுன்னு கேக்கறீங்களா??
திரும்பவும்,கேன்சரில் பல வகைகள் இருப்பதால் எல்லாவற்றிற்கும் ஒரே அறிகுறி கிடையாது,குத்துமதிப்பா சில அறிகுறிகளை கீழே காணலாம்.

அரிப்பு,சிறு கட்டிகள்இருமல்,எலும்பு முறிவு,ரத்தக்கசிவு போன்றவை.பாதிக்கப்பட்ட இடத்தில் வலி,ஆனால் புற்றுந்நோயின் ஆரம்ப காலத்தில் வலி அவ்வளவாக இருக்காது,நோய் சற்றே முற்றிய பின் தான் இந்த வலி தோன்ற ஆரம்பிக்கும்.உடல் எடை இழப்பு,உடல் சோர்வு,பசியின்மை ஆகியவையும் இந்த நோய்க்கான அறிகுறிகள்.
மேலே குறிப்பிடப்பட்ட அறிகுறிகள் கேன்சருக்கு மற்றுமின்றி பிற்பல உடல் உபாதைகளுக்கும் வரலாம் என்பதை மறக்க வேண்டாம்.

இப்படி அறிகுறிகள் காட்டிக்கொடுத்தாலும் நோய் இருப்பதை அறிய ரத்தப்பரிசோதனை,Xray,CT scan மற்றும் Endoscopy ஆகிய முறைகளை பயன்படுத்துவார்கள்.இதன் மூலம் ஆறிந்துக்கொண்ட பின் பாதிக்கப்பட்ட உறுப்பிள் இருந்து மாதிரி திச்சுக்களை உடலில் இருந்து வெட்டியெடுத்து ஆய்வு செய்து உறுதிப்படுத்துகிறார்கள்
தாய்மார்கள் மார்பகப்புற்றுநோய்க்கு சுய பரிசோதனை செய்துக்கொள்வதற்கான வழிமுறையை இந்த சுட்டியில் சென்று பார்க்கலாம் .



இந்த பகுதியில இந்த நோயிடம் இருந்து தப்பிக்க நாம என்னெவெல்லாம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

புகைப்பழக்கம் மற்றும் குடிப்பழக்கத்தை விட்டுவிடுங்கள்:
கேன்சரை தவிர்க்கவேண்டும் என்றால் கேன்சருக்கு காரணமான carcinogens-களை முடிந்த அளவுக்கு தவிர்ப்பது தான் புத்திசாலித்தனம்.அப்படி நாம் சிந்திக்கும்போது நமது நினைவில் முதலில் வரும் பொருட்கள் இந்த குடிப்பழக்கம் மற்றும் புகை பழக்கமும் தான். நுறையீரல் புற்றுநோய் வந்த ஆண்களின் 90% பேர் புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களாக இருக்கிறார்கள் என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. புகைப்பழக்கம் மட்டுமல்லாது குட்கா,பன்மசாலா போன்ற புகையிலை சம்பந்தமான மற்ற பழக்கங்களையும் அறவே நிறுத்துவது இந்த நோயை தவிர்ப்பதில் பெரிய பங்கு வகிக்கின்றன.

உணவப்பழக்கம்:
ஒழுங்கா வேளைக்கு சாப்பிடறது நாம நிறைய பேர் அலட்சியமா எடுத்துக்கற ஒரு விஷயம்.ஆனா நாம எளிமையா கையாளக்கூடிய இந்த பழக்கத்தினாலேயே பல நோய்கள் அண்டாம நிம்மதியா ஆரோக்கியத்தோட வாழலாம்.உணவில் கனி காய்கறிகளை சேர்த்துக்கொள்வது,நொருக்கு தீனியை குறைத்து ஒழுங்கான உணவு வகைகளை சாப்பிடுவது,நிறைய தண்ணீர் குடிப்பது போன்றவை நமது உணவுமுறையில் நாம் கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டிய பழக்கங்கள்.உணவுமுறை பற்றி ஷாலினி அவர்கள் போட்டிருக்கற பதிவையும் அதில் அவங்க கொடுத்திருக்கற சுட்டிகளையும் வேணா ஒரு சுத்து பாத்துட்டு வந்திருங்க! :-)

உடல் பருமன்:
மாறி வரும் நமது வாழ்க்கை சூழலில் நாம் அன்றாடம் இங்கும் அங்கும் நடந்து போவதே மிகவும் குறைந்து விட்டது.கடைசியாக எப்பொழுது ஓடினோம் என்றே நினவில் இல்லை.அதுவும் அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழ்பவர்கள் நிலை இன்னும் மோசம்.வீட்டிலிருந்து கார்,காரிலிருந்து அலுவலகம்,அலுவலகத்தில் இருந்து கார் என்று எண்ணி ஒரு நாளுக்கு 100 - 200 அடிகளுக்கு மேல நடப்பதே இல்லை.இதனால் உடல் பருமன் அதிகமாக நம் உடல் வாகு மோசமாவதோடு புற்றுநோய் போன்ற வியாதிகளுக்கும் உங்கள் உடல் தோரணம் கட்டி வரவேற்க ஆரம்பித்து விடுகிறது.
வளர்ந்த நாடுகளில் உள்ளது போல் உடற்பயிற்சி பற்றி அவ்வளவாக நம் நாட்டில் விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை. ஜிம் என்றாலே ஏதோ ஆர்னால்டு ஷிவாஜிநகர்(:P) போன்ற பயில்வான்கள் மட்டுமே செல்லும் இடம் என்ற எண்ணம் இன்னும் பலர் நெஞ்சில் உறுதியாக உள்ளது. உடற்பயிற்சி கூடம் செல்ல முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் நடைபழக்கமாவது தொடர்ந்து செய்யும் பழக்கத்தை உருவாக்கிக்கொண்டால் நீரிழிவில் இருந்து புற்றுநோய் வரைக்கும் பல நோய்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டலாம்.
கூடவே தொப்பையையும் குறைக்கலாம்!!

மருத்துவ பரிசோதனை:
முறையாக மருத்துவ பரிசோதனை செய்துக்கொள்வது இந்த நோயை சீக்கிரமே அறிந்துக்கொள்ள பெருமளவு உதவும். இரண்டாம் பகுதியின் பின்னூட்டத்தை பார்த்தால் இந்த நோய்க்கு அவ்வளவாக பெரிய அறிகுறிகள் இல்லாததால் இதை சீக்கிரமே அறிய முடிவதில்லை என்று பலர் கூறியிருப்பதை பார்க்கலாம்.இதனால் நாமே சென்று அவ்வப்போது பரிசோதனை செய்துக்கொள்வது மிக முக்கியமான ஒன்றாகிவிடுகிறது.போன பதிவின் பின்னூட்டத்தில்,் நியூசீலாந்தில் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை பெண்கள் கட்டாயமாக மார்பகப்புற்று நோய்க்கு பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் ,ஐம்பது வயது மேற்பட்டோருக்கு இந்த பரிசோதனையின் செலவை அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும் என்றும துளசி டீச்சர் தெரிவித்தார்.பரிசோதனை மையத்திற்கு போகாவிட்டாலும் சென்ற பதிவில் குறிப்பிட்டது போல் பெண்கள் தாமாகவே பரிசோதனைகளை செய்துக்கொள்வது இந்த நோயை சீக்கிரம் கண்டுபிடிக்க உதவும்.

தொடர்ந்து வரும் அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்:
ஒருவருக்கு தொடர்ந்து இருமல் ,பேதி,எடை குறைவு,காரணமில்லாமல் உடல் சோர்வு போன்றவை இருந்தால் அலட்சியப்படுத்தாமல் இருப்பது நன்று.எனக்கு தெரிந்த ஒரு நண்டரின் உறவினர் ஒருவர் மார்பகப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். அவர் முதலில் தன் உடலில் கொஞ்சம் வீக்கம் இருப்பதை தெரிவித்தபோது ஏதாவது கட்டியாக இருக்கும் என்று தட்டிக்கழித்து விட்டார்களாம்.என்னடா ஒரே பூச்சாண்டி காட்டுகிறானே என்று நினைக்க வேண்டாம்.நம்மிடையே விழிப்புணர்வு இல்லாததால் தவிர்க்கக்கூடிய பல வலிகளை நாம் தேவையில்லாமல் வரவைத்துக்கொண்டிருக்கிறோம் என்று தெளிவுபடுத்தவே இதை கூறுகிறேன்.
இதற்காக நாளையே ஏதாவது தும்மல் இருமல் வந்தால் புற்றுநோயாக இருக்குமோ என்று பயந்து விடவேண்டும் என்று அர்த்தமில்லை.ஆனால் நாளைக்கே இந்த நோய் வந்தாலும் கூட தைரியமாக போராடவும்,அதை தவிர்க்ககூடிய வழிமுறைகளை தெளிவாக தெரிந்துக்கொண்டு சந்தோஷமாக வாழவும்தான் இந்த பதிவு.




ஒரு செய்தி :


லண்டன் : சுவாசத்தின் மூலம் கேன்சர் நோய் இருப்பதை கண்டறிய முடியும் என்ற வியக்கத்தக்க செய்தியை ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். நாம் வெளியிடம் மூச்சு காற்றை சோதிப்பதால், நுரையீரல், மார்பகம் மற்றும் குடலில் ஏற்படும் கேன்சர் நோயை கண்டறியலாம். மிகவும் சுலபமான மற்றும் செலவு குறைவான முறையில் இந்த பரிசோதனையை மேற்கொள்ளலாம். 177 தன்னார்வ தொண்டர்கள் மற்றும் 20 முதல் 75 வயதுடைய கேன்சர் பாதித்த நோயாளிகளின் மூச்சு காற்றை  பரிசோதனை செய்ததில் கேன்சர் நோய் தாக்கியவர்களின் காற்றில் நோய் கிருமிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முறைப்படி ஆரோக்கியமான சுவாசத்திற்கும், நோய்பாதித்தவர்களின் சுவாத்தையும் எளிதில் அறியமுடியும். சுவாச காற்றில் சிறதளவு வேதிபொருட்களை சேர்த்து கம்யூட்டரில் ஸ்கேன் செய்தால், எவ்வகை கேன்சர் நோய்க்கு நோயாளி ஆளாகி உள்ளார் என அறியமுடியும் என பேராசிரியர் ஆப்ரகாம் குடென் தெரிவித்துள்ளார்.
 இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.